Posts

Showing posts from December, 2012

எரிச்சல் தொடர்கிறது

பெங்களூரில் என் வீட்டு வேலைக்காரப்பெண் செய்யும் ஒழுங்கீனச் செயல்கள் குறித்து நான் எழுதியிருந்த‌ பதிவுக்கு எழுத்தாளர் தோட்டா அவர்கள் இட்ட கேள்விகள் கொண்ட‌ ஒரு நீண்ட பின்னூட்டத்துக்கு பதிலான‌ எதிர்வினை இது: ******* அன்புள்ள சி.எஸ்.கே ( @writercsk ) டியர் ஜெகன் (@thoatta) முதல நீங்கள் அவங்கள எந்த எந்த வீட்டு வேலைக்காக சேர்த்தி இருக்கீங்கனே தெரியல. பொதுவா வீட்டு வேலைன்னா என்னன்னு புரிஞ்சுக்கிறது? அத சொல்லுங்க. சமையல் வேலையுமா? சமையல் எப்படியும் நாம தான் செஞ்சாகனும். குழந்தைகளைக் கவனித்துக் கொள்தல் (சோறு ஊட்டுதல், குளிக்கச் செய்தல், குண்டி கழுவுதல், தூங்க வைத்தல், துணி துவைத்தல் - இதில் குழந்தைகள் துணி மட்டும் அடங்கும். இவற்றில் துவைத்தல் தவிர மற்ற எல்லாவற்றிலும் என் மனைவியும் அம்மாவும் உடன் பங்கெடுப்பார்கள். இரு குழந்தைகளில் ஒருவன் அவரது வேலை நேரத்தில் 5 மணி நேரம் இருக்கமாட்டான் ப்ளேஸ்கூல் போய் விடுவான். அதனால் முக்கால்வாசி நேரம் கவனிக்க வேண்டியது ஒரு குழந்தையை மட்டும் தான்) மற்றும் காலையும், மதியமும் உண்ணும் பாத்திரங்கள் கழுவுதல் மட்டுமே அந்தப் பெண்ணுக்குத் தந்திருக்கும் வேலை.

நீயா நானா - ஒரு பாடம்

Image
முகம் பற்றிய விஜய் டிவி நீயா நானா எபிஸோடில் பங்குபெற‌ அழைத்திருந்தார்கள். நேற்றுப் போயிருந்தேன். நான் பேசுவதற்கென தயார்படுத்திக் கொண்டு சென்றதில் முக்கியமற்ற 10% மட்டும் தான் அங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. நானும் அங்கு வந்திருந்த மற்றவர் போல் முகம் டிவியில் வரும் க்யூரியாஸிட்டியில் (மட்டும்) போயிருந்தால் நிகழ்ச்சி எனக்கு ம் உவப்பாகவே இருந்திருக்கும். ஆனால் அங்கே நான் சில விஷயங்கள் பேச விரும்பினேன். அது தான் எனக்கு முக்கியமாய்ப் பட்டது. அது நிகழவில்லை என்பது எனக்கு வருத்தமே. அங்கே சீஃப் கெஸ்டுக்கு மட்டும் தான் (ஓரளவு) அந்த சுதந்திரம் இருக்கிறது. நான் நிகழ்ச்சி சம்மந்தப்பட்டவர்களைக் குறை சொல்லவில்லை. அவர்கள் தேவையும் என் நோக்கமும் வேறு வேறு என்பதால் பார்டிசிபண்டாக கலந்து கொள்வது சரிப்படாது என்று தோன்றுகிறது. 'முள்' நாவலை (கமல்ஹாசன் பாராட்டிய நாவல்) எழுதிய முத்துமீனாள் கூட வந்திருந்தார். அவருக்கும் என்னுடைய‌ நிலைமை தான். ******* நான் பேச எழுதிய‌ குறிப்புகள் :  ஒருவரின் முகத்தை வைத்து அவரது குணாதியங்களைத் தெரிந்து கொள்ள முடியுமா? முதலில் விஞ்ஞானம் இதைப் பற்றி என்ன சொல்கிறது

வாசிப்பை யாசிக்கும் தேவதை

Image
ஆழம் ‍‍-  டிசம்பர் 2012 இதழில் மலாலா யூசஃப்சய் பற்றிய என் கட்டுரை ( ஒரு தேவதையின் கதை ) வெளியாகியுள்ளது. ******* அக்டோபர் 9, 2012. வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பரிட்சை எழுதி விட்டு சில பள்ளி மாணவிகள் பேருந்தில் தம் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். முகம் மூடிய துப்பாக்கி ஏந்திய தாலிபன் ஆசாமி ஒருவன் பேருந்தை மறித்து ஏறி, “உங்களில் யார் மலாலா? சொல்லுங்கள், இல்லாவிட்டால் எல்லோரையும் சுடுவேன்!” என மிரட்டினான். 15 வயதான மலாலா மிரண்ட விழிகளுடன் எழுந்து நின்றாள். அவளை நோக்கி சரமாரியாகச் சுட்டான் இதயமற்ற அந்த முகமூடி. அதில் ஒரு தோட்டா அவளது தலையைத் துளைத்து, கழுத்தில் இறங்கி, தோள்பட்டையில் தேங்கியது. பிரதேசத்தையே உலுக்கிய குரலில் அலறிச் சாய்ந்தாள் மலாலா. * டெட்டிபேர் கட்டியணைத்தபடி உறங்க வேண்டிய பதின்வயதுப் பெண் மலாலா ஏன் தலையில் துப்பாக்கி ரவை வாங்கிச் சரிய வேண்டி வந்தது? பார்க்கலாம். மலாலா யூசஃப்சய் ஜூலை 12, 1997ல் மிங்கோரா என்ற பாகிஸ்தானிய கிராமத்தில் பாஸ்துன் என்ற முஸ்லிம் இனப்பிரிவில் பிறந்தாள். அந்த இனத்தில் பிறந்த ஒரு வீரப்பெண் கவிஞர் மலாலாய் - அதற்கு த

கவிதை நூல்கள் - ஒரு சிபாரிசு

நவீனக் கவிதைகளாக சிலாகிக்கப்படுவனவற்றில் பாதி எனக்கு ஒத்து வருவதில்லை (அல்லது நான் ஒத்துழைப்பு தருவதில்லையோ என்னவோ!). ந.பிச்சமூர்த்தி மிகச்சிறந்த உதாரணம். அவரது கவிதைகளுக்குள் நான் நுழையவே முடியவில்லை. காலச்சுவடு, தீராநதி இதழ்களின் கவிதைகளில் கணிசமானவை எனக்கு இன்னும் புரிவதில்லை. உயிர்மை இவ்விஷயத்தில் பரவாயில்லை. இது தான் என் நவீனக் கவிதை ரசனையின் சுருக்கமான அறிமுகம். டிவிட்டரில் நண்பர் ஒருவர் வரும் சென்னைப் புத்தககாட்சியில் வாங்க நல்ல கவிதை நூல்களைச் சிபாரிசு செய்யச் சொல்லி இருந்தார். நான் வாசித்தவற்றில் எனக்கு உவப்பாகத் தோன்றிய நூல்களை இங்கே சிபாரிசு செய்திருக்கிறேன், ஒரு கவிஞருக்கு ஒரு நூல் என்ற அடிப்படையில் (மனுஷ்யபுத்திரனை மட்டும் அச்சட்டகத்துள் அடைக்கமுடியவில்லை). அதீதத்தின் ருசி - மனுஷ்ய புத்திரன் [உயிர்மை] இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் - மனுஷ்ய புத்திரன் [உயிர்மை] பசித்த பொழுது - மனுஷ்ய புத்திரன் [உயிர்மை] காமக்கடும்புனல் - மகுடேசுவரன் [தமிழினி] நகுலன் கவிதைகள் [காவ்யா] பிரமிள் கவிதைகள் [அடையாளம்] ஆத்மநாம் கவிதைகள் [காலச்சுவடு] சுந்தர ராமசாமி கவிதைகள் [காலச்சுவடு