Posts

Showing posts from February, 2014

மருத்துவமனையில் பின்காலனிய நாட்டின் கவிஞன்

Image
" ஆம், ஒரு கொலைகாரன் புரட்சிக்காரனையும் மகாத்மாவையும் உருவாக்குகிறான் " - ரமேஷ் பிரேதன் ( காந்தியைக் கொன்றது தவறுதான் தொகுப்பிலிருந்து) * ரமேஷ் பிரேதன் தமிழின் முக்கியமான பின்நவீனத்துவப் படைப்பாளியாகக் கருதப்படுபவர். பிரேம் என்பவருடன் சேர்ந்து ரமேஷ் : பிரேம் என்ற பெயரில் ஆரம்பத்தில் எழுதினார். உயிர்மையின் சுஜாதா விருதை முதல் ஆண்டிலேயே காந்தியை கொன்றது தவறுதான் கவிதைத்தொகுதிக்குப் பெற்றார். அவரது எழுத்துக்களை நான் குறைவாகவே வாசித்திருக்கிறேன். அவர் பிரேமுடன் இணைந்து எழுதிய சில படைப்புகளை கல்லூரிக் காலகட்டத்தில் படித்திருக்கிறேன். இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும் என்ற அபுனைவு நூலில் தான் தொடங்கினேன். அப்போதைய என் வாசிப்புப்படியில் சிக்கலான மொழியமைப்பில் இருந்தாலும் அது பிடித்திருந்தது. பிறகு கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள் என்ற குறுநாவல் தொகுப்பு. அதில் கணிசமான பகுதிகள் புரியவில்லை. மீத இடங்களில் காமம் வழிந்தது. அதைத் தொடர்ந்து சொல் என்றொரு சொல் என்ற அவர்களின் நாவலை நூலகத்தில் எடுத்து வாசித்து முடிக்கவியலாமல் திருப்பினேன். முழுக்கப் புரிய

G2K2K @ CBF2014

Image
சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது குஜராத் 2002 கலவரம் புத்தகம் நல்ல வரவேற்பினைப் பெற்றிருப்பதை அறிகிறேன். கிழக்கு பதிப்பகத்தின் முதல் ஒன்பது நாட்களின் விற்பனையில் டாப் 10 இடங்களுக்குள்ளும் புத்தகக் கண்காட்சியின் முடிவில் 16வது இடத்திலும் வந்திருக்கிறது. புத்தகக் கண்காட்சி விற்பனை அடிப்படையில் இது வரையிலான என் ஐந்து புத்தகங்களுள் இது தான் பெரிய‌ ஹிட். இது மகிழ்வையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. முதல் ஒன்பது நாட்களின் கிழக்கு டாப் 10 பட்டியல்: http://www.badr iseshadri.in/20 14/01/10.html மொத்த புத்தகக்காட்சியின் கிழக்கு டாப் 25 பட்டியல்: http://www.badr iseshadri.in/20 14/02/2014-25.h tml புத்தகக்காட்சியில் நடந்த விற்பனை பற்றிய கட்டுரை: http://www.aazham.in/?p=3820 பொதுவாய் என் புத்தகங்களின் மார்கெட்டிங் பற்றியோ அதில் வரும் ராயல்டி குறித்தோ பெரிதாய் அக்கறை என்று ஏதும் இருந்ததில்லை இதுவரை. சமீபத்தில் நான் போயிருந்த The Times of India Literary Carnival என் எண்ணத்தை சற்றே மாற்றி இருக்கிறது. மேற்சொன்னவற்றில் முறையே என் கடமையும் உரிமையும் இருப்பதை எனக்கு நினைவுறுத்தி இருக்கிறது. ஒர

12 இன்ச் துயரம்

Image
12 Inches . நேற்று மாலை நான் போயிருந்த ஆங்கில நாடகத்தின் தலைப்பு இது. 12 இஞ்ச் நீள XXL ஆண் குறி கொண்ட ஒருவன் அதனால் அனுபவிக்கும் சங்கடங்கள் தான் கதை. ஒரு மணி நேர நாடகம். இடையிடையே லைவ் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடல்களும் இசையும். ஓரிரு பிசிறுகள் / க்ளீஷேக்கள் தவிர்த்து நாடகம் முழுக்க சுவாரஸ்யமாகவே நகர்ந்தது. முக்கிய ப்ளஸ் நல்ல நகைச்சுவை வசனங்கள் (நாயகன் தன் பிரச்சனையைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்கையில் ஆடியன்ஸில் பெண்கள் பக்கம் திரும்பி "என் கண்கள் இங்கே மேலே தான் இருக்கின்றன, இடுப்புக்கு கீழே இல்லை பெண்களே!" என்று சொல்லும் வசனம் ஓர் உதாரணம்). அப்புறம் நடிப்பும் சொல்லிக் கொள்ளும் படியாக‌வே இருந்தது. சைதன்யா என்பவர் ஸ்க்ரிப்ட் எழுதி இருந்தார். அவரே அந்த 12 இஞ்ச் சமாச்சாரம் கொண்டவராகவும் நடித்திருந்தார். துடிப்பான நடிப்பு. ஒரு காட்சியில் நாயகன் கேரட்டைத் துண்டு துண்டாக நறுக்கிக் கொண்டிருப்பார். உச்ச காட்சியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் நுட்பமான சித்தரிப்பு அது. நண்பராக வந்த சிங்கும் நன்றாக செய்திருந்தார். இடையில் வந்த ஒரு பாடலை ஓர் அழகான‌ பெண் மிகச் சிறப்பாகப் பாடினார்

காதல் அணுக்கள் - தொடர்

இன்று காதலர் தினம். இன்றிலிருந்து சரியாக மூன்றாண்டுகள் முன்பு இதே போன்றதொரு வேலண்டைன் தினத்தில் எனது தேவதை புராணம் கவிதைகளை ( காதல் புராணம் என்ற தலைப்பில்) பா. ராகவன் தமிழ் பேப்பரில் தினத்தொடராக 15 நாட்கள் வெளியிட்டார். ஒரு பெண் 7 வெவ்வேறு பருவங்களில் சொல்வதாய் அமைந்த‌ கவிதைகள் என்பதால் என் பெயரின்றி வெளியிடலாம், தொடரின் இறுதியில் சொல்லிக் கொள்ளலாம் என்ற என் விருப்பத்தை ஒப்புக் கொண்டு ஆசிரியர் பெயர் இல்லாமலே அத்தொடர் வெளியானது. இப்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இவ்வளவு பரவலாய்த் தமிழர்கள் இல்லை. அப்போதே அது பரவலாய் நல்ல எதிர்வினைகளைப் பெற்றது. யார் எழுதுகிறார் என்றும் விவாதிக்கப்பட்டது (நான் கூட அவற்றில் கலந்து கொண்டேன்!). அந்த வெற்றி இல்லாமல் அத்தொகுப்பு நூல் வடிவம் கண்டிருப்பது சிரமமே. இப்போது காதல் அணுக்கள் . திருக்குறளில் காமத்துப்பால் என்பது எப்போதுமே எனக்கு வசீகரம். பெயர் காமத்துப் பால் என்றிருந்தாலும் உண்மையில் இவற்றில் பெரும்பாலவை காதலை மற்றுமே பேசுபவை (காமம் என்ற சொல்லே அப்போது காதலைத் தான் குறித்தது). காமத்துப்பாலை ஒவ்வொரு குறளாக எடுத்துக் கொண்டு குறுங

G2K2K : முதல் விமர்சனம்

குஜராத் 2002 கலவரம் புத்தகத்திற்கு வந்திருக்கும் முதல் விமர்சனம் நா. ராஜு ( @naaraju ) எழுதியது. இது நூல் குறித்த நேர்மறை கருத்துடன் சுருக்கமான‌ அறிமுகக் கட்டுரையாக அமைந்துள்ளது. நற்சொற்களுக்கு நன்றிகள் உரித்தாகுக. https://www.facebook.com/naaraju0/posts/743628735648711 இதில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்று இருக்கிறது. கட்டுரையாளர் நா.ராஜுவே தற்போது குஜராத்தில் தான் வசிக்கிறார்! *

பிட்காய்ன் என்ற மின்பணம்

Image
சென்ற ஆண்டின் இறுதியில் குங்குமம் இதழில் ( 9.12.2013 ) வெளியான Bitcoin பற்றிய என் கட்டுரையின் முழு வடிவம். ******* சம்பவம் 1 : கடந்த மாதம் 23 ம் தேதி ட்ரேட்ஃபோர்ட்ரெஸ் என்ற தனியார் ஆஸ்திரேலிய இணைய வங்கி ஹேக் செய்து கொள்ளை அடிக்கப்பட்டது - 1.3 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (ஏழரை கோடி ரூபாய்). அவ்வங்கி கையாண்டது வழக்கமான பணம் அல்ல; பிட்காய்ன் என்றொரு புதுரக கரன்ஸியை. சம்பவம் 2 : கடந்த மாதம் 25ம் தேதி அமெரிக்காவின் எஃப்பிஐ அமைப்பு சில்க்ரோட் என்ற ரகசியமாய் இயங்கி வந்த சட்ட விரோத போதை மருந்து கும்பலின்  பிட்காய்ன் கணக்கைக் கைப்பற்றியது - 28.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (180 கோடி ரூபாய்). ஒட்டுமொத்தமாய் புழக்கத்தில் இருக்கும் பிட்காய்ன்களில் இது 1.5%. சம்பவம் 3 : கடந்த மாதம் 29ம் தேதி கனடாவில் ரோபோகாய்ன் என்ற முதல் பிட்காய்ன் ஏடிஎம் திறக்கப்பட்டது. அதன் மூலம் ஒரே வாரத்தில் ஒரு லட்சம் கனடா டாலர் (60 லட்சம் ரூபாய்) பரிவர்த்தனை நடத்துள்ளது. பெர்லின், லண்டன், நியூயார்க், டொரான்டோ, ஹாங்காங் நகரங்களிலும் ரோபோகாய்ன் ஏடிஎம்கள் வரவுள்ளன. சம்பவம் 4 : 8500 மாணவர்களைக் கொண்ட சிப்ரஸின் ப

உங்க வீட்டுப் பொண்ணு

Image
சென்ற பொங்கல் தினத்தன்று விஜய் டிவியில் சிவகார்த்திகேயனை வைத்து எங்க வீட்டுப் பிள்ளை என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். அதில் சில சங்கடத்துக்குரிய விஷயங்கள் இடம் பெற்றன (குறைந்தபட்சம் என்னளவில்). கல்லூரிப் பெண்கள் சிலர் அவரது ரசிகைகள் எனக் காட்டப்பட்டு மேடையிலேயே குறும்புத்தனம் என்ற பெயரில் சில ஆபாசங்களில் ஈடுபட்டார்கள் (மறுபடி என்னளவில் தான்). அதன் காணொளிகளை இங்கே பார்க்கலாம் (விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் ஏற்றப்பட்டிருக்கும் இந்நிகழ்ச்சியின் காணொளி யில் இந்த சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன): http://www.dailymotion.com/video/x19n58l_engaveettu-4_shortfilms (07:00 to end) http://www.dailymotion.com/video/x19n5qh_engaveettu-5_fun (start to 04:00) ஒருவர் சிவகார்த்திகேயனுக்கு பொங்கல் ஊட்டி விட்டு தனக்கும் அவரை ஊட்டி விடச் செய்கிறார். ஒருவர் சிவகார்த்திகேயனின் கன்னத்தைக் கிள்ளி விட்டு தன் கன்னத்தையும் அவரைக் கிள்ள வைக்கிறார். ஒருவர் லிஃப்ட்டுக்குள் தீபிகா படுகோனுடன் மாட்டுக் கொண்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்கிறார். ஒருவர் அவர் தன்னைக் கையில் தூக்கிக