காமத் தாழி [சிறுகதை]

சாகஸ ராத்திரி! அந்தப் பெயரே ஜிலீர் என்றிருந்தது சில்வியாவுக்கு. ADVENTURE NIGHT என்று காப்பர் ப்ளேட் கோத்திக் எழுத்துருவில் அச்சிடப் பெற்ற அந்த நுழைவுச் சீட்டை எடுத்தாள். முகமூடி, மதுக்கோப்பை, வாண வேடிக்கைக்கிடையே Happy New Year’s Eve – 2018. ₹ 1,00,000 என்றிருந்த பொன்ஜிகினாப் புடைப்பை விரல்களால் ஆதூரமாய்த் தடவினாள். பார்த்திபன் முதலில் அதைச் சொன்ன போது விளையாடுகிறான் என்றே நினைத்தாள். “ச்சீய்… போடா பொறுக்கி!” அவன் எப்போதும் அப்படித்தான். ஆபாசமாய்ப் பேசிச்சிரிக்க வைப்பதில் அசகாயசூரன். சில்வியா திருமணமாகி இவ்வூருக்கு வந்து இரண்டரையாண்டுகள் ஆகின்றன. மொழி தெரியாத மிலேச்சர்கள் சூழ வாழும் அந்த அந்நியப் பிரதேசத்தில் ஒவ்வொரு பகலும் ஒவ்வொரு ராத்திரியும் அத்தனை அனுபவித்து, அத்தனை ரசித்து நகர்த்த முடிகிறது அவளுக்கு. சண்டைகள் ஏராளம். அதன் பின்பான கொஞ்சல்கள் அதினினும் தாராளம். பார்த்திபனுக்கு எல்லாமே த்ரில்தான். பெய்யும் மாமழையில் நனைந்தபடி சில்ட் பியர் அருந்துவதாகட்டும், கோடைக்கானல் ‘குணா’ பாறையினுள் அவள் கையை இறுகப் பற்றியபடி இறங்குவதாகட்டும், தேசிய நெடுஞ்சாலையில் மணிக்கு 150 கில