போர்க்களமும் திருவாசகமும் - 2

Copyright: இப்பாடல் இயக்குநர் ராஜ்மோகனின் 'போர்க்களம்' படத்துக்காக 2005ல் எழுதப்பட்டது. வரிகள் முழுக்க முழுக்க என்னுடையவை. வேறு இடங்களில் பயன்படுத்தும் உரிமையும் என்னையே சாரும். வேறு படங்களில் பயன்படுத்த விரும்புபவர்கள் என் முறையான அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டும்.

**************

Situation: ப்ள‌ஸ் டூ படிக்கும் கதாநாயகன் (பெயர் - பாலா) தான் வசிக்கும் கும்பகோணம் கோயிலை ஒட்டிய தெருவில் நண்பர்களுடன் ஆடிப்படும், தமிழ் சினிமாவின் டிபிகல் ஹீரோ இண்ட்ரோட்க்ஷன் சாங்.

**************

பல்லவி:
கும்பகோணம் ஏரியான்னா பாலான்னு கேளுடா
அம்பிக்குத்தான் தெரியலன்னா ஊருக்கவன் புதுசுடா
எங்களத்தான் கேள்வி கேட்க இங்க வருவது ஆருடா
மாமன் மச்சான் ஆகிடலாம் எங்க கூட சேருடா.

சரணம் 1:
ப‌ள்ளிக்கூடம் போனாலும் படிப்பு மட்டும் வந்ததில்ல‌
வத்தியாரு திட்டாம ஒரு நாளும் இருந்ததில்ல‌
நெனவு தெரிஞ்ச நாள் முதலா எவனையும் மதிச்சதில்லை
இளரத்தத்திமிருல தான் யாரையுமே மிதிச்சதில்ல‌
எங்களுக்குத் தெரியாம எந்தப்பொண்ணும் ஊரில் இல்ல‌
பொம்பளைங்க பின்னாடி இதுவரைக்கும் திரிஞ்சதில்ல‌
வேலைவெட்டி இல்லனாலும் வீட்டுக்குள்ள இருந்ததில்ல‌
வம்புக்குத்தான் போனதில்ல வந்த வம்ப விட்டதில்ல‌
எவ்வளவோ சிரிச்சாச்சு வயிறு மட்டும் வலிச்சதில்ல‌
அழுகைன்னா என்னடா? அதப்பத்தி அறிஞ்சதில்ல‌.

சரணம் 2:
சிகரெட் இல்லாம எந்த நாளும் விடிஞ்சதில்ல‌
சீக்ரெட் எதுவும் எங்களுக்குள் இருந்ததில்ல‌
மண்ணில்லாத சட்டையோட வீட்டுக்குள்ள போனதில்ல‌
எங்க மீச‌ இதுவரைக்கும் எந்த மண்ணும் பாத்ததில்ல‌
சண்டைகள் இல்லாம எந்த நாளும் முடிஞ்சதில்ல‌
அடிதடின்னு வந்துட்டா எங்கள எவனும் ஜெயிச்சதில்ல‌
ஊரச்சுத்தித் திரிஞ்சாலும் அப்பனுக்கு ஆசப்புள்ள‌
எத்தனையோ உறவிருக்கு நட்புப் போல வந்ததில்ல‌
பெத்த வயிறு வேறன்னாலும் நாங்க எல்லாம் வேற இல்ல‌
பொத்தத்தில எங்களுக்கு எதுவுமே எல்லையில்லை.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்