இந்துக்களின் இஃப்தார்
பன்னெடுங்காலமாய் ஆண்டுதோறும் ரம்ஜான் மாதம் முழுக்க பெங்களூர் ஃப்ரேஸர் டவுன் மாஸ்க் ரோட்டில் (மசூதி சாலை) மாலை முதல் நள்ளிரவு வரை களை கட்டும் ரோட்டோரத் தற்காலிக உணவுக் கடைகள் இம்முறை இல்லை. தடை செய்திருப்பது மசூதி கமிட்டியே தான். அவ்விடத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் இதனால் போக்குவரத்துக்கும் தினசரி நடவடிக்கைகளுக்கும் பெரும் தொந்தரவாய் இருக்கிறது என்றளித்த புகாரின் பேரில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்பகுதியைச் சுற்றி வசிப்பவர்கள் பெரும்பான்மை இஸ்லாமியர் என்பதே என் புரிதல். அதனால் இதில் மதரீதியான வன்மம் ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை. (இதனால் மசூதிக்கு இஸ்லாமியர்கள் குறித்த நேரத்தில் வர முடிவதில்லை என்பதையும் பக்கவிளைவாகச் சொல்லி இருக்கிறார்கள்). மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் போது இது நடந்திருப்பது தான் ஒரே ஆறுதல். பிஜேபி ஆட்சியாக இருந்திருந்தால் இந்துத்துவச் சதியோ எனச் சந்தேகிக்க வேண்டி இருந்திருக்கும். (அப்படி நடந்தால் ஆச்சரியப்படவும் வேண்டியதில்லை என்பது வேறு விஷயம்.) ரம்ஜான் இறுதி வாரத்தில் தீபாவளிக்கு முந்தைய வார இறுதியின் ரங்கநாதன் தெரு போல் அங