ஆண்டாளும் பத்மாவதியும்

இந்திய யூனியன் என்பது கருத்துரிமை கொண்ட தேசம் என்கிறார்கள். நிஜம் தானா? சமீபத்தில் வலதுசாரி உதிரி அமைப்புகள் படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரத்துக்குச் சவால் விடும் வகையில் மேற்கொண்டுள்ள அராஜகச் செயல்கள் இந்திய அரசியல் சாசனம் நம் குடிமக்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளையே கேள்விக்கு உட்படுத்துபவை. மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்தில் இருப்பதையும் இந்த அத்துமீறல்களையும் தனித்தனியே பார்க்க முடியவில்லை. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்தியாவில் சமூக மற்றும் கலாசாரச்சகிப்பின்மை வலுத்து வருகிறது. இரு உதாரணச் சம்பவங்கள். ஒன்று தென்னிந்தியாவில்; மற்றது வட இந்தியாவில். * முதலில் வைரமுத்துவின் 'தமிழை ஆண்டாள்' கட்டுரை. முதலில் ஓர் உரையாக நிகழ்த்தப்பட்டு பின் தினமணி நாளேட்டில் வெளியானது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் என்ற கோதை நாச்சியார் பற்றிய இதில் நாற்பதாண்டுகளுக்கு முன் நாராயணன், கேசவன் என்ற வரலாற்றுப் பேராசிரியர்களால் எழுதப்பட்ட Bakthi Movement in South India என்ற ஆய்வுக் கட்டுரையில் ஆண்டாள் திருவரங்கம் கோயிலில் தேவதாசியாக வாழ்ந்தவர் என்ற குறிப்பு வருவதைச் சுட்டுகிறா