Posts

Showing posts from September, 2009

இருண்ட கண்டம் - மொழிபெயர்ப்பு

Image
தெகல்கா வலைதளத்தில் ஜோஷுவா முயிவா என்ற இந்திய கறுப்பினத்தவர் My Own Dark Continent என்ற தலைப்பில் எழுதிய‌ கட்டுரையின் மொழிபெயர்ப்பு: ######################## என் சொந்த இருண்ட கண்டம் சில நேரங்களில் இனவெறியை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும், சொல்கிறார் ஜோஷுவா முயிவா ஒரு மலையாளிக்கும், நேபாள‌ பெண்ணுக்கும் பிறந்தவள் என் தாய். அவள் என் நைஜீரியத் தந்தையை மணக்க‌, நான் பிறந்தேன். என் வாழ்க்கையின் 23 வருடங்களில் 20ஐ பெங்களூரில் கழித்திருக்கிறேன் - சகித்துக்கொள்ளக்கூடிய‌ இந்தி, கன்னடம், நேபாளி மற்றும் தமிழ் பேச முடியும்; வெந்நீரும், படுக்கையும் கேட்குமளவுக்கு மளையாளமும் தெரியும். ஆனால் ஓர் இந்தியனாக நான் தேறுவத‌ற்கு உதவிய சமூகக் குறியீடுகள் எதுவும், வெளிப்படையாக‌ நிறவேற்றுமைக் கண்ணாடி வழி நான் பார்க்கப்படுவதைத் தடுக்கவில்லை. நான் பொது ஊடக தொடர்பியல் படித்துக் கொண்டிருந்த‌, 'ஒழுக்கத்துக்கும்', நெறிகாப்புக்கும் பெயர் போன ஒரு மதிப்பு மிக்க கல்லூரியில், ஒவ்வொரு மாணவனுக்கும் வருகைக்கணக்கு, அனுமதிக்கப்பட்ட சிகை அலங்காரம் போன்றவை குறித்த விதிகள் அடங்கிய ஒரு கையேடு வழங்கப்படும். ஒருமு

படித்தது / பிடித்தது - 69

9வது உலகத் தமிழ் மாநாடு – என் கோரிக்கைகள் - ஆர். வெங்கடேஷ் நன்றி : நேசமுடன்

போர்க்களமும் திருவாசகமும் - 5

Copyright : இப்பாடல் இயக்குநர் ராஜ்மோகனின் ' போர்க்களம் ' படத்துக்காக 2005ல் எழுதப்பட்டது. வரிகள் முழுக்க முழுக்க என்னுடையவை. வேறு இடங்களில் பயன்படுத்தும் உரிமையும் என்னையே சாரும். வேறு படங்களில் பயன்படுத்த விரும்புபவர்கள் என் முறையான அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டும். ************** Situation : சூழ்நிலைகளால் கதாநாயகனும் கதாநாயகியும் பிரிக்கப்படுகிறார்கள். அப்போது பிரிவுத்துயரில் இருக்கும் இருவரையும் காட்சிப்படுத்துகையில் பின்னணியில், ஆண் குரலில் - அதாவது கதாநாயகன் பாடுவது போல் - வரும் பாடல். மான்டேஜ் சாங் - காட்சிகளும் இசையும் முக்கிய‌ம். பல்லவி : உன் கண்ணில் நீர் வழிந்தால் என்னுயிரே தீக்குளிக்கும் நினைவோடு நீயிருந்தால் நிசப்தத்தில் இசை வழியும் கணமொன்று மறந்திருந்தால் நெஞ்சுக்குள் போர் வெடிக்கும் உன்னோடும் சேர்ந்திருந்தால் போர்க்களமும் பூக்களமே. சரணம் 1 : உன் மடியில் துயிலுறங்கி என் ஜீவன் வாழ்கிறதே உனக்கெனவே உயிர் விடத்தான் என் ஆயுள் நீள்கிறதே காற்றுக்கு உருவமில்லை காதலுக்கும் உருவமில்லை அவையின்றி உயிருமில்லை நம் காதல் உயிர் காக்கும் காதலொரு கானகப்பயணம் இருளுக்கும் பயமெடுக்கு

கடிதம்: Eezham

தருண்யனிடமிருந்து சென்ற வாரம் வந்த மற்றுமொரு கடிதம்; என் பதில் கீழே: ############ மேய்ச்சல்வெளி - சுல்தான் - வவுனியா நிவாரண முகாமில் பழைய நண்பரைப் பல ஆண்டுகளுக்குப் பின் சந்திக்க நேர்ந்தது. கொழும்பில் இருந்து வந்தவனுக்கு, முகாமிலிருந்து ஆளை வெளியே எடுக்கத் தத்துவமுண்டா என அவர் அறிய உன்னித் தொய்வடைந்த பிறகு, “நிறையக் கதைக்க வேணும். நீ கனநேரம் நிக்கேலாது” என்று நெகிழ்வாகக் கைகளைப் பற்றிச் சிறிது நேரம் பேச்சற்று முகம் பார்த்து நின்றார். “என்னப்பா நடந்தது? சண்டைக்கு முந்தித் தப்பி வர ஏலாமல் போச்சே?” என் முகத்தை விசித்திரம் தோன்றப் பார்த்தார். பிறகு சொன்னார். “இப்பிடி முடியுமெண்டு ஆர் கண்டது? அப்பப்ப தொடர்ச்சியாய் உள்ளுர் வெளியூர் பேப்பர் எல்லாம் படிச்சு நடப்புகள் போக்குகளை அறிஞ்சு வைச்சுக் கொண்டிருந்த எங்களையே ஏமாத்தித்தான் போட்டாங்கள்...” “கிளிநொச்சிக்குப் பிறகும் எந்த நம்பிக்கையில போய்க் கொண்டிருந்தனீங்கள்?” “இப்ப யோசிச்சால் முட்டாள்த்தனம் விளங்குது. குருட்டு நம்பிக்கையிலயும், இவ்வளவு நாள் கஷ்டங்கள் தாங்கி எதிர்பார்த்த கனவு அழிஞ்சு போக விட்டிடக் கூடாது எண்ட அவதியிலயும் பின்னால ஓடிக்கொண்

போர்க்களமும் திருவாசகமும் - 4

Copyright : இப்பாடல் இயக்குநர் ராஜ்மோகனின் ' போர்க்களம் ' படத்துக்காக 2005ல் எழுதப்பட்டது. வரிகள் முழுக்க முழுக்க என்னுடையவை. வேறு இடங்களில் பயன்படுத்தும் உரிமையும் என்னையே சாரும். வேறு படங்களில் பயன்படுத்த விரும்புபவர்கள் என் முறையான அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டும். ************** Situation : கதாநாயகியிடம் தன் காதலை கவிதையாய்ச் சொல்ல நினைக்கும் கதாநாயகன் ஒரு பிரபலக் கவிஞரிடம் போகிறான். அவரோ " உன் காதலை நீயெழுது " என்று சொல்லி அனுப்பி விடுகிறார். அப்போது கதாநாயகன் அவனே தன் காதலிக்கு எழுதுவதாய் வரும் பாடல். பல்லவி : மனசுக்குள் மழை விழுதே மகரந்தம் நனைகிறதே இதயத்தில் பனி பெய்யுதே உதிரமே உறைகிறதே உதடுகள் அவள் பெயரை உயிருக்குச் சொல்கிறதே சில்லென்று சில துண்டு சொர்க்கங்கள் தின்கிறதே. சரணம் 1 : விழியின் விசையினிலே புவியீர்ப்பு அறுந்தேன் மொழியின் அழகோடு மெளனங்கள் துறந்தேன் ஒற்றைச்சிரிப்போடு உயிரொழுகிக் கரைந்தேன் ஓரப்பார்வையிலே கருவாகிப் பிறந்தேன் குரலின் இசையோடு காற்றாகிக் கலந்தேன் விரலின் அசைவுக்கு வில்லாகி வளைந்தேன் வ‌ளையலோசையிலே நாலங்கள் அதிர்ந்தேன் கொலுசின் பாஷையிலே தம

படித்தது / பிடித்தது - 68

எழுதிய ‘ ந’ வின் நுனியில் ஒரு அலகினைச் செருகினாள் பக்கவாட்டு நெளிவுகளில் சில சிறகுகளை பொதிந்துவிட்டு சுழியின் கீழே வாலிலிழுத்தாள் கொண்டுவந்த கடுகினை மையத்தில் ஒட்டி முடித்தபொழுது ஒருமுறை உடல் சிலும்பி ந பறக்கிறது பிறகான எனது ந விலெல்லாம் ஒரு காகம் கரைகிறது - பா.திருச்செந்தாழை நன்றி : தூறல் கவிதை

போர்க்களமும் திருவாசகமும் - 3

Copyright : இப்பாடல் இயக்குநர் ராஜ்மோகனின் ' போர்க்களம் ' படத்துக்காக 2005ல் எழுதப்பட்டது. வரிகள் முழுக்க முழுக்க என்னுடையவை. வேறு இடங்களில் பயன்படுத்தும் உரிமையும் என்னையே சாரும். வேறு படங்களில் பயன்படுத்த விரும்புபவர்கள் என் முறையான அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டும். ************** Situation : கதாநாயகன் கதாநாயகியைப் பார்த்து முதன் முதலில் காதல் வசப்படுகையில் அவனுக்குள் நிகழும் மற்றங்களைச் சொல்லும் பாடல். பல்லவி : காதல் என்னைக் கொல்கிறதே கன‌வுகள் உயிரைத் தின்கிறதே நெஞ்சம் கொஞ்சமாய் வலிக்கிறதே இது என்ன இதயத்தின் போர்க்களமா? அனுபல்லவி : குருதிப்புனலாடிக் கவிதைகள் கசிகிறதே உயிரைத்திருடுமோர் இசையும் வழிகிறதே தீயச்சுடுமொரு நிலவும் பொழிகிறதே ஆயுதமின்றியே உயிர் மெய் அழிகிறதே. சரணம் 1 : சாலையில் நடக்கையில் கூட்டம் பிடிக்கலை மாலையில் படுக்கையில் தனிமை பிடிக்கலை கண்கள் மூடினால் தூக்கம் பிடிக்கலை பெண்கள் கடந்தால் பார்க்கப் பிடிக்கலை வயிற்ருக்கு ஏனோ பசிக்கப் பிடிக்கலை நாக்கில் எதையும் ருசிக்கப் பிடிக்கலை சிகரெட் வாசனை சுத்தமாப் பிடிக்கலை நண்பர்கள் கண்டால் பேசப் பிடிக்கலை அம்மா பிடிக்கலை

படித்தது / பிடித்தது - 67

மஞ்சள் நிறத்தொரு கண் காத்திருக்கவோ, ஊடே புகுந்து செல்லவோ, விதிகள் மீறவோ யாருமின்றி மஞ்சள் கண் பொருத்தி இரவெல்லாம் விழித்துக் கிடக்கிறது ட்ராபிக் சிக்னல் ஒரு கைக்கிளைக்காரியென - சேரல் நன்றி : கருப்பு வெள்ளை

போர்க்களமும் திருவாசகமும் - 2

Copyright : இப்பாடல் இயக்குநர் ராஜ்மோகனின் ' போர்க்களம் ' படத்துக்காக 2005ல் எழுதப்பட்டது. வரிகள் முழுக்க முழுக்க என்னுடையவை. வேறு இடங்களில் பயன்படுத்தும் உரிமையும் என்னையே சாரும். வேறு படங்களில் பயன்படுத்த விரும்புபவர்கள் என் முறையான அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டும். ************** Situation : ப்ள‌ஸ் டூ படிக்கும் கதாநாயகன் (பெயர் - பாலா) தான் வசிக்கும் கும்பகோணம் கோயிலை ஒட்டிய தெருவில் நண்பர்களுடன் ஆடிப்படும், தமிழ் சினிமாவின் டிபிகல் ஹீரோ இண்ட்ரோட்க்ஷன் சாங். ************** பல்லவி : கும்பகோணம் ஏரியான்னா பாலான்னு கேளுடா அம்பிக்குத்தான் தெரியலன்னா ஊருக்கவன் புதுசுடா எங்களத்தான் கேள்வி கேட்க இங்க வருவது ஆருடா மாமன் மச்சான் ஆகிடலாம் எங்க கூட சேருடா. சரணம் 1 : ப‌ள்ளிக்கூடம் போனாலும் படிப்பு மட்டும் வந்ததில்ல‌ வத்தியாரு திட்டாம ஒரு நாளும் இருந்ததில்ல‌ நெனவு தெரிஞ்ச நாள் முதலா எவனையும் மதிச்சதில்லை இளரத்தத்திமிருல தான் யாரையுமே மிதிச்சதில்ல‌ எங்களுக்குத் தெரியாம எந்தப்பொண்ணும் ஊரில் இல்ல‌ பொம்பளைங்க பின்னாடி இதுவரைக்கும் திரிஞ்சதில்ல‌ வேலைவெட்டி இல்லனாலும் வீட்டுக்குள்ள இருந்ததில்

படித்தது / பிடித்தது - 66

நான் எப்போது அடிமையாயிருந்தேன்! (புஸ்பராணியுடன் ஒரு நேர்காணல் - சந்திப்பு: ஷோபாசக்தி) நன்றி : ஷோபாசக்தி

சகா : சில குறிப்புகள் - 9

சகா இன்று காலையில் வீட்டுக்கு வந்தான். அவன் கையில் வட்டமாய் சீல் குத்தப்பட்டிருந்தது. யாராவது பெண்ணிடம் வம்பு பண்ணப்போய் போலீஸ் ஸ்டேஷன் போய் அடையாளம் வாங்கி வந்திருக்கிறானோ என சந்தேகம் வந்து விசாரிதேன். இல்லையாம். நேற்று இரவு அலுவலகத் தோழிகளின் கட்டாயத்துக்கு இணங்கி பெங்களூர் தாஜ் ரெசிடென்ஸியில் உள்ள மேல்தட்டு டிஸ்கொத்தேவிற்குப் போயிருக்கிறான். " நிறையப் பொண்ணுங்க, இந்திரலோகம் மாதிரி "என்றான். இந்திரலோக என்ட்ரியில் அடையாளத்திற்காக‌ ஹோட்டலின் லோகோவை அப்படி கையில் குத்தி விட்டுத் தான் உள்ளே அனுப்புகிறார்கள். " பொண்ணுங்களுக்கு எங்கே குத்தறாங்க தெரியுமா? " என்றான். நான் பல ஸ்தலங்களை யோசித்து விட்டு, எதுவுமே ஒத்து வராததால் உதட்டைப் பிதுக்கினேன். " ரொம்ப யோசிக்காதடா! அவங்களுக்கும் கையில தான் " என்றான். ********************** சகாவுக்கு தீவிரமாய்ப் பெண் பார்க்கிறார்கள். அவன் திருவிளையாடல்கள் எதுவும் அவன் வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரியாது. அவர்களைப் பொறுத்த வரை அவன் பால் மணம் மாறாத குழந்தை; வாயில் விரல் வைத்தால் கூடக் கடிக்கத் தெரியாது. அவன் ஜாதியிலேயே சென்னையில்

போர்க்களமும் திருவாசகமும் - 1

பெறியியல் இறுதியாண்டு. கவிதை என்கிற பெயரில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தது ச‌லித்துப் போயிருந்த இருண்ட‌ காலகட்டம். சினிமாத்துறை க‌ஞ்சா மாதிரி தூரத்திலிருந்தே வசீகரித்துக் கொண்டிருந்தது. கூடப்படித்துக் கொண்டிருந்த என் நண்பன் தயாரிக்கவிருந்த திரைப்படமொன்றில், பாட்டெழுதும் சரக்கு ஏதேனும் என்னிடம் தேறுமா என சோதித்துப் பார்க்க‌ அழைத்திருந்தான். இயக்குநர் ராஜ்மோகன் சென்னை தரமணி திரைப்படக்கல்லூரியில் கோல்ட் மெடலிஸ்ட். அதற்கு முன் சில குறும்படங்களும், ஒரு டி.வி. சீரியலும் இயக்கியிருந்தார். முழு நீளத்திரைப்படமென்று பார்த்தால் இது தான் முதல் படம். நீண்ட கால முயற்சிக்குப் பின், பல குடும்ப சிக்கல்களுக்குப் பின் இந்த வாய்ப்பு கிடைத்த போது அவருக்கு வயது கிட்டதட்ட 35. " போர்க்களம் " என்ற அப்படத்தின் கதாநாயகன் ' ஜித்தன் ' ரமேஷ், ஹீரோயின் புதுமுகம், இசை கார்த்திக்ராஜா, ஒளிப்பதிவு மசாணி (பி.சி.ஸ்ரீராமிடம் உதவிராளராயிருந்தவர்), படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ். தயாரிப்பளர் காஜா மைதீனின் தம்பியான ஜமால் என்பவ‌ரும் என் நண்பன் தந்தையும் கூட்டாக தயாரித்து Super Good Filmsக்கு first-copy அடிப்படையில்

சில‌ சிந்தனைகள் - 5

QUICK GUN MURUGAN படம் தமிழில் பார்த்தேன். நன்றாகத் தான் இருந்தது. வசன‌ங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்கும் நகைச்சுவை தான் படத்தின் உயிர்நாடி. நாசர், ச‌ண்முகராஜன், ரம்பா, ராஜு சுந்தரம் என்று பாதிக்கு மேல் தமிழ் முகங்கள். பார்க்கலாம், I say! ^^^^^^^^^^^^^^^^^ தயிர் சாதத்துக்கு தக்காளி சாஸ் ஊற்றி சாப்பிட்டிருக்கிறீர்களா? சரி, அதை விடுங்கள், இந்த காம்பினேஷன்களை யோசித்துப் பாருங்கள்: கமல்ஹாசன் - பேரரசு, ரஜினிகாந்த் - தங்கர்பச்சான், விஜய்காந்த் - ஷ‌ங்கர், விஜய் - பாலா, சிம்பு - பாரதிராஜா. Incompatible Magic Value! ^^^^^^^^^^^^^^^^^ தமிழில் வீடியோ ஜாக்கிகளில் எனக்குப் பிடித்தவர் ரியா (மற்றபடி வெகுசனங்களுக்குப் பிடித்தமான திவ்யா, மஹாலஷ்மி போன்ற பட்டிக்காட்டு மிட்டாய்களில் எனக்கு ஆர்வமில்லை), அதே போல் ரேடியோ ஜாக்கிகளில் பிடித்தவர் சுசித்ரா. Seducing Voice. ^^^^^^^^^^^^^^^^^ கிட்டதட்ட ஒரு பத்து வருடம் முன்பு தூர்தர்ஷனில் இரவு எட்டு மணிக்கு நெஞ்சினலைகள் என்கிற அகிலனின் நாவலை நாடக‌மாகப் போட்டார்கள். மிக அற்புதமாக ஒரு திரைப்படம் மாதிரி எடுத்திருப்பார்கள். யார் அதன் இயக்குநர் மற்றும் ஒளிப்பத

உ.போ.ஒ. vs A Wednesday!

Image
உன்னைப் போல் ஒருவன் . எதுவுமே மாற்றவில்லை; அப்படியே எடுத்திருக்கிறார்கள். திரைக்கதை - வசனம் தொடங்கி கேமிரா ஆங்கிள், காஸ்ட்யூம் டிசைன், கலை இயக்கம் வரை காட்சிக்கு காட்சி எல்லாமே டிட்டோ " A Wednesday! " தான் (ஆனால் மனசாட்சியே இல்லாமல் மூலக்கதை என்று மட்டும் குறிப்பிட்டு நீரஜ் பாண்டே பெயரை படம் முடிந்து கடைசியில் பொடியெழுத்துக்களில் போடுகிறார்கள்). அதன் காரணமாக என்னால் இரண்டு படத்தையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அப்படி ஒப்பீடு செய்வதை மறைக்கவோ மறுக்கவோ போவதில்லை. கணேஷ் வெங்கட்ராமனை விட ஜிம்மி ஷெர்கில் நன்றாக நடித்திருந்தார் (அந்த வெறித்தனம் missing). பரத் ரெட்டியை விட அமீர் பஷீர் நன்றாக நடித்திருந்தார் (அந்த அசட்டுத்தனம் missing). அனுஜா ஐயரை விட தீபால் ஷா நன்றாக நடித்திருந்தார் (அந்த குறும்புத்தனம் missing) மோகன்லாலை விட அனுபம் கேர் நன்றாக நடித்திருந்தார் (அந்த கம்பீரம் missing). கடைசியாக, என்ன சொல்ல வருகிறேன் என உங்களுக்கே புரிந்திருக்கும். ஆம். கமல்ஹாசனை விட ந‌ஸ்ருதீன் ஷா தான் நன்றாக நடித்திருந்தார் (அந்த யதார்த்தம் missing). நான் சொல்வதை பொதுப்படையாக எடுத்

சில சிந்தனைகள் - 4

' வேலுபிரபாகரனின் காதல் கதை ' படத்தை நேற்றிரவு டிவிடியில் பார்த்தேன் (மனைவி ஊரில் இல்லை). எனக்குப் பிடித்திருந்தது. முக்கியமாய் வே.பா. பேசும் சில வச‌னங்கள், அந்த மூன்று பெண் கதாபாத்திரங்கள் மற்றும் இளையராஜாவின் பின்னணி இசை. ^^^^^^^^^^^^^^^^^ ஏ.வெங்கடேஷின் ' மலை மலை ' படத்தையும் டிவிடியில் பார்த்தேன். பரவாயில்லை. பிரபு, அருண்குமார் OK. வேதிகா (வழக்கம் போல்) அழகு. பிரகாஷ்ராஜ் பரவாயில்லை. இது மாதிரி படங்கள் கூட சமாளிக்கலாம். ' துரை ' வகையறாக்கள் தான் பிரச்சனை. ^^^^^^^^^^^^^^^^^ பா.விஜய் திரைக்கதை எழுதி நடித்த ' ஞாபகங்கள் ' படத்தில் "ஞாபகமில்லையோ தோழி" என்றொரு பாடல் வருகிறது. இசையும், குரலும் ஒரு சூட்சமத்தில் இயைந்து பிரிவெனும் துயரை அத்தனை அழகாய் உணர்த்தி விடுகிறது. குப்பையிலொரு குன்றின்மணி. ^^^^^^^^^^^^^^^^^ யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் நேற்று வெளியான ' யோகி ' படத்தின் பாடல்கள் நல்வரவு. குறிப்பாய் உஸ்தாத் சுல்தான் கானின் சாரங்கி மற்றும் குரலில் ஒலிக்கும் யோகி தீம் ம்யூஸிக் அபாரம். மற்றவை கேட்கலாம்; குற்றமில்லை. I feel this is a come back

கோலம் - சில கேள்விகள்

ஞாநி அவர்களுக்கு, முதலில் வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள் (உங்கள் பாஷையில் சொல்வதென்றால் " இந்த வாரப் பூச்செண்டு ") - தற்போது தமிழ் சினிமா ரசனையில் மெல்ல நிகழ்ந்து கொண்டிருக்கும் நல்லதொரு மாற்றத்தை சரியான தருணத்தில் பயன்படுத்திக் கொண்டு, மக்களுக்கான நல்ல படங்களை மக்களின் பணத்திலேயே எடுத்துக் காட்டலாம் என்று நம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கும் உங்கள் துணிச்சலுக்கு. என் முந்தைய இடுகையான " கோலம், c/o ஞாநி " யில் குறிப்பிட்டது போல், இந்த‌ இயக்கத்தின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் ப‌ற்றி எனக்கு சில விமர்சனங்களும் கேள்விகளும் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை ரூ.500/- என்பது பெரிய தொகை இல்லை என்ற போதிலும், நிறையப் பேருக்கு அப்ப‌டித்தான் தோன்றுகிறது. நான் பேசிய / கேட்ட வரை, அதில் கொஞ்சம் நியாயம் இருப்பதாகவும் படுகிறது. அதாவது ஒரு படத்தின் டிவிடிக்கு இந்த விலை மிகவும் அதிகம் என்பது தான் - சாதாரண பொது மக்களை விடுங்கள்; நல்ல படம் வர வேண்டும் என்ற என்பவர்களிடம் கூட - பரவலான கருத்தாக இருக்கிற‌து. அப்படி நினைப்பவர்களின் எண்ணிக்கை பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கையை விட கணிசமான அளவு

#ihatewhengirlssay

ட்விட்டரில் கடந்த வாரம் மிகப் பிரபலமாய் இருந்த விஷயம் #ihatewhengirlssay - அதாவது " பெண்கள் எதைச் சொல்லும் போது வெறுக்கிறீர்கள்? ". கண்ணில் பட்ட சில சுவாரசியமான ட்வீட்கள்: "I can't cook!!" Internet language in real life. That they are fat when they are anorexic :/ That Pokemon is uncool! That Michael Jackson was their man. "I've got a boyfriend" "I don't give oral" "Aww that's so sweet" or words to that effect. "Like" after every word. "I'm not pretty!" "I'm a bad bitch" "I'm not that type of girl" "I love u as just a friend" "I'm pregnant" That they're "not looking for anything serious right now" "I just want a boyfriend like my daddy" "Why don't you come around and meet my parents" - that's nearly commitment. "There are no good dudes out here!" "No" Anything.

தமிழ்: சிறந்த 15 இளம் இயக்குந‌ர்கள்

மிஷ்கின் ( அஞ்சாதே ) சசிகுமார் ( சுப்ரமணியபுரம் ) ராம் ( கற்றது தமிழ் ) வசந்தபாலன் ( வெயில் ) சுசீந்திரன் ( வெண்ணிலா கபடி குழு ) சிம்புதேவன் ( இம்சை அரசன் 23ம் புலிகேசி ) வெற்றிமாறன் ( பொல்லாதவன் ) வெங்கட்பிரபு ( சென்னை-600028 ) விஜய் ( பொய் சொல்லப் போறோம் ) புஷ்கர்-காயத்ரி ( ஓரம் போ ) எஸ்.பி.ஜனநாதன் ( ஈ ) கே.வி.ஆனந்த் ( அயன் ) ப்ரியா வி. ( கண்ட நாள் முதல் ) அறிவழகன் ( ஈரம் ) விக்ரம் கே. குமார் ( யாவரும் நலம் ) பின்குறிப்புக‌ள் : 1. சிறந்த பத்து பேரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தான் உத்தேசித்திருந்தேன் (அப்படித்தான் பக்கவாட்டில் அறிவிப்பும் வெளியிட்டிருந்தேன்). ஆனால் போட்டி கடுமையாக இருந்ததால், யாரையும் விலக்க மனமில்லாமல், பதினைந்து என்று எண்ணிக்கையை கூட்டியிருக்கிறேன். என் தேர்வை நியாயப்படுத்தும் அவர்களது தலா ஒரே ஒரு படத்தை அடைப்புக்குறிக்குள் தந்திருக்கிறேன். 2. மணிரத்னம், ஷ‌ங்கர் போன்றவர்களை சீனியர்கள் என்ற அடிப்படையில் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. Obviously, பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா போன்றவர்களைப் பற்றி கேள்விக்கே இடமில்லை. 3. அதிகபட்சம் இரண்டு படம் எடுத்த‌வர்கள் என்பதை

H2O + ஆவி --> ஈரம்

Image
ஷ‌ங்கரிடம் முதல்வன், நாயக், பாய்ஸ், அந்நியன் போன்ற படங்களில் துணை / இணை இயக்குநராகப் பணிபுரிந்த அறிவழகன், தன் குருநாதரின் தயாரிப்பிலேயே எழுதி, இயக்கி. அறிமுகமாகியிருக்கும் படம் ' ஈரம் '. படத்தின் செய்நேர்த்தியில் தெரிகிறார் ஷங்கர். அடிப்படைக் கதையென்று பார்த்தால் நம்மூர் மாதாந்திர க்ரைம் நாவல்களில் காணக்கிடைக்கும் ஒரு சாதாரண த்ரில்லர் தான். கூடவே ஆவி, பேய் என்று கொஞ்சம் பயங்காட்டியிருக்கிறார்கள். அடிக்கடி 13B எனப்படும் யாவரும் நலம் படம் ஞாபகம் வருவதை தவிர்ப்பதற்கில்லை. திரைக்கதையும் ஆங்காங்கே சிறு ஓட்டைகள் கொண்டது தான் என்றாலும் அற்புதமான‌ makingன் மூலம் ஒட்டு மொத்த படத்தையும் நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். மற்றபடி, படம் முழுக்க எதிலிருந்தாவது நீர் சொட்டிக் கொண்டே இருக்கிறது - mood of the movie. படத்தில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக இருப்பது மனோஜ் பரம்ஹம்ஸாவின் ஒளிப்பதிவு (கெளதம் மேனன் எடுத்துக்கொண்டிருக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஒளிப்பதிவாளர்). ஒரு வகையில் படத்தின் உயிர்நாடியே அவரின் ஒளிப்பதிவு தான். படத்தொகுப்பு (கிஷோர்) கச்சிதமாய் அமைந்திருக்கிறது. பின்னணி

கடிதம்: ethuvarai-eezham

தருண்யனிடமிருந்து மீண்டுமொரு கடிதம்: ############ கதியிழந்த மக்கள் அல்லது கடவுளர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளுதல் - இளமொட்டைச் சிறுபுழுதி - ‘எதுவரை’ என்ற கேள்வியைப் போலவே, ‘எப்படித் தொடங்குவது’ என்பதும் யோசித்தால் மிக ஆயாசப்படுத்துகிற கேள்விதான். சமூகத்தை நிமிர்த்துவதற்கு வேண்டிய தொடக்கங்களை விடுங்கள். எழுதுவதைத் தொடங்குவது கூட இன்னும் பெரும் சவாலாகவே இருக்கிறது. போரின் முடிவில் கஜினி முகம்மதாகச் சிந்திப்பதா அசோகச் சக்கரவர்த்தியாகச் சிந்திப்பதா என்ற தெரிவில் ஒருவேளை ‘எதுவரை’ என்ற கேள்விக்கு விடை வந்துவிடலாம் போலத் தோன்றுகிறது. ஆனால் இன்றும் இதுபற்றி ஒரு உரையாடலை ஆரம்பிப்பது அவ்வளவு சுலபமாய்த் தெரியவில்லை. நம் சமூகத்தின் வீரம், புத்திசாலித்தனம், ஏனைய மூடர்களை கட்டிமேய்த்து ஆண்ட காலம் போன்ற ஏறுபட்டி தளநார் வகைகளின் எழுப்ப நினைவுகளிலிருந்து இன்னும் நாம் இறங்கி வந்ததாகத் தெரியவில்லை. போரிலும், போரின் பின்னுமான வாதைகளுக்குள் நேரடியாகச் சிக்குப்படாது, வெளியிலிருந்து அழிவுகளை உணர்ந்தவர்களின் வீரக்குமுறலையும் பழிதீர்ப்பு மனவோட்டத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ‘வவுனியா முகா

கோலம், c/o ஞாநி

' கோலம் ' இயக்கம் பற்றிய குறிப்புகள் எழுத்தாளர் ஞாநி யின் தளத்திலிருந்து... ################################### கோலம் வீடு தேடி வரும் சினிமா இயக்கம் கோலம் - ஏன் ? எதற்கு ? எப்படி ? நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை. எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம். நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009 க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையா

படித்தது / பிடித்தது - 65

படைப்பும், படைப்பாளியும்! - யுவகிருஷ்ணா நன்றி : லக்கிலுக்ஆன்லைன்.காம் பின்குறிப்பு : இதை யுவகிருஷ்ணா யாருக்கு சொன்னார் என்பதை அடியேன் அறியேன். ஆனால் என் சமீபத்தைய மனநிலைக்கான 'கீதாபதேசம்' போல் தோன்றுகிறது. நன்றி யுவ'கிருஷ்ணா'!

படித்தது / பிடித்தது - 64

My Reactions to Reactions (September 09, 2009) Que: What caused you not to believe in God? Ans: Intelligence. - Ram Gopal Varma , Film Maker Courtesy : RGV's Blog

BEST OF FORWARDS - 38

Image

அழகான இசை

இளையராஜா உட்பட யாருடைய இசை ஆல்பத்துக்கும் இதுவரை நான் விமர்சனம் எழுதியதில்லை (முன்பு இந்தி கஜினி பாடல்கள் பற்றி எழுதியது கூட rediff.comல் அதற்கு ஐந்து ஸ்டார்கள் கொடுத்த அநியாயத்தைப் பொறுக்க முடியாமல் தான்)‌. ஸ்ருதிஹாசன் இசையமைப்பாளராய் அறிமுகமாகும் உன்னைப் போல் ஒருவன் படத்தின் பாடல்களுக்கு இப்போது எழுதிக் கொண்டிருப்பது தான் முதல் முறையாக அத்தகையதொரு முயற்சி. நிலை வருமா - பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் கமல்ஹாசன் குரலில் இதமாய் வழியும் இப்பாடல் தான் ஸ்ருதிஹாசன் என்கிற இசையமைப்பாளரிடம் நம்மை நிறைய‌ எதிர்பார்க்க வைக்கிறது. அல்லா ஜானே - இஸ்லாமிய சங்கீத முலாம் பூசப்பட்டு கமல்ஹாசன் கொஞ்சம் வித்தியாசமாக‌ குரலை மாற்றி முயற்சித்திருக்கும் பாடல் இது. நன்றாகத்தான் இருக்கிறது. Convincing. வானம் எல்லை - ஸ்ருதிஹாசனின் குரலில் வரும் ஆரம்ப தமிழ் வரிகளுக்கான இசை மட்டும் அற்புதம். மற்றப‌டி Blaaze இடம் காணப்படும் அதே வழக்கமான பாலிவுட் பாணி இரைச்சல். உன்னைப்போல் ஒருவன் - அக்ஷரா, ஸ்ருதி, சுப்புலக்ஷ்மி (கெளதமியின் மகள்) மற்றும் சிலர் பாடியிருக்கும் title song ஆன இப்பாடலிலும் வரிகளுக்கான இசை மட்டும் நன்று. OKi

தேசிய திரைப்பட விருதுகள் - சில‌ கேள்விகள்

இன்றைய‌ 55வது தேசிய திரைப்பட விருதுகள் ஏமாற்றமளிக்கிறது. தசாவதாரம் கமல்ஹாசனை விட காஞ்சீவரம் பிரகாஷ்ராஜ் எந்த வகையில் உசத்தி ஆகிறார்? ( அன்பே சிவம் கமல்ஹாசனையும், பிதாமகன் விக்ரமையும் ஒப்பிட்டு முன்பு இதே தான் தோன்றியது). சோகத்தைக் கொட்டி எடுத்தால் அதுவே சிறந்த படம் என யார் சொன்னது? ( காஞ்சிவரம் நல்ல படம் தான்; ஆனால் சுப்ரமணியபுரம், Taare Zameen Par போன்ற படைப்புகளை காட்டிலும் உயர்ந்ததில்லை). 2007ல் வெளியான பெரியார் படத்துக்கு 2008க்கான சிறந்த தமிழ் படம் என எப்படி விருது கொடுத்தார்கள்? ( பூ, அஞ்சாதே போன்ற படங்களை ஏன் கண்டுகொள்ளவில்லை? என்பது இதன் துணைக்கேள்வி). இதே கேள்வி தான் Special Effectsல் விருது வாங்கியிருக்கும் 2007ல் வெளியான சிவாஜி படத்துக்கும் (ஒரு வேளை சாகித்ய அகாதமி மாதிரி ஏதேனும் carry-forward முறை பின்பற்றப்படுகிறதா?). தாதா சாகேப் பால்கே விருதுக்கான‌ தகுதியோடு யாருமே இல்லையா? (கடைசியாக அறிவிக்கப்பட்டது 2006ல். நினைவுக்கு வரும் பெயர்கள் இளையராஜா, மணிரத்னம், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான்). விருதுகளின் மீதான நம்பிக்கையே போய்க் கொண்டிருக்கிறது. பிற்சேர்க்கை : (செப்டெம்பர் 0

சில சிந்தனைகள் - 3

பிரபு சாலமன் என்ற பெயருடைய இயக்குநரை உங்களுக்குத் தெரியுமா? கிங், கொக்கி, லீ, லாடம் என்று நான்கு சுவாரசியமான படங்களை இயக்கியிருக்கிறார். வழக்கம் போல் தமிழ் கூறும் நல்லுலகம் அவரைக் கண்டுகொள்ளவில்லை. ^^^^^^^^^^^^^^^^^ மக்களுக்கு என்ன பிடிக்கும் என MSV, ARR இருவரும் புரிந்து கொண்ட அளவுக்கு இளையராஜா புரிந்து கொண்டாரா என்பது சந்தேகமே. அவரது நல்ல பாடல்கள் ஹிட்டானது (கிட்டதட்ட ஓராயிரம்) விபத்தாகவே தோன்றுகிறது. ^^^^^^^^^^^^^^^^^ பேரரசு இயக்கும் படங்களின் வசனங்களை கவனித்திருக்கிறீர்களா? சில எதிர்பாராத, சுவாரஸ்ய எதுகைகள் தெறித்து விழும். அதற்காகவே அவருடைய படங்களை அவற்றின் மற்ற அபத்தங்களை சகித்துக் கொண்டு பார்க்கிறேன். ^^^^^^^^^^^^^^^^^ பத்திரிக்கைகள் முதல் நண்பர்கள் வரை எல்லோருமே நன்றாக இருக்கிறது எனச் சொல்லி, அதனால் பார்க்க நினைத்து ஆனால் பார்க்க முடியாமல் போன சமீபத்தைய ஹிந்தி படங்கள்: Newyork, Love Aaj Kal மற்றும் Kaminey. ^^^^^^^^^^^^^^^^^ ஹிந்தியில் தற்போது நல்ல நடிகை என்றால் அது ப்ரியங்கா சோப்ரா தான். விதவிதமான கதாபாத்திரங்களில் அற்புதமாய் நடிக்கிறார். அவரை வைத்து நாம் எடுத்தது 'லப்டப்

தமிழ் : சிறந்த 10 வலைப்பதிவுகள் - நீட்சி

முன்பே குறிப்பிட்டது போல் தமிழ் : சிறந்த 10 வலைப்பதிவுகள் வரிசையின் தொடர்ச்சியாய் அதன் நீட்டிக்கப்பட்ட ஒரு பட்டியலை இங்கே தந்திருக்கிறேன். இவற்றில் சில எனக்குப் புதிதாக தற்போது அறிமுகமானவை; சிலவற்றின் முக்கியத்துவம் நண்பர்களும், வாசகர்களும் சொன்னவை; மேலும் சில கடந்த பட்டியலில் இருப்பவற்றுக்கு சற்றும் குறைந்ததல்ல என்ற போதிலும் பத்து என்கிற குறைந்த எண்ணிக்கை காரணமாக இடம்பெறாமல் போனவை. எட்டயபுரம் [ http://kalapria.blogspot.com/ ] செல்வேந்திரன் [ http://selventhiran.blogspot.com/ ] என் வலைப்பூ [ http://nvmonline.blogspot.com/ ] தனிமையின் இசை [ http://ayyanaarv.blogspot.com/ ] கென் [ http://www.thiruvilaiyattam.com/ ] நந்தாவிளக்கு [ http://nundhaa.blogspot.com/ ] நேயமுகில் [ http://neyamukil.blogspot.com/ ]

மிக அழகான 10 தமிழ் பெண்கள்

மிக அழகான 10 தமிழ் பெண்கள் பட்டியலை வெளியிடுவதாய் அறிவித்து கிட்டதட்ட ஒரு மாதமாகிறது. என்ன ஆயிற்று என்று யாரும் கேட்கவில்லை யெனினும் பதில் சொல்ல வேண்டிய க‌டமையிருப்பதாக உணர்கிறேன். உண்மையில் பட்டியல் வெகு நாட்களுக்கு முன்பே தயாராகி விட்டது. ஆனால் வெளியிடுவதில் தான் ஒரு சின்ன அல்லது பெரிய சிக்கல் இருக்கிறது. அதில் இடம் பெற்றவர்களில் ஒருவர் ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவரின் மகள்; இன்னொருவர் மத்திய அமைச்சர் ஒருவரின் மருமகள்; எல்லாவற்றையும் விட ஆபத்தானதாய் மற்றுமொருவர் ஒரு நவீன பெண் கவிஞர். பட்டியலை வெளியிட்டால், நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்குதலுக்கு ஆளாகலாம் என்று சஹ்ருதயர்கள் சிலர் சொல்ல‌க் கேள்வி. இருக்கும் ஒரே ஒரு அழகான மனைவியுடன், மென்பொருள் துறையின் சுமாரான சம்பளத்தில், அந்நியர்கள் சூழந்திருக்கும் ஊரான பெங்களூரில், அமைதியாய் அடக்கமாய் ஒண்டிக் குடித்தனம் செய்து கொண்டிருக்கும் என் போன்ற அம்மாஞ்சிகளுக்கு இத்தகைய‌ அதிர்ச்சி வஸ்துக்கள் ஆகாது. மேலும், எனக்கும் எழுத வேறு உருப்படியான விஷயங்கள் காத்திருக்கின்றன. இதையெல்லாம் மனதில் கொண்டு நோக்குங்கால், இந்தப் பட்டியலை இப்போது வெளியிடுவது எந்த

படித்தது / பிடித்தது - 63

பார்வைகள் பெண் தோழிகளுடன் பேசும்போதும் வீசாமல் இருக்க முடிவதில்லை ஒருக்கணமேனும் மார்புகளை நோக்கி பெண் கடவுள்களை வழிபடுகையில் மட்டும் கொஞ்சம் கூடுதல் பயத்துடன் - என்.விநாயக முருகன் நன்றி : NBlog - என் வலைப்பூ