Posts

Showing posts from October, 2015

மிஷ்கின் - மின்னூல்

Image
அச்சு நூல்களைக் காட்டிலும் மின் புத்தகங்கள் எதிர்காலத்தில் அதிக முக்கியத்துவம் பெறும் என்பது என் கணிப்பு. சுட்டு விரலில் எச்சில் தொட்டு பக்கங்களைத் திருப்ப முடியாது என்பது தவிர அச்சுப் புத்தகங்களுக்கு இணையானவை தாம் மின்னூல்களும். சில விஷயங்களில் அதனிலும் மேல். உதாரணமாய் காடுகளை அழிக்க வேண்டியதில்லை; கள்ளப் பிரதிக்கான வாய்ப்பு குறைவு; உடன் எடுத்துப் போக சுமை இல்லை. அமேஸான் கிண்டில் கருவி அதில் ஒரு மைல்கல். கடந்த ஈராண்டுகளாகவே அச்சில் வந்த‌ என் நூல்களை, தொகுக்கப்படாத எழுத்துக்களை மின் வடிவில் வெளியிட ஆர்வம் கொண்டிருந்தேன். தமிழ் மின்னிதழும் ச்சீய் மின்னூலும் அவ்வழி முயற்சிகள் தாம். அமேஸான் கிண்டிலில் வெளியிட எத்தனித்த போழ்து அதில் தமிழில் நூல் பதிப்பிக்க‌ அதிகாரப்பூர்வமாக இன்னும் அங்கீகாரம் வரவில்லை என்றறிந்தேன். பிறகு எனது குஜராத் 2002 கலவரம் நூலினை DailyHunt (முன்னாள் NewsHunt ) வழியாக கிழக்கு பதிப்பகம் மின்னூலாகக் கொண்டு வந்ததை ஒட்டி இந்த முயற்சி. ஐ லவ் யூ மிஷ்கின் நான் கடந்த எட்டாண்டுகளாக என் வலைதளத்திலும், சில அச்சு ஊடகங்களிலும் எழுதிய திரை விமர்சனங்களின் தேர்ந்தெடுக்கப்

ஃபீனிக்ஸ் கனவுகள்

Image
கலாமும் நானும் இணைந்து ஒரு புத்தகம் எழுத உத்தேசித்திருந்தோம். இந்திய ராக்கெட் இயல் பற்றித் திப்புசுல்தான் காலத்திலிருந்து ஆரம்பித்து எழுதலாம் என்றார். ‘நான் ரெடி… நீங்க ரெடியா கலாம்?’ என்று எப்போது பார்த்தாலும் கேட்பேன். ‘இதோ வந்து விடுகிறேன்… அடுத்த மாதம் துவங்கிடலாம்யா’ என்பார். இப்போது அவர் ஓய்வெடுத்த பின் அந்தப் புத்தகத்தை எழுதிவிடுவார் என்று எண்ணுகிறேன், இந்திய அரசும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அரிமா ரோட்டரி சங்கங்களும் பள்ளிகளும் சமூக அமைப்புகளும் அவரை விட்டு வைத்தால்! - சுஜாதா (கற்றதும் பெற்றதும், 2003 ) கேள்வி: அப்துல் கலாமுடன் இணைந்து நீங்கள் எழுதுவதாக இருந்த 'இந்திய ராக்கெட் இயல்' புத்தகம் எந்த நிலையில் உள்ளது? பதில்: கைவிடப்பட்டது. - சுஜாதா பதில்கள் (குங்குமம், 2008) இந்திய ராக்கெட் இயல் பற்றி அப்துல் கலாமுடன் இணைந்து நூல் எழுதப் போவதாக சுஜாதா குறிப்பிட்ட போது ஒரு வாசகனாய், ஒரு மாணவனாய், ஓர் இந்தியனாய் மிகுந்த உற்சாகம் கொண்டது நினைவிருக்கிறது. பிறகு அந்த நூல் கைவிடப்பட்டது என்று தெரிந்த போது அளவிலா ஏமாற்றம் கொண்டதும். சுஜாதா மறைந்த ஓரிரு ஆண