Posts

Showing posts from November, 2010

ராஜாவும் சாருவும் பின்னே ஞானும்

நந்தலாலா திரைப்படத்தில் இளையராஜாவின் இசைத்தரம் பற்றிக் கடுமையான எதிர்க் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார் சாரு நிவேதிதா - "உலகத்தரமான இப்படத்தின் காவியத்தன்மையை சிதைத்து விட்டது இதன் இசை" என்பதே அவர் சொல்வதன் சாரம். http://charuonline.com/blog/?p=1331 (குறிப்பு : உடன் ‌ நந்தலாலா பற்றி நானெழுதிய விமர்சனத்தின் சுட்டியையும் தந்துள்ளார்).

இது ராஜபாட்டை

Image
******* நிலை பேருந்து நிலையத்தில் இதோ வருகிறேனென்று சொல்லிப்போன அம்மாவுக்காக‌ எவ்வளவோ நேரமாய்க் காத்திருக்கிறது ஒரு குழந்தை பார்க்கப் பார்க்கத் தீராத முகங்களைப் பார்த்தபடி. - மனுஷ்ய புத்திரன் (' நீராலானது ' தொகுப்பிலிருந்து) ******* நந்தலாலா - கடந்த தசம ஆண்டுகளில் வெளிவந்தவைகளில் மிகச்சிறந்த படம். இது வெறும் திரைப்படம் அல்ல; ஓர் அனுபவம். இன்னும் சரியாய்ச் சொன்னால், ஒரு ஜென் அனுபவம். படத்தலைப்பு மற்றும் டைட்டில் கார்ட் தொடங்கி படம் நெடுகவும் குறியீடுகளே, அவற்றின் நீட்சியான படிமங்களே ஆள்கின்றன. ஒரு நெடுங்கவிதையைப் போல் அல்லது ஒரு பெருங்காவியத்தைப் போல் மிக நிதானமாய், மிகத்துல்லியமாய் படம் பிரயாணிக்கிறது. குட்டையிலிருக்குமொரு நத்தையின் அங்குல‌ நகர்ச்சியோடு மெதுவாகவே பயணிக்கும் இந்த வினோதக் கதையாடலை சீரான இடைவெளியில் பின் தொடர நாமோ மூச்சிரைக்க‌ ஓட வேண்டியிருக்கிறது, ஒரு காட்டுமுயலின் வேகத்துடன். நந்தலாலா வில் இரண்டே பேர் தான். ஒருவர் இளையராஜா; மற்ற‌வர் மிஷ்கின். ஒரு மந்திரவாதியின் கற்பனையோடும், ஒரு ரசவாதியின் நுட்பத்தோடும் படத்தின் காட்சிகள் எல்லாவற்றிலும்

தாண்டவராயனைத் தேடிய கதை

நேற்றைய மழையற்ற மதிய வெயிலில் (ஆச்சரியக்குறி) பெங்களூர் புத்தகக்காட்சியை நிழலுக்கு நாடினேன். இம்முறையும் அரண்மனைத்திடலில் (அதாங்க, Palace Grounds) வாசல் குழப்பம் வந்து ஆட்டோக்காரனுக்கு தண்டம் அழ நேர்ந்தது. எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது (அடச்சே!). Sex Ratio கூடுதலாயிருந்தது மட்டும் ஆறுதல் (அப்பாடா!). அது எதற்கு எனக்கு? நான் புத்தகம் பார்க்கச் சென்றவன்! இம்முறை விளம்பரங்களும் நிறைய‌ இல்லை. ஸ்டால்களும் சென்னையை விடக் குறைவு தான். பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக கம்மி என்பதாகவே தோன்றியது. இதை எப்படி இந்தியாவின் 2வது பெரிய கண்காட்சி என்றழைக்கிறார்கள் என்பது ஆச்சரியம் (ஒருவேளை, ஆங்கிலத்துக்கு மட்டுமென்றால் ஒப்புக்கொள்ளலாம்). உள்ளே நுழைந்தவுடன் இலவசமாய் குர்ஆன் தருவதாகச் சொல்லி நோட்டீஸைத் திணித்த முஸல்மான் ஸ்டாலில் நிதானமாய் நாசூக்காய் மறுத்து விட்டு நக‌ர்ந்தேன். அதே போல், தலையணை சைஸ் கீதை யை நூறு ரூபாய்க்கு தருவதாய்ச் சொன்ன மற்றொரு ஸ்டாலையும் உதாசீனப்படுத்தி நகர்ந்தேன். காரணம் மதம் தொடர்பான எத்தேடலும் எனக்கு தற்போது இல்லை.ஆன்மீகமும் மதமும் வேறுவேறு அல்

சுயமைதூனம்

குளிர்நீராடிய குழ‌ற்சூட்டினை நிரடியபடி ஆள‌ரவமற்ற ஞாயிறு மதியத்தினொரு நடுப்பகல் புணர்ச்சிக்குத் தயாராகிறேன் - பகிரவியலா சுக்கிலத்துளி கழிந்தெறிய‌‌.

படித்தது / பிடித்தது - 92

நேரமிருந்தால் வீதிகளில் திரியும் மனநிலை தவறிய ஒருவனின் கண்களை உற்றுப் பாருங்கள் அவன் அழுக்கு ஆடைகளை முகர்ந்து பாருங்கள் மனநிலை தவறியவர் பெண்ணெனில் அவள் நிர்வாண அலட்சியத்தைப் பாருங்கள்; ரசிக்காதீர்கள் எவருக்கும் புரியாத மொழியில் இறைவனை அழைத்து சுருங்கி காய்ந்து வெடித்த தன் முலைகளை சுட்டி முறையிடுபவளை நிதானியுங்கள் உதிரம் உறைந்த யோனியை ஒரு கையால் தட்டித் தட்டி தரை அதிர நடக்கும் அவளின் புட்டத்தின் மீதிருக்கும் சூட்டுத் தழும்பினை கவனித்து அதிருங்கள் உங்களுக்கு இந்தக் கவிதை கிடைக்கலாம். - கணேசகுமாரன் நன்றி : அம்ருதா (ஜனவரி 2009)

பால்யத்தின் சாகசங்கள்

Image
புதிய தலைமுறை 18-ந‌வம்பர்-2010 தேதியிட்ட இதழில் யுவகிருஷ்ணா எழுதியிருக்கும் " உங்களுக்குள் இருக்கிறாரா இரும்புக்கை மாயாவி? " என்ற கட்டுரை தமிழ் காமிக்ஸின் வரலாற்றினைத் துல்லியமாக‌ அறிமுகப்படுத்துகிறது. வாசகர்களுக்கு சிபாரிசிக்கிறேன்! பின்குறிப்பு : லயன் காமிக்ஸின் பிரமாண்ட படைப்பான‌ இரத்தப்படலம் - XIII ஆர்டர் செய்து இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கைக்கு கிடைத்தது. இருநூறு ரூபாய்க்கு தற்போதைய ஆனந்த விகடன் சைஸில் 854 பக்கங்களில் பதினெட்டு பாகங்கள். பார்ப்பதற்கு டி.என்.பி.எஸ்.சி - குரூப் 1 தேர்வு கையேடு போல் இருக்கிறது. இனி மேல் தான் தொடங்க வேண்டும்.

தேவதைகளும் புத்த‌கங்களும்

பெங்களூர் புத்தகத் திருவிழா - 2010 நாளை மறுநாள் (அதாவது நவம்பர் 12, 2010 - வெள்ளிக்கிழமை அன்று) தொடங்குகிறது. கொல்கத்தாவிற்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி என்று இதனைச் சொல்கிறார்கள் (300 ஸ்டால்கள், 2 லட்சம் பார்வையாளர்கள், 15 கோடி வியாபாரம்).  பெங்களூர் பேலஸ் க்ரவுண்ட்ஸில் ஆண்டுதோறும் நடக்கும் இந்நிகழ்வைத் திருவிழா என்றழைப்பதைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆம். ஒருவகையில் நிஜமாலுமே திருவிழா தான்! அலட்சிய‌ ஸ்லீவ்லெஸ் அல்லது அபாய மினிஸ்கர்ட் அணிந்த ஆயிரத்து சொச்சம் ‌வெண்சரும யுவதிகள் கையில் புத்தகங்களோடு (பெரும்பாலும் சேத்தன் பகத் அல்லது ஜே.கே.ரௌலிங், சில‌பேர் சிட்னி ஷெல்டன் அல்லது ஜெஃப்ரி ஆர்ச்சர், மீறிப்போனால் டேன் ப்ரௌன் அல்லது அயன் ராண்ட்) குறுக்கும் நெடுக்கும் பூனை நடை நடந்து உங்களை அலட்டாமல் இடித்துக் கடக்கிறார்கள் என்றால் அது திருவிழா இல்லையா? பெயரில் கூட fair இல்லை; festival தான்! புத்த‌கக்காட்சிக்கு நுழைவுச்சீட்டு என்ற வகையில் மட்டும் தலைக்கு இருபது ரூபாய் வசூலிக்கிறார்கள். ஆனாலும் தயக்கமின்றி தாத்தா பாட்டி முதல் நண்டு சிண்டு வரை குடு

ஹ‌வுஸ்ஃபுல் - SYNOPSIS

பார்த்திபனின் ஹவுஸ்ஃபுல் எனக்குப் பிடித்த திரைப்படங்களுள் ஒன்று. கமல்ஹாசன் சென்னை ஐஐடியில் திரைக்கதை பயிற்சிப்பட்டறை ஒன்றை சென்ற ஆண்டு நடத்திய போது நானும் விண்ணப்பித்திருந்தேன். வழக்கமான பயோடேட்டாத்தனப் படிவத்துடன் பிடித்த 5 படங்களைப் பட்டியலிட்டு (எம்மொழியாகினும்), அவற்றில் ஒன்றினைப் பற்றி SYNOPSIS (விமர்சனம் அல்ல; கதைச்சுருக்கம் போல்) எழுதி அனுப்பக் கேட்டிருந்தார்கள். வித்தியாசம் காட்டும் உத்தேசத்துடன் நான் விரித்தெழுதத் தேர்ந்தது - ஹ‌வுஸ்ஃபுல் ! ******* HOUSE-FULL Genre : Feature Film [Thriller] / Language : Tamil [India] / Release : 1999 / Length : 150 minutes Director : Parthiban / Music : Ilayaraaja / Cast : Parthiban, Aishwarya, Vikram, Suvalakshmi, Roja HOUSE-FULL. It’s an artistic master-piece with a voice against the religious terrorism showered on innocent public. The core plot is knitted around one-day incident happening in a cinema theatre located. A few sub-plots running in the movie add the spice to the main thread. The whole story runs as a flashback when a

நானெழுதிய‌ சில கடிதங்கள்

பரத்தை கூற்று புத்த‌கத்தினை வைரமுத்து , சாரு நிவேதிதா , எஸ்.ராமகிருஷ்ணன் , ஞாநி , ஜெயமோகன் என நான் மிக விரும்பும் / மதிக்கும் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு அனுப்பி வைத்திருந்தேன் - அவற்றுடன் இணைத்திருந்த Covering-Letterக‌ள் இவை: ******* 05-செப்டெம்பர்-2010, பெங்களூரு மஹாநகரம். கவிப்பேரரசு அவர்களுக்கு, வந்தனம். 2007ம் ஆண்டு குங்குமம் வார‌ இதழ் நடத்திய ‘ வாசகர் கவிதைத் திருவிழா ’வில் என‌து ‘ ஒருத்தி நினைக்கையிலே ’ என்ற படைப்பை முத்திரைக்கவிதையாகத் தேர்ந்தெடுத்திருந்தீர்கள் (6-9-2007 தேதியிட்ட இதழ் – பார்க்க இணைப்பு). அதுவே பிரசுரம் க‌ண்ட‌ என் முதல் படைப்பு; அதுவே என் முதல் இலக்கியப்பிரவேசம். அடுத்தடுத்து என்னை எழுத உத்வேக உரமேற்றியது அந்த மகாதிருப்புமுனை. அவ்விதழில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் பற்றி நீங்கள் எழுதிய குறிப்பில் " இந்தக் கவிதைகளையெல்லாம் பெரும்படைப்புகள் படைப்பதற்கான பயிற்சிக்களங்கள் என்றே கருதுகிறேன் " என்று சொல்லியிருந்தீர்கள். இன்று கிட்டதட்ட மூன்று முழு ஆண்டுகள் கழிந்த நிலையில், ‘ பரத்தை கூற்று ’ என்ற என் முதல் கவிதைத்தொகுதியுடன் உங்கள் முன் நிற்கிறே

பரத்தை கூற்று : மேலும் சில பதிவுகள்

பரத்தை கூற்று தொகுப்பு மற்றும் நிகழ்வு குறித்து மேலும் இரண்டு இடுகைகள்: ******* http://ilainunithuligal.blogspot.com/2010/10/blog-post_18.html Monday, October 18, 2010 Posted by gopikrish.k at 7:05 PM பரத்தை கூற்று “புழுவோ மண்ணோ கழுகோ நெருப்போ தின்னப் புகும் முன் நீயும் ருசித்துப் போ” “எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” - பரத்தை கூற்று, சி.சரவணகார்த்திகேயன் The first one is a sheer example of attitude. It just throws away the society and makes it so mean. The second one.. wow.. wow.. "எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்" - இந்த கவிதையின் உயிரனைத்தையும் தேக்கி நிற்க்கிறது இந்த வரி.. பலர் ரசித்து இன்புற்ற பாடலுக்கு இணையாக உடலை உருவகித்ததில் கவிதை உயிர்பெறுகிறது.. ******* http://yerumbu.blogspot.com/2010/11/buzz-collection.html Monday, November 1, 2010 Posted by எறும்பு at 12:13 PM சின்ன சின்ன (Buzz collection) "பரத்தை கூற்று" புத்தக வெளியீடுக்கு சென்றிருந்தேன். நல்ல கூ

௲ - தௌசண்ட் வாலா

Image
வ - குவாட்டர் கட்டிங் யாராவது அமெரிக்க, ஐரோப்பிய குடிமகன்கள் மென்பொருள் பற்றிய சோம்பேறித்தன‌ ஸ்கைப் சம்பாஷணைகளினூடே மெதுவாய் உங்கள் மொழியின் நல்ல திரைப்பட இயக்குநர் யார் எனக் கேட்டு வைத்தால் உடனடியாய்ச் சொல்ல நேற்று வரை ஓர் ஒற்றை வார்த்தைப் பதிலைத் தயாராய் வைத்திருந்தேன் : அது மிஷ்கின் . இன்று முதல் இன்னும் ஒரு (இரு?) பெயரையும் அதனோடு சேர்த்துச் சொல்லலாம் : அது புஷ்கர் - காயத்ரி . 2007ல் ஓரம் போ வந்த‌ போதே என் ப்ரியத்திற்குரிய இயக்குநர்களுள் ஒன்றாகிப் போனது இந்த ஜோடி. அவ்வாண்டு வெளியான படங்களில் முதல் ஐந்துள் ஒன்றாக ஓரம் போ வை குறிப்பிட்டிருந்தேன் . இப்போது அவர்கள் இயக்கியிருக்கும் 2வது படமான வ மூலம் அந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை (மிகைமதிப்பு?!). ரொம்ப நாள் கழித்து ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப்பார்க்க முடிந்த படம் (இதற்கு முன்பு பொய் சொல்லப்போறோம் ). அத்தனை அசத்தலாய் எடுத்து வைத்திருக்கிறார்கள். கதையே - சொல்லப்போனால் ஒன்லைனே - வித்தியாசமானது. குவாட்டர் கட்டிங்கிற்காக இரு இளைஞ்ர்கள் ஒரு ராப்பூரா சென்னையைச் சுற்றுவதன் வாயிலாக மாநகர இரவு வாழ்க்க

படித்தது / பிடித்தது - 91

பூர்ணிமம் நெடுஞ்சாலை மரத்தடியில் த்யானத்திலிருந்தான் புத்தன் . அரச இலை அவன் மேல் உதிர்ந்தது . விழிக்கவில்லை . காற்று , புழுதி வாரி வீசியது . அவன் விழிக்கவில்லை . மழைத்துளிகள் வீழ்ந்தன . அப்படியே இருந்தான் . குறுக்காக காகமொன்று கடந்தது . ஓடுடைய கூழாங்கல்லாய் உறைந்து போயிருந்தது அவன் கண்கள் . யசோதரா இறந்து விட்டதாக சொல்லப்பட்டது . மனம் நோக்கி வேர்விட்டிருந்தது அவனது பிரக்ஞை . தலைமை சீடன் , பெண்ணொருத்தியோடு ஓடி விட்டதாக கூறப்பட்டது . அசைவற்று இருந்தான் . மண்ணை கிளறியபடி மூச்சு விட்டு போய்க்கொண்டிருந்தன கோடி கோடி எறும்புகள் . சவமாய் ஜீவித்திருந்தான் . நீ ஞானம் அடைந்து விட்டாய் என ஒரு பொய் சொல்லப்பட்டது . மெல்ல கண் திறந்தான் . எதிரில் சிறு குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது . வெகு நாட்களுக்குப் பிறகு ஆழ்ந்து அழுதான் . தன் துறவை , மண்பொம்மையாக மாற்றி குழந்தைக்குத் தந்தான் . சிறிது நேரம் விளையாடிவிட்டு தூக்கிப் போட்டு விட்டது குழந்தை . தூக்குச்சட்டி எடுத்துக் கொண்டு வயல் வேலைக்கு போய்க்கொண்டிருந்தான் புத்தன் . - கார்த்திக் நேத்தா நன்றி : காட்சி

பரத்தை கூற்று : ச.முத்துவேல்

பரத்தை கூற்று பற்றி கவிஞர் ச.முத்துவேல் அனுப்பிய மின்னஞ்ச‌ல் இங்கே: ******* http://thooralkavithai.blogspot.com/2010/11/blog-post.html ******* Wednesday, November 3, 2010 எழுதியது ச.முத்துவேல் at 6:26 PM பரத்தைக்கூற்றும், சாரு நிவேதிதா கூற்றும் அன்புள்ள நண்பர் CSK (சரவணகார்த்திகேயன்) மிகவும் தாமதமான இந்தக் கடிதத்திற்கு முதலில் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனோ, இப்போது எதையுமே எழுதவோ, முன்பு போல் ஆர்வத்தோடு படிக்கவோ இயலாமல் ஒருவித அயர்ச்சியோடும், சோம்பலோடும் இருக்கிறேன். அதனால் தான் உடனடியாக எழுதவில்லை. பரத்தைக்கூற்று நூல் வெளியீட்டு விழாவுக்கு முந்தின நாளே நான் தொகுப்பைப் படித்து முடித்து விட்டிருந்தேன். ஆனாலும் மேற்சொன்ன காரணங்களினால் எழுத முடியவில்லை. இத்தனைக்கும் அன்று நூல் வெளியீட்டு விழா முடிந்த பின்னர், பரத்தைக்கூற்று பற்றி சாருவுக்காகவே எழுதி விட வேண்டும் என்றொரு உத்வேகம் எழுந்திருந்தது. அங்கிருந்த நண்பர்களுடன் கூட நான் இதைப் பகிர்ந்து கொண்டேன். வீடு வந்து சேர்ந்ததும் உத்வேகத்தை லௌகீக வாழ்க்கை இழுத்துக்கொண்டது. நீங்கள் மிகவும் விரும்புகிற, மதிக்கிற ச

பரத்தை கூற்று : விழா நிழற்படங்கள் - 5

Image
நன்றி : எஸ்.கே.செந்தில்நாதன்

பரத்தை கூற்று : விழா நிழற்படங்கள் - 4

Image
நன்றி : எஸ்.கே.செந்தில்நாதன்

பரத்தை கூற்று : விழா நிழற்படங்கள் - 3

Image
நன்றி : எஸ்.கே.செந்தில்நாதன்