Posts

Showing posts from July, 2009

படித்தது / பிடித்தது - 59

பால்யம் இழந்தவள் அடியுரமாக ஆட்டுப் புழுக்கை ரத்த நிறத்தில் செம்மண் ஆற்றுமணல் எல்லாம் கலந்து நிரப்பிய தொட்டியிலிட்ட செடி பூத்தது மூன்றே மாதத்தில் எல்லோரும் மகிழ. முதல் பூவைச் சூடிச்சென்ற ஏழாவது படிக்கும் சின்னவள் இன்று மாலை பெரியவளானாள் ஏனோ வலித்தது மனது. - வடகரை வேலன் நன்றி : வடகரை வேலன் எண்ணச் சிதறல்கள்

படித்தது / பிடித்தது - 58

13 ஸ்தனங்கள் பழகிய கைகளுக்கும் பழகிய ஸ்தனங்களுக்குமான கிளர்ச்சித் தூரம் வெகுவாக விலகி விலகி விலகிப் போய்க் கொண்டேயிருக்கிறது. - த.அரவிந்தன் நன்றி : தாவரம்

சகா : சில குறிப்புகள் - 5

சகாவுக்குள் ஒரு சுமாரான எழுத்தாளன் உண்டு. எங்கள் கல்லூரி நாடகங்களில் கணிசமானவற்றுக்கு அவன் தான் வசனகர்த்தா . ஒரு முறை பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட பெருந்தலைகள் பலர் கலந்து கொண்ட விழாவில் நிகழ்த்த‌ப்பட்ட நாடகத்தில் அவன் எழுதிய வசனம் இது: " பேரு அனிதா, சுருக்கி 'அன்னி'னு கூப்பிடுவோம் " " நல்ல வேளை, பேரு சுனிதா இல்லை ". அடுத்த நாள் சப்பை காரணங்கள் சொல்லி சகாவை ஒரு மாதம் ச‌ஸ்பெண்ட் செய்தார்கள். பிறகு தான் தெரிந்தது துணைவேந்தரின் மகள் பெயர் சுனிதா என்று. விஷயம் கேள்விப்ப‌ட்டு அப்பெயரைச் சுருக்கி துணைவேந்தரை விளித்தான் சகா. ********************** ட்விட்டரின் உபயத்தில் சகா புதிதாக சினேகித்திருக்கும் ஜெனிஃபர் கேத்ரீன் என்கிற அமெரிக்க தேசத்துப் பெண்ணின் வயது பதின்மூன்று. இந்த வயதிலுள்ள எந்தப் பெண்ணும் சகாவுடன் அரை மணி நேரம் முகம் பாராமல் (கவனிக்கவும்! முகம் பாராமல் - அது மிக முக்கியம்) சாட் செய்தால் போதும், நிச்சயம் அவன் மீது பைத்தியமாகி விடுவாள். ஆச்சரியமாய், ஜெனிஃபர் மட்டும் சிக்க மாட்டேனென்கிறாள் (" ஏடாகூடமா ஏதாவது பேசினா ஒண்ணுமே தெரியாத மாதிரி ஸ்மைலி அனுப்ப

இசை ஞானி ஆயிரம் - 9

பொங்கலோ பொங்கல் - மகாநதி ஸ்ரீரங்க ரங்கநாதனின் - மகாநதி கண்மணி அன்போடு - குணா அப்பன் என்றும் - குணா பார்த்த விழி - குணா அரிதாரத்த பூசி - அவதாரம் ஒரு குண்டு மணி - அவதாரம் தென்றல் வந்து - அவதாரம் தீபங்கள் பேசும் - தேவதை ஒரு நாள் - தேவதை

படித்தது / பிடித்தது - 57

பிரமிடுகள் சௌக்கியம் சாப்பிட்டேன் விசேஷமாய் ஏதுமில்லை அனைவரும் சுகம் - பணியும் நலம் நேரமில்லை அப்படியா! சரி மற்றும் ம் வார்த்தை அடுக்குகளில் பொய்களைப்போல் எளிதில் கிட்டுவதில்லை புன்னகைகள் - சென்ஷி நன்றி : சென்ஷி

மோதல் விளையாட்டு

Image
நான் ஒரு சரண் ரசிகன். நீங்கள் சென்னையில் வசிப்பவரென்றால், " இயக்குநர் சரண் வாழ்க " என்ற வாசகம் பின்னால் எழுதப்பட்ட ஓர் ஆட்டோவை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். கிட்டதட்ட அதே அளவுக்கு அவரது படங்களுக்கு - குறிப்பாய் அவற்றின் வசனங்களுக்கு - நான் விசிறி. அவர் இயக்கிய‌ படங்களில் வசூல்ராஜா MBBS (மற்றும் நான் இதுவரை பார்க்காத அல்லி அர்ஜுனா ) தவிர மற்ற எல்லாப் படங்களுமே (பொதுவாக பெரும்பாலானோரால் மொக்கை என வர்ணிக்கப்படும் ஜே.ஜே., இதயத்திருடன், வட்டாரம் உட்பட) எனக்குப் பிடிக்கும். ஒட்டுமொத்த திரைக்கதை என்பது அவரது படங்களில் சுமார் தான் என்றாலும் அவற்றின் வசனங்களும், தனித்தனி காட்சிகளும், கதாபாத்திர உருவாக்கமும் மிகவும் பிரத்யேகமானதொரு நுட்பத்தன்மை வாய்ந்தவை. சராசரிக்கு மேலான ஒரு பார்வையாளனுக்கு மிகுந்த சுவாரசியத்தையும் அதன் வாயிலாக ரசிப்புத்தன்மையின் உவப்பையும் உருவாக்க‌ வல்லவை. எழுத்தில் " வாசிப்பு இன்பம் " என்று ஜெயமோகன் அடிக்கடி குறிப்பிடுவதற்கு இணையாய் சினிமாவில் சரண் படங்களைச் சொல்லலாம். " மோதி விளையாடு " என்கிற படத்தை அது வெளியான அடுத்த நாளே மிகுந்த எதிர்பார்ப

இன்னா செய்தாரை...

இன்னா ஒன்று இன்னா இரண்டு இன்னா மூன்று இளையராஜாவின் இசை, மணிரத்னத்தின் படம், ஐஸ்வர்யா ராயின் அழகு போன்ற obvious உச்சங்களையே நிராகரிக்கும் ஒரு விசித்திர‌ தேசத்தில் என் போன்ற ஒரு non-conformist எழுத்தாளனுக்கு இப்படியொரு வரவேற்பு(?!) கிடைப்பதில் ஆச்சரியமில்லை. ஒறுத்து அலுத்து விட்டது. மன்னிக்கவும்! பார்க்க வேறு உருப்படியான ஜோலிகள் காத்திருக்கின்றன. இந்த இடுகைகள் சொல்லும் செய்தியென்ன? பயம், குழப்பம், குரோதம், விரோதம், யாசகம், இழப்பு, சோகம், ஆயாசம், அசட்டுத்தனம், அற்பத்தனம், முட்டாள்தனம், பேடித்தனம், தோல்வி, விரக்தி, வேத‌னை, பொறாமை, பொச்சரிப்பு, இயலாமை, தாழ்வுமனப்பான்மை, குற்றவுணர்ச்சி, முதிர்ச்சியின்மை, உறக்கமின்மை, வயிற்றெரிச்சல், வாயுத்தொல்லை, அஜீரணக்கோளாறு, etc, etc. இத்தனை எதிர்மறையான நோய்க்கூறுகள் நிறைந்திருந்த போதிலும் ஒரே ஒரு நல்ல விஷயம் இவர்கள் மூவரிடமும் பொதுவாய் இருக்கிறது. இவர்கள் அனைவரும் என் எழுத்தை நீண்ட காலமாக தொடர்ந்து தீவிரமாக வாசித்து வருகிறார்கள் என்பதே அது. பிறகு எப்படி இவ்வளவு நுட்பமாய் என் எழுத்தை விமர்சனமோ, நையாண்டியோ செய்ய இயலும்? இதற்காகக்கூட இவர்கள் ஆத்திரத்தில் என

சுந்தர ராமசாமி - ஒரு மதிப்பீடு

மனுஷ்ய புத்திரனும் சிவாஜி கணேசனும் - சாரு நிவேதிதா சாருவுக்கு ஒரு கடிதம் - மனுஷ்யபுத்திரன் மனுஷ்ய புத்திரனுக்கு ஒரு கடிதம் - சாரு நிவேதிதா எனக்கு சுந்தர ராமசாமியைப் பிடிக்கும்; மிகப் பிடிக்கும். எனக்கென்னவோ நான் மனுஷ்யபுத்திரனை விரும்புவதற்கும், சாரு நிவேதிதாவை விமர்சிப்பதற்கும் தலா மேலும் ஒரு காரணம் கூடி விட்டதாகத் தோன்றுகிறது.

காதல் கதை

செடிகொடித் துகிலணிந்த‌ ஆதிகால ஆணும் பெண்ணும் புன்னகைத்துக் கொண்டனர் பின்வரும் இலையுதிர் ருதுவில் முகிழ்ந்தெழக் கூடுமோர் எழுதப்படாத காதல் கதை.

படித்தது / பிடித்தது - 56

கவிதை எழுதாமல் இருந்தாலும் கவிதை கவிதைதான். - இளைய பல்லவன் நன்றி : காஞ்சித் தலைவன்

படித்தது / பிடித்தது - 55

நான் எனக்கு யாருமில்லை நான் கூட......... - நகுலன் நன்றி : நவீன விருட்சம் [ மீண்டும் வாசிக்கிறேன் தொகுப்பு - அழகியசிங்கர் ]

வாமனன் : 3 காரணங்கள்

வாமனன் படத்தை எல்லோரும் பார்க்க நான் சிபாரிசு செய்வதற்கு மூன்று காரணங்கள்: 1.திரைக்கதை 2.ஜெய் 3.வசனம் . வாமனன் என்ற பெயருடைய படத்துக்கு மூன்று அடிக்கு மேல் விமர்சனம் எழுதினால் அது நன்றாயிருக்காது.

ராஜேஷ்குமார் style

Karthikeyan G என்பவரின் பின்னூட்டமும் அதற்கான எனது பதிலும். ############ Karthikeyan G has left a new comment on your post " தமிழ்நாடு : சிறந்த 10 பொறியியல் கல்லூரிகள் ": அட நீங்களும் இளைஞர் தானா, உங்கள் சில இடுகைகள் பல வருடங்களுக்கு முந்தைய ராஜேஷ்குமார் styleல் இருப்பதால் உங்களை கிழவனார் என நினைத்து விட்டேன்.. :-) ############ Karthikeyan G, என்னைக் கிழவன் என்று நினைப்பதில் / அழைப்பதில் பிரச்சனையே இல்லை. ஆனால் ராஜேஷ்குமாருடன் ஒப்பிடுவதில் மாற்றுக்கருத்து இருக்கிறது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஒன்று நீங்கள் ராஜேஷ்குமாரை இதுவரை படித்ததில்லை; அல்லது என்னை இதுவரை படித்ததில்லை . தமிழில் எழுதுகிறோம் என்பதைத் தவிர வேறு ஒற்றுமை எதுவும் எங்களுக்குள் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை (மற்றொரு ஒற்றுமை ஊர் - இருவரும் கோயமுத்தூர்காரர்கள் - ஆனால் அது இங்கு அவசியமில்லை). எனது ஆதர்சமான‌ சுஜாதாவுடன் என் எழுத்தை ஒப்பிட்டாலே எனக்கு கோபம் வரும். அப்படியிருக்க, போகிற போக்கில் நீங்கள் ராஜேஷ்குமாருடன் என்னை ஒப்பீடு செய்திருப்பது கிட்டதட்ட ஒரு கொலைக்கு சமானம். ஆம். “ தினமலரில் கிசு கிசு எழுதும

படித்தது / பிடித்தது - 54

ஆண்டவன் சிரிப்பு ஓரினசேர்க்கை தவறென்று தீர்ப்பெழுதினார் மதகுரு பின்பொறியால் சிரித்தான் படைத்தவன் - செல்வன் நன்றி : உலகின் புதிய கடவுள்

படித்தது / பிடித்தது - 53

கண்ணாடியாலானக் கவிதை.. இக்கவிதையை படித்த பின்புதான் என்னுடைய உண்மையான முகத்தை நீ தெரிந்துக் கொண்டதாகவும் நான் ஒரு துரோகி என்றும் கொலைகாரன் என்றும் சுயநலன்களுக்காக பிறர் வாழ்வைக் கெடுக்கவும் துணிபவன் என்றும் மேலும் இன்ன பிற கெட்டவார்த்தைகளாலும் திட்டிவிட்டு நகர்ந்தாய், நான் இக்கவிதையை முகம் பார்க்கும் கண்ணாடியால் செய்திருந்தேன் என்பதை உன்னிடம் சொல்வதற்கு முன்பாகவே. - Saravana Kumar MSK நன்றி : கனவில் தொலைதல்..

A SPAM MAIL

Image

தமிழ்நாடு : சிறந்த 10 பொறியியல் கல்லூரிகள்

Indian Institute of Technology, Chennai College of Engineering - Guindy, Chennai National Institute of Technology, Trichy P.S.G. College of Technology, Coimbatore Madras Institute of Technology, Chennai Coimbatore Institute of Technology, Coimbatore Government College of Engineering, Coimbatore Thiagarajar College of Engineering, Madurai Alagappa College of Technology, Chennai S.S.N. College of Engineering, Chennai பின்குறிப்பு : சொந்த தேவைக்காகவும், கொஞ்சம் ஆர்வத்தினாலும் கிட்டதட்ட கடந்த‌ பத்து வருடங்களாக இந்திய - குறிப்பாய் த‌மிழக - பொறியியல் கல்லூரிகளை நுட்பமாகக் கவனித்து வருகிறேன். மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை கல்லூரிகளிலும் படித்தவர்களில் தலா ஒருவருடனாவது எனக்கு நேரடியாய்த் தொடர்புண்டு. வேலைவாய்ப்பு, கல்வித்தரம் மற்றும் சமூக மதிப்பு ஆகியவை சார்ந்து என் அனுமானத்தின் அடிப்படையில் இவ்வரிசையை அமைத்துள்ளேன். தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை தொடங்கியுள்ள இந்நேரத்தில், முதல் நான்கு நாட்களுக்கான கலந்தாய்விலாவது மாணவர்களுக்கு இவ்வரிசை (சென்னை ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி. தவிர) பயன்படக்கூடும். கவ

சகா : சில குறிப்புகள் - 4

சகாவின் ரசனையே தனி. அதுவும் பெண்கள் விஷயத்தில் இன்னமும் விஷேசமானது. " கல்யாணமான பொண்ணுடா " என்று நாங்கள் எச்சரித்தால், " முட்டை போட்ட கோழியை சாப்பிடறதில்லையா? அது மாதிரி தான் " என்று சொல்வான். " வயசுக்கே வந்திருக்காதுடா " என்று சொன்னால் " ரொம்ப வசதி, வெட்கப்படற மாதிரி நடிக்க மாட்டா, வேலை சுலபம் " என்பான். எட்டு முதல் முப்பத்தெட்டு வரை வயது வாரியாக மிக விஸ்தாரமானது சகாவின் ராஜ்ஜியம். ********************** சகாவுக்கு சின்ன மார்புப் பெண்கள் தான் ஃபேவரைட். அதனாலேயே அவனுக்கு எழுத்தாளர் சுஜாதாவின் கதாநாயகிகள் அனைவரையும் பிடிக்கும். அப்புறம் ஷோபா, த்ரிஷா, இத்யாதி இத்யாதி. உளவியலின் அரிச்சுவடி கூடத் தெரியாத சகாவின் பெண் நண்பியொருத்தி இதைக் கேள்விப்பட்டு அவனிடம் காட்டமாக சொன்னது: " Male-chauvinism ". சகா புரியாம‌ல் விழிக்க, " பொம்பளைங்க சம்ம‌ந்தப்பட்ட எல்லாமே கைக்கு அடக்கமா இருக்கனும்னு நினைக்கிறது ". ********************** சகா எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசிவிடுவான். வேர்வை துர்நாற்றம் மாதிரியான இப்பழக்கம் தான் மற்றவர்களை அவனிடம் அதி

படித்தது / பிடித்தது - 52

பூட்டிய வீட்டினுள் அலையும் தனிமை பூட்டிய வீட்டினுள் மெல்ல மெல்ல உருவம் பெற்று அறை அறையாய் அலைய தொடங்குகிறது வீட்டின் தனிமை விட்டெறிந்த காலுறையின் நெடி சுவாசித்து கழிவறையின் மூத்திர நாற்றம் நுகர்ந்து நாள்முழுதும் வலம் வந்த அது பின்னிரவில் திரும்பும் என் கரம்பற்றி அமர்த்தி சொல்ல ஆரம்பிக்கிறது மதியம் ஜன்னல்கண்ணாடிக் கொத்தி அதனுடன் பேசிச் சென்ற சிட்டுக்குருவி ஒன்றின் கதையை! - ப்ரியன் நன்றி : ப்ரியன் கவிதைகள்

சகா : சில குறிப்புகள் - 3

சகாவிடம் எப்படித் தான் வந்து விழுகிறாள்களோ தெரியாது. இத்த‌னைக்கும் அவன் அப்படியொன்றும் அழகோ, நிறமோ இல்லை. பணம் கூட நிறைய கிடையாது. பைக் ஓட்டத் தெரியாது. தாலூக் ஆபீஸ் குமாஸ்தா மாதிரி தான் உடையணிவான். அதையும் துவைத்ததாக சரித்திரமில்லை. ஷூ அணிய மாட்டான். பாதி நேரம் கக்கூஸுக்கு போடும் செருப்பு தான். ஆனாலும் அவனுக்கு அத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்ஸ். " பேசனும். விடாம பேசனும். பேசற மாதிரி பேசினா விழாத பொண்ணே கிடையாது உலகத்தில " என்பான். ********************** சகா எஸ்.எம்.எஸ். அனுப்பினானென்றால் ஒன்று 'ஏ' ஜோக்காக இருக்கும்; அல்லது பேலன்ஸ் தீர்ந்து போய் " Call Me.. " என்பதாய் இருக்கும். அவன் அனுப்புவது தான் இப்படியென்றால் அவன் சினேகிதிகள் அவனுக்கு அனுப்புவது இன்னமும் பச்சை. ஒரு நாள் ஆர்வத்தில், " மெசேஜ் மட்டும் தான் இப்படியா இல்ல பேசும் போதும் இப்படித் தானா? " என்று கேட்டேன். " அது இண்ட்ரஸ்ட்டிங்டா. அவளுங்களா ஆரம்பிக்க மாட்டாங்க. நாம கொஞ்சம் கொஞ்சமா தூண்டனும். இதுவும் ஒரு வகையில Oral தானே " என்றான். ********************** சகாவுக்கு சகோதரிகள் கிடையாது. பள

படித்தது / பிடித்தது - 51

அக்காவின் அன்பளிப்பு இடுப்பில் அரவம் சுற்றிய பிள்ளையார் படம் என்றால் அதை வீட்டில் வைக்கக் கூடாது என்பதால் கோவிலுக்கு அதை தந்து விடுவதாக முடிவு செய்தாள் அக்கா.. எனினும் அந்தப் படத்தின் கீழ் எழுதிக் கொடுத்தாள்........ அன்பளிப்பு : ம.தனலட்சுமி என்று....... - இரா. பூபாலன் நன்றி : நவீன விருட்சம்

ச‌மீபத்தைய நல்ல படங்கள்

அடிக்கடி நான் குறிப்பிடும் " ச‌மீபத்தைய நல்ல படங்கள் " என்பவை எவை என்று தெளிவாய் அறுதியிட்டுச் சொல்லி விடுவது எல்லா வகையிலும் உத்த‌மமானது என நினைக்கிறேன். கடந்த ஆறேழு வருடங்களுக்குள் வெளியான தமிழ் சினிமாக்களில் மிக மிக முக்கியமானவை இவை: அழகி - தங்கர்பச்சான் ஆட்டோகிராஃப் - சேரன் காதல் - பாலாஜி சக்திவேல் தவமாய்த் தவமிருந்து - சேரன் வெயில் - வ‌சந்தபாலன் பருத்தி வீரன் - அமீர் கற்றது தமிழ் - ராம் சுப்ரமணியபுரம் - சசிகுமார் பூ - சசி வெண்ணிலா கபடி குழு - சுசீந்திரன் பின்குறிப்புகள் : 1. இப்பட்டியலில் இடம்பெற முயன்று தோற்ற‌ சில மாற்று சினிமா போலிகள்: புதுப்பேட்டை, கல்லூரி, பசங்க, குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், நாடோடிகள், மாயாண்டி குடும்பத்தார், நான் கடவுள், பிதாமகன, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, வாரணம் ஆயிரம், கோடம்பாக்கம், மாயக்கண்ணாடி, ராம், அன்பே சிவம். 2. இதே கால இடைவெளியில் அடிதடி, கவர்ச்சி, காமெடி ஃபார்முலாவிலிருந்து விலகி சுவாரசியமான திரைக்கதையினால் நல்ல entertainerகளாக பரிணமித்த படங்கள் இவை. இவையும் தமிழ் சினி

சகா : சில குறிப்புகள் - 2

" நீங்கள் தானே சகா? " என்று கேட்ட‌வர்களுக்கு அல்லது கேட்க நினைத்த‌வர்களுக்கு என்னிடம் பதிலில்லை. சகாவிடம் சொன்னதற்கு " கடவுள் அல்லது தேவடியாள் என்ற‌ பெயரில் நீ எழுதினால் கூட இதே அசட்டுக் கேள்வியைக் கேட்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பது உன் வேலையில்லை. மீறிக் கேட்டால் கேட்பவனிடம் அவன் தான் சகா என்று சொல் " என்றான். யோசித்துப் பார்த்தால் அது சரியென்றே எனக்குத் தோன்றுகிறது. ********************** சகாவின் பெண் தோழியொருத்தி பெரிய ச‌ண்டைக்காரி. சண்டை முடிந்து அவள் அனுப்பும் எஸ்.எம்.எஸ். தான் ஹைலைட். அது ஓர் உடலுறவு உச்சத்துக்கு சமானமாய் இருக்கிறது என்பான் சகா. அப்படிப்பட்ட ஒரு சண்டைக்குப் பின் அவள் அனுப்பிய குறுந்தகவலைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாய் இரவில் கிளம்பிப் போனவன் மறுநாள் காலையில் தான் அறைக்குத் திரும்பினான். அவள் அனுப்பிய எஸ்.எம்.எஸ்.: " come here you fuck.. ". ********************** கல்லூரி நாட்களில் நாங்களெல்லாம் பரிட்சை தொடங்குவதற்கு முந்தைய சில நிமிடங்களில் பதட்டமாய்ப் புத்த‌கத்தைப் புரட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து நக்கலாய்ச் சிரி

கபடி கபடி கபடி

Image
மாண்புமிகு கே.என்.நேருவின் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ்வரும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் " சுந்தரா டிராவல்ஸ் " ரக பேருந்தில் ஈரோட்டிலிருந்து பெங்களூர் வரை மேற்கொண்ட குளிர் மிகுந்த ஓர் இரவுப் பயணத்தினூடாக திருட்டு வி.சி.டி.யில் பார்த்த போதிலும், அடிப்படையில் ஒரு தேர்ந்த திரைக்கதையை ஆதாரமாகக் கொண்டது என்கிற வகையில் எனக்கு மிகப்பிடித்திருந்தது வெண்ணிலா கபடி குழு . ஒரு தலித்தை நிஜமான நாயகனாக முன்னிறுத்தியிருக்கும் வகையில் இப்படம் எனக்கு மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. கபடி என்கிற விளையாட்டை காவியப்படுத்த முயற்சிக்காமல் அதன் பின்னணியில் சொல்லியிருக்கும் கிராமத்து இளைஞர்களின் வாழ்க்கை அதை விட முக்கியமானது. அப்புறம் படத்தில் காட்டப்பட்டிருக்கும் திருவிழாக்காதலும் அதன் முடிவும் அத்தனை நிஜமாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் நல்வரவு இது. மாரிமுத்து என்கிற இளைஞனின் வாழ்க்கையின் சில இறுதி மாதங்களே இந்த அற்புதமான படத்தின் திரைக்கதையாக மாறியிருக்கிறது. கிராமத்து திருவிழாக்களில் நடக்கும் உரி அடித்தல், ஸ்லோ சைக்கிள் ரேஸ் போன்ற போட்டிகள் நன்றாக பதிவு செய்யப்பட்டிருக்கிறன. சென்னை

உடன்போக்கு உதவிகள்

Image
ஓடிப் போவோர் முதலில் செய்கிற காரியம் உள்ளம் திகட்ட‌ உயிர் அதிரப் புணர்வதுதான். - மகுடேஸ்வரன் ( காமக்கடும்புனல் கவிதைத் தொகுப்பு) ******************** நாடோடிகள் . முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். தமிழ் சினிமாவின் வழக்கமான - ஆனால் யதார்த்தத்தின் தீற்றுகள் ஆங்காங்கே த‌டவிய - வணிகப் படம் என்கிற அளவிலேயே இப்படத்தை என்னால் அணுக முடிகிறது. மற்றப‌டி தமிழ் சினிமா மைல்கற்களான சுப்ரமணியபுரம், பருத்தி வீரன், காதல் போன்றவற்றோடு ஒப்பிடவெல்லாம் படத்தில் ஏதுமில்லை. நண்பனையும் (அல்லது நண்பனின் நண்பனையும் அல்லது நண்பனின் நண்பனின் நண்பனையும் அல்லது an exponential replica of above-said), அவன் காதலியையும் சேர்த்து வைக்க, எல்லா எதிர்ப்புகளையும் மீறி, சொந்த‌க் கவலைக‌ளை ஒதுக்கி, எந்த‌ பரதேசத்திற்கும் பயணிக்கத் தயாராயிருக்கும் நாடோடிகள் வாழ்க்கையின் ஒரு எபிஸோட் என்பதாக கதை சொல்லப்படுகிறது. ஓடிப்போகும் காதலர்களின் பிரச்சனையை காதல் பேசுகிறதென்றால், ஓடிப்போக உதவும் நண்பர்களின் பிரச்சனையை நடோடிகள் பேசுகிறது. ஆனால் கொஞ்சம் தெளிவில்லாமல் பேசுகிறது. படத்தின் ஆதார சுருதியாக முன்வைக்கப்படும் காதலுக்கு உதவ