Posts

Showing posts from July, 2016

பரத்தை கூற்று (மின்னூல்)

Image
பரத்தை கூற்று என் முதல் கவிதைத் தொகுப்பு. 2010ல் அதை எழுத்தாளர் சாரு நிவேதிதா டிஸ்கவரி புக் பேலஸில் வைத்து வெளியிட்டார். நூலை அன்று கடுமையாக அவர் நிராகரித்துப் பேசினார். அக்கவிதைகளின் தரம் என்ன என்று அன்றே எனக்குத் தெரியும். ( அப்போதே அதை வெளிப்படையாக எழுதியும் இருக்கிறேன். ) அதற்கு நவீன இலக்கியத்தில் யாதொரு இடமும் இல்லை. அவை எளிமையானவை, நேரடியானவை, கச்சாவானவை. ஒரு மாதிரி எண்பதுகளின் தொன்னூறுகளின் வெகுஜனப் புதுக்கவிதைப் பாணி. மீரா தொடங்கி மு.மேத்தா, வாலி, ந.முத்துக்குமார், தாமரை முதலானோர் குறைந்தபட்சம் தலா ஒரு தொகுப்பு இவ்வகைமையில் எழுதி இருக்கிறார்கள். வைரமுத்து நிறையவே எழுதி இருக்கிறார். (புத்தகத்தைக் கூட அவருக்கே சமர்ப்பணம் செய்திருந்தேன், என்னை அறிமுகம் செய்ததற்காக‌.) அப்படி இருந்தும் சாருவை வைத்துத் தான் அந்நூலை வெளியிட வேண்டும் என நான் பிடிவாதமாய் இருந்ததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அதன் பாடுபொருள். பாலியல் தொழிலாளிகளின் உலகம் பற்றி காமத்தின் அரசியலை தமிழில் அதிகம் எழுதியவர் வெளியிடுவது சாலப் பொருத்தம் என எண்ணினேன். அடுத்தது இலக்கிய ஸ்தானம் தாண்டி அந்த எழுத்தின் பின்னிருந்

ஜெயமோகனும் பாலகுமாரனும்

Image
பாலகுமாரன் உள்ளிட்ட வெகுஜன எழுத்தாளர்களின் இடம் குறித்து ஜெயமோகன் உள்ளிட்ட சீரியஸ் எழுத்தாளர்களின் புறக்கணிப்பை முன் வைத்து எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்திரநாத் துவக்கிய உரையாடலில் நான் பங்கேற்றதன் துண்டு. முதலில் சுரேந்திரநாத்தின் பதிவு : https://www.facebook.com/grsurendar.nath/posts/516578058551855 அதில் நான் இட்ட கருத்துரை : நானும் ராஜேஷ் குமார் தொடங்கி, சுஜாதா, பாலகுமாரன் வழி சுரா, ஜெமோ அடைந்தவன் தான். ஆனால் எல்கேஜியில் ஏபிசிடி கற்றுத் தந்ததாலேயே அந்த ஆசிரியரை நாம் ஐன்ஸ்டைனுக்குச் சமானம் எனக் கொண்டாட முடியாது. சிறந்த விஞ்ஞானிகள் எனப் பட்டியல் எடுக்கையில் நம் எல்கேஜி வாத்தியார் வர மாட்டார். ஆனால் நம் நன்றிக்குரிய நபர்களின் பட்டியலில் நிச்சயம் இருப்பார். அது போல் வெகுஜனத்திடையே வாசிப்பை பரவலாக்கிய வகையில் மொழிக்குச் சேவை செய்தவர் பட்டியலில் பாலகுமாரனுக்கும் சுஜாதாவுக்கும் நிச்சயம் இடம் உண்டு. (இதை ஜெயமோகனும் ஒப்புக் கொள்வார்.) ஆனால் அதற்காக தமிழின் சிறந்த எழுத்தாளர் பட்டியலில் அவர்களுக்கு மிகப் பிந்தைய இடம் தான் தர முடியும் என்கிறார். அது ஒப்புக் கொள்ளக்கூடிய தர்க்கம் தானே? அதற்

மாதொருபாகன் TRILOGY : பிரியத்தின் துன்பியல்

Image
(மாதொருபாகன், ஆலவாயன் & அர்த்தநாரி நாவல்களை முன்வைத்து) கற்பில் ஒழுகியதைவிட களவில் ஒழுகியதில் கண்ணீர் ஒழுகியது. - மகுடேசுவரன் (காமக்கடும்புனல் தொகுப்பிலிருந்து) வாசித்தவரையில் பெருமாள்முருகனின் நாவல்களுள் எனக்குப் பிடித்தமானது கங்கணம் தான். ஆனால் இன்று அவர் உலகப் புகழ் (?!) பெறக் காரணமானது மாதொருபாகன் என்பதாலும், எழுத்தாளர் பெருமாள் முருகன் மரித்து விட்டான் என அவரே அறிவிப்பதற்கு சற்று முன் மாதொருபாகனின் தொடர்ச்சியாய் அவரெழுதியவை அர்த்தநாரி, ஆலவாயன் என்பதாலும் அவற்றைப் பற்றிய கருத்துப் பதியத் தேர்ந்தேன். டிசம்பர் 2010ல் மாதொருபாகன் வெளியான உடனேயே அதை வாசித்திருந்தேன். அப்போது அவரது கங்கணம் நாவலும் பீக்கதைகள் சிறுகதைத் தொகுப்பும் காலச்சுவடு இதழ்களில் வெளியான சில படைப்புகளையும் கடந்து வந்திருந்தேன். சமகாலத் தமிழ் இலக்கியத்தில் எனக்கு மிக உவப்பான மூன்று படைப்பாளிகளுள் ஒருவராக ஆகிப் போயிருந்தார் (இப்போதும் அப்படியே!). பணி நிமித்தமும், எழுத்து வேலைகள் நிமித்தமும் என் வாசிப்பு அருகியிருந்தது என்றாலும் உடனடி வாசிப்புக்கு அதுவே காரணம். கங்கணம் பெருமாள்முருகனின் மாஸ்டர்பீ