Posts

Showing posts from September, 2017

கமல் ஹாசனின் அரசியல்

Image
கமல்ஹாசனின் இருபத்தியிரண்டு ஆண்டு தீவிர ரசிகனாகவும் தமிழக அரசியலில் ஆர்வம், அக்கறை கொண்டவனாகவும் கடந்த ஒரு மாதமாக அவரது அரசியல் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். நான் அறிந்த வரை இந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு ஆங்கில மற்றும் தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளுக்கு சிறிதும் பெரிதுமாய் 7 நேர்காணல்கள் அளித்துள்ளார். சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் நீடிக்கும் அந்த நேர்காணல்களின் வழியே துலங்கும் கமல் ஹாசனின் (தற்போதைய) அரசியல் நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்ளும், முயற்சியாகவே இந்தக் கட்டுரையை எழுதிப் பார்க்கிறேன். 1. கமல் ஒரு விஷயத்தில் தெளிவாக‌ இருக்கிறார். அது (இப்போதைக்கேனும்) தேசிய அரசியலை முன்னெடுக்காமல் தமிழக அரசியலில் மட்டும் கவனம் செலுத்துவது. தேவையில்லாமல் பாஜகவைப் பகைத்துக் கொண்டு இங்கே தன் அரசியல் முன்னேற்றங்களுக்குத் தடங்கல்களைச் சந்திக்க‌ அவர் தயாரில்லை. (கமல் ஹாசன் தான் ஒழுங்காக வரிக் கட்டும் நேர்மையான கொம்பன் ஆயிற்றே, பிறகு எதற்கு அவர் மத்திய அரசுக்கு அஞ்ச வேண்டும்? தவறே செய்யாத ஒருவரைப் பிரச்சனையில் சிக்க வைப்பது இந்தியாவில் ஒரு விஷயமா! இங்கே அதிகாரம் என்பது

ஆட்சிக் கலைப்பு அரசியல் ஆயுதமா?

Image
“Power tends to corrupt and absolute power corrupts absolutely. Great men are almost always bad men.” - Lord Acton வெகுஜன மக்கள் மத்தியில் கூட இந்திய அரசியல் சாசனத்தின் ஒரு பிரிவின் எண் பழக்கமாகிப் புழக்கத்தில் இருக்கிறதெனில் அது 356ம் பிரிவு தான். மாநில ஆட்சிக் கலைப்பு. தம் மாநிலத்தை ஆள தாம் தேர்ந்தெடுத்த ஓர் அரசு நியாயமான அல்லது அஃதற்ற காரணத்துக்காக பதவியிலிருந்து நீக்கப்படுவதால் அப்பிரிவு அவர்களின் மன உணர்வுகளோடு நேரடித் தொடர்பு ஸ்தானத்தைப் பெற்று விட்டதெனத் தோன்றுகிறது. ஆட்சி கலைக்கப்பட்டதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மாநிலம் வந்து விடும் என்றாலும் எழுத்துப்பூர்வமாக இந்திய ஜனாதிபதியே அம்மாநில ஆட்சிக்கான பொறுப்பாளர் என்பதால் ஆட்சிக் கலைப்பை ஜனாதிபதி ஆட்சி என்றும் அழைப்பர். (ஜம்மு & காஷ்மீர் மாநிலம் மட்டும் சாசனத்தின் 370ம் பிரிவின் காரணமாக வேறு விதமாகப் பாவிக்கப்படுகிறது என்பதால் அங்கே அதற்குப் பெயர் ஆளுநர் ஆட்சி!) இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த 68 ஆண்டுகளில் இதுவரை 115 முறைகள் இப்பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்பட்டிருக்கின்றன (தமிழகத்தில் மட்டும் 4

பெரியாரும் பிஏ கிருஷ்ணனும்

Image
ஒரு படைப்பிலக்கியவாதியாகவும் (புலிநகக்கொன்றை & கலங்கிய நதி) ஒரு வரலாற்றெழுத்தாளராகவும் (தமிழின் ராமச்சந்திர குஹா என்றே அவரை மதிப்பிடுகிறேன்) என் பெருமரியாதைக்குரியவர் பிஏ கிருஷ்ணன். உயிர்மையில் அரசியல் சாசனத்தை முன்வைத்து நான் எழுதி வரும் தொடர்கட்டுரைகளுக்கு அவர் எழுத்துக்கள் முக்கியத் தூண்டுத‌ல். அவ்வகையில் அவர் என் முன்னோடி. எப்படி ஜெயமோகனுடன் பல கருத்துக்களில் முரண்பட்டு இருந்தாலும் அவரை குரு ஸ்தானத்தில் வைத்திருக்கிறேனோ ஓர் எல்லை வரை பிஏ கிருஷ்ணனும் அப்படித்தான். ஆனால் பெரியார் விஷயத்தில் மட்டும் அவர் தன் சமநிலை துறந்து (அல்லது இழந்து) தொடர்ந்தும், ஆழமாகவும் (அதுவும் குறிப்பாய்ச் சமீப காலங்களில்) வெறுப்பையே வெவ்வேறு விதமாக, பல்வேறு விஷயங்களைச் சாக்கிட்டு எழுதி வருகிறார் என்பது சங்கடத்துக்குரியதே. பிஏ கிருஷ்ணனின் த வயர் கட்டுரையை (Why Do Dravidian Intellectuals Admire a Man as Prickly as Periyar?) அது வெளியான போதே வாசித்து விட்டேன் என்றாலும் உடனடியாய் எதிர்வினையாற்ற இயலவில்லை. நெடுங்காலமாகவே இதில் அவர் பற்றி எனக்கிருக்கும் கருத்தை இத்தருணத்தில் பதிவு செய்து விடுதல் அவசியம்

களவுப் பெருமை

Image
'துப்பறிவாளன்' படத்தை டவுன்லோட் செய்திருக்கிறேன் என்று பெருமையாகவும், பைரஸி எதிர்ப்பை மோசமான ரசனையுடன் கேவலம் செய்தும் பதிவிட்ட ஒருவரை சற்றுமுன் ஃபேஸ்புக்கில் நட்பு விலக்கம் செய்தேன். இது அவர் டவுன்லோட் செய்து பார்ப்பது பிடிக்காமல் அல்ல; அந்த அடிப்படையில் பார்த்தால் 90% பேரை அநட்பிக்க வேண்டியது தான். பிரச்சனை அதுவல்ல. நான் விலகியதன் காரணம் அது பற்றிய குற்றவுணர்ச்சி சிறிதும் இன்றிப் பெருமிதக் கொழுப்புடன் அதை எழுதியதற்காக. அச்செயல் ஒரு க்ரிமினல் மனப்பான்மை கொண்டவராக, பழக ஆபத்தானவராக அவரை அடையாளப்படுத்துகிறது. நாளை பக்கத்து வீட்டுக் குழந்தையின் கழுத்தைத் திருகிப் போட்டு விட்டு அதையும் பெருமையாக அவர் சொல்லக்கூடும். அதை எல்லாம் காணத் திராணியில்லை. திருட்டு டிவிடி / டவுன்லோடில் படம் பார்ப்பது குறித்து என் நிலைப்பாடு எளிமையானதல்ல. கூடவே கூடாது என நான் சொல்லவில்லை. இந்தியச் சூழலில் அது சாத்தியமும் இல்லை என்றே நினைக்கிறேன். நான் எப்போதெல்லாம் ஒரு படத்தைப் பைரஸியில் பார்க்கிறேன்? 1) நான் பெங்களூரில் வசிக்கிறேன் என்பதால் வியாபார நம்பிக்கையற்ற சில தமிழ்ப் படங்கள் இங்கு வெளியாவதில்ல

நீதிக்கதை [சிறுகதை]

Image
நீங்கள் தற்கொலை செய்திருக்கிறீர்களா? இதை வாசித்துக் கொண்டிருப்பதன் மூலம் இல்லை என்று புரிகிறது. குறைந்தபட்சம் தற்கொலை முயற்சி? புதிய பிளேடு கொண்டு நடுங்காமல் மணிக்கட்டில் வெட்டிக் கொண்டிருக்கிறீர்களா? கை, கால்களைக் கயிற்றால் கட்டிக்கொண்டு ஆழக்கிணற்றில் குதித்திருக்கிறீர்களா? அல்லது ப்ளக் பாயிண்ட் உடைத்து மின்சார வயரைப் பற்களில் கடித்திருக்கிறீர்களா? இவை எல்லாம் அதிர்ஷ்டமிருந்தால் தப்பிக்கச் சாத்தியமுள்ள தற்கொலை முறைகள். மரணத்தைக் கொஞ்சம் கிட்டே ஸ்பரிசித்துத் திரும்பலாம். இதுவரை நான் இரு முறை தற்கொலை முயற்சி செய்திருக்கிறேன். முதல் முறை ஈராண்டு முன். ரூப்ராணி என் காதலை மிக அலட்சியமாக மறுத்த போது. அதற்கு அவள் சொன்ன காரணத்தை முன்னிட்டு. சுமாராகத்தான் படிப்பேன் என்பதெல்லாமா நிராகரிக்கக் காரணமாக ஏற்க முடியும்! எங்கள் வகுப்பிலேயே பெரும் பேரழகி அவள். அதை விடக் காரணம் தேவைப்படவில்லை எனக்கு அவளைத் தீவிரமாகக் காதலிக்க. கதவைத் தாழிட்டு விட்டு ஓட்டை இல்லாத ஒரு பாலிதீன் பையினுள் - முந்தைய நாள் தண்ணீர் நிரப்பிச் சோதித்துக் கொண்டேன் - தலையை நுழைத்து, முகத்தை முழுக்க மூடி, கழுத்து வரை இழுத்து,