என் சாதிக்காரருக்கு ஓட்டு போடுங்கள்!


ஞாநி என்ற எழுத்தாளரை எனக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தெரியும். அதாவது அவரது எழுத்துக்களைத் தான் சொல்கிறேன். என் பதின்மங்களிலிருந்து அவரை வாசிக்கிறேன். அவரது ரசனை சார் நிலைப்பாடுகளிலிருந்து orthogonal-ஆக விலகி இருந்தாலும் சமூகம் மற்றும் அரசியல் விஷயங்களில் அவரது கருத்துக்களோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறவன் (ஜெயமோகன் விஷயத்தில் அப்படியே நேர்எதிர்). அதிகம் பேருடன் அப்படி இருக்க சாத்தியமில்லை என்பதால் எனக்கு முக்கியமாகிறார்.

அவரது கட்டுரைகள் வழியாக மட்டுமே அவர் பழக்கம். ஆனந்த விகடனில் அவர் 'ஓ பக்கங்கள்' எழுதிக் கொண்டிருந்த வரை தொடர்ந்து வாசித்து வந்தேன். என்வரையில் தமிழின் மிக முக்கியமான 100 நூல்களுள் ஒன்று அது. நேரடியாக அவருடன் உரையாட நேர்ந்த சந்தர்ப்பங்கள் குறைவே. அவர் வலைதளம் தொடங்கிய போது அவரை மனப்பூர்வமாக வரவேற்றிருந்தேன். 49-ஓ என்ற விஷயம் பற்றி அவர் சொல்லித் தான் எனக்குத் தெரியும். பிற்பாடு அதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அவர் 'கோலம்' என்ற திரைப்பட இயக்கத்தைத் தொடங்கிய போது அதை மிக எதிர்பார்த்திருந்தேன். பிறகு அது குறித்து சில கேள்விகளை அவருக்கு வைத்திருந்தேன் (ஏனோ அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. எனினும் அவர் மீதிருந்த மரியாதை மாறவில்லை. பிறகு சென்ற ஆண்டு ஒரு ஃபேஸ்புக் பதிவில் எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இதைக் குறிப்பிட்டுக் கேட்க, மிகப் பொறுப்புடனேயே பதிலளித்திருந்தார்). என் முதல் கவிதைத் தொகுதியான 'பரத்தை கூற்று' வெளியான போது அவருக்கு அனுப்பி இருந்தேன்.

அவர் ஃபேஸ்புக்கில் எழுதத் தொடங்கிய போது பெண்கள் குடிப்பது பற்றியும் ரஜினிகாந்த் - எஸ்.ராமகிருஷ்ணன் பற்றியும் அவருடன் விவாதங்கள் நிகழ்த்தி இருக்கிறேன். அவருடைய 'ஏன் நான் கலைஞர் கருணாநிதியை எதிர்க்கிறேன்?' என்ற கட்டுரை எனக்குப் பிடித்தமான ஒன்று. 'தீம்தரிகிட' வழியாக அவர் வெளியிட்ட பாரதியின் 'அன்பென்று கொட்டு முரசே!' என்ற கோட்டோவிய சுவரொட்டி நெடுநாட்கள் என் அறையை அலங்கரித்திருந்தது. சென்னை புத்தகக் காட்சிகளில் பலமுறை அவரை நேரில் பார்த்தும் ஏனோ தயக்கத்தில் அவருடன் பேசாமல் விலகி நடந்திருக்கிறேன். தனிப்பட்டு எனக்கு சில அரசியல் நிகழ்வுகளில் குழப்பம் ஏற்பட்ட போது தன் ஆணித்தரமான வாதங்களின் வழி என் சிந்தனையைச் செறிவூட்டி தெளிவு படுத்தி இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாய் என் முதல் குழந்தைக்கு ஞானி என்று பெயர் சூட்டியதில் ஞாநியின் ஆளுமையின் மீதிருந்த மதிப்பும் ஒரு முக்கியமான காரணம். சமீபத்தில் அவருக்கு உடல் நலம் குன்றிய போது மனம் சஞ்சலம் கொண்டது.

இவை யாவும் அவரை விட என்னைப் பற்றிச் சொல்வதாகத் தோன்றினாலும் அவருடன் எனக்கு இருக்கும் கருத்துப்பூர்வ உறவை மீள்பார்வை செய்திட அவசியமாகிறது.

*

அவருடைய கருத்துக்களின் வீச்சு விஸ்தாரமானது. பல ஆண்டுகளாக குறிப்பிடத்தகுந்த எல்லா அரசியல் நிகழ்வுகளிலும் தன் நிலைப்பாட்டை வலிமையாகப் பதிவு செய்து வருகிறார். அது ஒரு முக்கியமான சமூகப் பங்களிப்பு. சமகாலத்து அரசியல் விமர்சகர்களில் அவரளவுக்கு வெகுஜனத்தைச் சென்றடைந்த வேறு ஒருவர் இல்லை என்பேன்.

50களில் பிறந்த பிராமணர் என்ற போதிலும் எந்தச் செயலிலும் பார்ப்பனியத்தை வெளிப்படுத்தியவரோ இந்துத்துவத்தை ஆதரித்தவரோ இல்லை. ஆரம்ப காலம் முதல் பிஜேபி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளை விமர்சித்து வருகிறார் என்ற அடிப்படையில் ஓர் ஒரிஜினல் செக்யூலர் ஆசாமியாக அவர் மீது பெருத்த மரியாதை உண்டு.

தான் ஆன்மசுத்தியுடன் நம்பும் சித்தாந்தங்களின் அடிப்படையில் எந்த விஷயத்திலும் தர்க்கரீதியாக சமரசமின்றி தன் கருத்தைப் பதிவு செய்கிறவர் அவர் என்பதே இத்தனை ஆண்டுகளின் கணிப்பில் ஞாநி மீது எனக்கு இருக்கும் பிரதான அபிப்பிராயம். அதாவது அவர் ஒரு நேர்மையான அறிவுஜீவி எழுத்தாளர் என்பது தான் என் மனதில் பதிவாகி உள்ள அவர் பற்றிய பிம்பம். அவையடக்கத்தை ஒத்தி வைத்து விட்டுப் பார்த்தால் என்னையும் நான் அவ்வாறானவன் என்றே நம்புகிறேன். இந்தப் பதிவின் தலைப்பில் என் சாதி என்று சொல்லி இருப்பது அந்த அடிப்படையில் தான். அந்த சுயசாதி அபிமானத்தின் காரணமாக மட்டும் அவருக்கு ஆதரவாக உங்களிடம் வாக்கு கோருகிறேன்.

*

ஆலந்தூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி என்ற எளிய மக்கள் கட்சியின் வேட்பாளராக கடந்த வாரம் ஞாநி அறிவிக்கப்பட்டிருக்கிறார். முதலில் வாழ்த்துக்கள்.


பாராளுமன்றத் தொகுதி என்ற ஒப்பீட்டளவில் மிகையான இலக்கை முயலாமல் ஓரளவு நம்பத் தகுந்த சட்டமன்றம் என்ற யதார்த்த லட்சியத்தைத் தீர்மானித்திருப்பதற்கே முதலில் பாராட்ட வேண்டும் (அதில் எதிர்மறையும் உண்டு என்பது வேறு விஷயம். ஏனெனில் ஆலந்தூர் தொகுதி மக்கள் தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு வேட்பாளருக்கும் - ஆம் ஆத்மி இதுவரை அங்கு வேட்பாளரை நிறுத்தவில்லை - ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு ஞாநிக்கும் ஓட்டளிக்க வேண்டுமென்ற முரண்பாடு).

ஆம் ஆத்மி கட்சியின் மீது எனக்கு குழப்பங்கள் உள்ளன; அவநம்பிக்கைகள் இருக்கின்றன; கேள்விகள் பதிலற்றே நீடிக்கின்றன. இலங்கைத் தமிழர், தமிழக மீனவர், இட ஒதுக்கீடு, அணு உலைகள், பொருளாதார வளர்ச்சி, வெளியுறவு போன்ற பல விஷயங்களில் அதன் துல்லியமான நிலைப்பாடு என்னவெனத் தெரியவில்லை. ஊழல் உள்ளிட்ட நான்கைந்து விஷயங்களையே அது முக்கிய எதிர்ப்பு வஸ்துவாகக் கட்டமைக்கிறது. பெரும்பாலான அதன் மேல்மட்டத் தலைவர்கள் விளம்பரப் பிரியர்களாகவும் அதிர்ச்சி மதிப்பீடுகளை விரும்பவர்களாகவும் இருக்கிறார்கள். எதிலும் நீண்ட கால விளைவுகளை உத்தேசிக்காமல் உடனடி பலன்களை எதிர்பார்ப்பவர்களாக இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாய் அவர்களிடம் நிதானத்தை உதாசீனம் செய்த ஒரு பதற்றம் தெரிகிறது. டெல்லியைத் தவிர்த்துப் பார்த்தால் இன்னும் அக்கட்சியில் சாதாரணர்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. அதை ஆதரிக்கும் பொதுமக்களின் மனோபாவம் அதற்கான காரணங்களை மேலோட்டமானதாகவே முன்வைக்கிறது.  அதன் மறைமுக கார்பரேட் ஆதரவு நிலைப்பாடுகள் அதிகார பரவலாக்கத்திற்கே எதிரானது. இப்போதைக்கு அக்கட்சி எனக்கு வலதுசாரிக் கட்சியாகவே தென்படுகிறது. இது இன்னுமொரு காங்கிரஸாக, இன்னுமொரு பிஜேபியாக ஆகும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதனால் அதை நேரடியாய் ஆதரிப்பதில் எனக்கு சங்கடங்கள் உண்டு.

ஆம் ஆத்மி என்பது ஒரு வருடமே வயதான குழந்தை என்கிற காரணம் இது போன்ற தடுமாற்றங்களுக்கு சொல்லப்பட்டாலும் என் இப்போதைய நிலைப்பாடு இது தான்.

ஆனாலும் அதை எல்லாம் சற்றே மறந்து விட்டு ஞாநி என்ற தனி மனிதருக்கு என் உளப்பூர்வமான ஆதரவை அளிக்கிறேன். ஆலந்தூர் தொகுதியின் மக்களிடமும் அவருக்கு ஆதரவை அளிக்க வேண்டுகிறேன். மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட ஒருவர், சுயநலமற்ற நேர்மையான ஒருவர், சிந்திக்கக்கூடிய ஒருவர் உங்கள் முன் வாக்கு கேட்டு நிற்கிறார். மற்ற எந்தக் கட்சியின் வேட்பாலரை விடவும் எல்லா அடிப்படைகளிலுமே ஞாநி தான் முன்னுக்கு நிற்பார் எனத் தோன்றுகிறது. அதனாலேயே அவரை ஆதரிக்க வேண்டியது அங்கிருக்கும் ஒவ்வொருவரின் நியாயமான கடமை ஆகிறது. அடுத்த 30 நாட்களின் பிரச்சாரத்தில் இதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

அவர் இதுவரை அளித்துள்ள பேட்டிகளில் நான் கவனித்த ஒரு விஷயம் அவர் தன்னை விட ஆம் ஆத்மி கட்சியையே முன்வைக்கிறார். திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றாய் ஆம் ஆத்மி வர வேண்டும் என்ற கோஷத்தையே முன்னெடுப்பார் எனத் தெரிகிறது. மாறாக அங்கே நிற்கும் வேட்பாளர்களை விட தான் எந்த வகையில் தனித்துவமானவன் என்றும் மற்றவர்களை விட தான் ஜெயித்தால் தொகுதியின் பிரச்சனைகளை எப்படி திறமையாகக் கையாள்வேன் என்றும் மக்கள் மனதில் நிறுவுவதன் வாயிலாகவே அவர் ஓட்டுக்களை அறுவடை செய்ய முடியும் என்பதே என் புரிதல். ஆலந்தூரில் வரும் ஏதேனுமொரு லோக்கல் டிவியை பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தினால் இன்னமும் சிறப்பு.

இப்போதைக்கு தேர்தல் வாக்குறுதிகளாக "சட்டமன்றக்கூட்டத்தொடரை ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன். தொகுதி மக்களுக்காக கேள்விகளைத் தொடர்ந்து சபையில் முன்வைத்துக் கொண்டே இருப்பேன். ஏற்கனவே உள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், தேவையான அவசர திட்டங்களை செயல்படுத்தவும் பாடுபடுவேன். எனது தொகுதியில் உள்ள மதுக்கடைகளை நீதிமன்றம் சென்றாவது மூட முயற்சி செய்வேன்." எனச் சொல்லி இருக்கிறார். இவை எல்லாமே மிக உவப்பானவை.

ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரையும் ஒரே மேடையில் சந்திக்கச் செய்து இத்தேர்தலில் அத்தொகுதி வாக்காளர்கள் கவனிக்க வேண்டிய அரசியல் பிரச்சினைகள் பற்றி ஓர் ஆரோக்கியமான விவாதம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் படி லயன்ஸ், ரோட்டரி மற்றும் இதர குடியிருப்போர் நல அமைப்புகளுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார். இதுவும் முக்கியமான நகர்வு. நடக்கிறதோ இல்லையோ இந்த உரையாடலுக்கான அவசியத்தை மக்களுக்கும் சக கட்சிகளுக்கும் நினைவுறுத்தி இருக்கிறார். எதிரணிகளில் திராணியுள்ளவர்கள் இருந்தால் இதை எதிர்கொள்வார்கள்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில் தொகுதிக்கு என்ன செய்வார் என்பது பற்றிய ஒரு கேள்விக்கு தடுமாற்றங்கள் இருந்தன. இது ஆரம்பம் தான் என்பதால் இருக்கலாம். இனி ஆலந்தூர் பற்றி மேலும் ஆய்வு செய்து விட்டு தொகுதிசார் வாக்குறுதிகளின் பட்டியலோடு வர வேண்டும். அது தான் தேர்தல் ஆட்டத்தின் முக்கியப் பகுதி. பார்க்கலாம்.

முதல் முறை எனினும் தேர்தலில் ஜெயித்தால் ஞாநியால் ஆலந்தூர் தொகுதிக்கான நலப்பணிகளைத் திறம்பட முன்னெடுக்க முடியும் எனத் திடமாக நம்புகிறேன். தமிழக சட்டமன்றத்தில் அவரது குரல் தனிப்பட்டு ஒலிக்கும். சமூக வலைதளங்களிலேயே முடங்கி விட்ட கலகக் குரல்கள் அரசாங்கத்திடம் கம்பீரமாய் ஒலிக்க இது ஒரு வாய்ப்பு.

ஆம் ஆத்மி கேட்பாளர்களின் மீது பொதுவாக வைக்கப்படும் வெளிநாட்டு டாலர்களில் புரளும் என்ஜிஓ போன்ற எந்தக் குற்றச்சாட்டையும் ஞாநியின் மீது வைக்க முடியாது. ஞாநி போன்ற கறை படியாத அறிவுஜீவிகள் நேரடி அரசியலுக்கு வருவதை நாம் அங்கீகரித்து ஆதரவளிக்க வேண்டும். அவர்கள் கணிசமான வாக்குகள் பெற முடிந்தால், ஒருவேளை ஜெயிக்கவும் முடிந்தால், ஜெயித்த பின் தொகுதிக்கு ஆக்கப்பூர்வமான பணிகள் செய்ய முடிந்தால் பிற வலுவான அரசியல் கட்சிகளுக்கு அது அழுத்தத்தைக் கொடுக்கும். அடுத்த முறை தகுதி வாய்ந்த ஆட்களைத் தான் நிறுத்த வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படும். அந்த மாற்றத்தைத் தான் நான் இதன் வழியே எதிர்பார்க்கிறேன்.

தமிழக அளவிலாவது ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகளை சரியான திசையில் திருத்தி சீர்படுத்தவும் ஞாநி, எஸ்பி உதயகுமார் போன்றவர்களின் பங்களிப்பு உதவக்கூடும்.

இன்னொரு முக்கிய விஷயம். அவர் தன் உடல் நலத்தில் மிகுந்த அக்கறையோடு இருக்க வேண்டும். தன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதிலும் சமரசம் கூடாது. அரசியலில் ஜெயிப்பது தோற்பது தாண்டி நெடிய ஆயுளோடு பல்லாண்டுகள் அவர் ஓர் எழுத்தாளராக, சமூக அரசியல் விமர்சகராக உற்சாகமாகப் பங்காற்ற வேண்டும்.

*

தேர்தல் குறித்த ஞாநியின் சில நேர்காணல்கள் / கட்டுரைகள்:

1) ஏன் ஆம் ஆத்மியில் நான் சேர்ந்தேன்? (கல்கி இதழ்)

2) இட்லிவடை தளத்திற்காக பத்ரி சேஷாத்ரி எடுத்த பேட்டி


3) TNTV-SBNN செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி

*

தேர்தல் நிதி வசூல் குறித்த ஞாநியின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்:

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதென்றாலே 30 நாட்களுக்கு தினசரி சராசரி செலவு ரூ 50 ஆயிரம். இது மிகக் குறைந்தபட்ச செலவாகும். இதே 30 நாட்களில் தேர்தல் ஆணையம் அனுமதித்த உச்சவரம்பின்படி செலவிட்டால், தினசரி சுமார் 83 ஆயிரம் வரை செலவிடலாம். நடைமுறையில் பெரும் கட்சிகள் எல்லாம் தினசரி பத்து லட்சம் ரூபாய்க்கு மேல்தான் செலவிடுகின்றன. எளிய மக்கள் கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகிய நான் தினசரி 50 ஆயிரம் செலவுக்கு பணம் திரட்டவே மக்களிடம் உதவி கோருகிறேன். ஆயிரம் பேர் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் கொடுத்து உதவி, அதிலிருந்தே தேர்தல் செலவுகளைச் செய்யவேண்டும் என்பதே கட்சியின் கொள்கை. குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் மக்களிடம் திரட்ட விரும்புகிறேன். என் நண்பர்களிடம் சொந்தக் கடனாக இன்னொரு ஐந்து லட்சம் ரூபாய்களை திரட்ட முயற்சித்து வருகிறேன்.

எதிலும் பகிரங்கத்தன்மை, நேர்மை என்பவையே என் கோட்பாடுகள். ஆம் ஆத்மி கட்சியின் கோட்பாடுகள். இதில் இணைந்து தேர்தலில் போட்டியிடும் என் சக வேட்பாளர்களின் கோட்பாடுகள். தேர்தலில் இறுதி வெற்றி மட்டுமல்ல , அதற்கான வழிமுறைகளும் முக்கியமானவை என்று நான், நாங்கள் நம்புகிறோம்.

நன்கொடை அனுப்ப வேண்டிய கணக்கு விவரம்:
பெயர்: ஞாநி சங்கரன்
கணக்கு எண்: 149201000018516
வங்கிக் கிளை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கே.கே.நகர், சென்னை 78
IFSC Code: IOBA0001492


*

ஞாநி என்கிற சக பயணிக்கு நேரடியாய் களத்தில் தோள் கொடுத்து மக்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதே என் ஆசை. ஆனால் ஆம் ஆத்மி என்கிற லேபிளும் என் தனி வாழ்வின் அழுத்தங்களும் குறுக்கே நிற்கின்றன. நான் இதுவரை எந்த அமைப்புகளோடும் என்னை அடையாளப்படுத்திக் கொண்டவன் இல்லை. அது என் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் என்றே நினைக்கிறேன். அதனால் ஆலந்தூர் போய் என் கொள்கைப்படி ஆம் ஆத்மியை ஆதரிக்கவில்லை, ஆனால் ஞாநியை ஆதரிக்கிறேன் என்று நான் பேசிக் கொண்டிருந்தால் கேலிச்சித்திரமாகி விடும். பரஸ்பரம் மனச் சிராய்ப்புகள் வரக்கூடும். ஓர் எழுத்தாளனான நான் அங்கே பேச்சாளனாய் இருக்கலாம் என்பது தாண்டி வேறு என்ன உருப்படியாய்ப் பங்காற்றி விட முடியும் என்பதிலும் கேள்விகள் உண்டு. தவிர, கதர் குல்லா போட்டால் என் முகத்துக்கு அத்தனை நன்றாகவும் இராது. 

ஞாநி என்கிற நேர்மையான சிந்தனையாளர் ஜெயிக்க வேண்டும். நிச்சயம் ஜெயிப்பார். உண்மையில் இது ஆலந்தூர் தொகுதி மக்களுக்கு வைக்கப்படும் தேர்வு தான்!

***

Comments

இப்ராஹீம் said…
அஸ்ஸலாம் அலைக்கும் ....அதெல்லாம் நாட்டை மாற்ற உதவாது...இந்தியா நல்லதொரு நாடாக பெண்களுக்கு பாதுகாப்பான பாலியல் குற்றங்கள்,குடும்ப வன்முறைகள் இல்லாத நாடாக வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இஸ்லாமிய ஆட்சிதான்.அந்த மாபெரும் அருட்கொடையாளன் அருளால் அது விரைவில் நடந்தேறும்.இன்ஷா அல்லாஹ்.
இஸ்லாமிய ஆட்சி அமைந்த பிறகு கடவுள் இல்லை என்று மறுப்பு சொல்லி திரிபவர்கள் கடவுள் என்று கல்லை வணங்குபவர்கள் ஆகியோருக்கு மிக கடுமையான தண்டனை வழன்க்கப்பட வேண்டும்.பாலியல் குற்றம் செய்யும் நாய்கள் ரோட்டில் வைத்து கொல்லப்பட வேண்டும் அவர்கள் வாழ எந்த தகுதியும் அற்றவர்கள்.அதே போல இஸ்லாமியர்களை கொன்று குவித்த நரவேட்டை நாய்கள் தூக்கிலிடப்படுவார்கள். அதே போல கந்துவட்டி மீட்டர் வட்டி ஆகிய தீமைகளை செய்து மக்களை வாட்டுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.கலப்படம் ஒழியும்.வட்டி ஒழியும்.அமைதி நிலவும் இன்ஷா அல்லாஹ்..இந்நாள் விரைவில் வரும்....குதா ஹஃபிஸ்...
Anonymous said…
மிக நன்று! தெளிவான நடையில் எழுதப் பட்டுள்ள கட்டுரை! ஞாநியை எதிர்த்து முகநூலில் எழுதுபவர்கள் இதைப் படிக்க வேண்டும்!
சிந்திப்பவன் said…
Brilliant articulation.ம்ம்ம்ம் உச்ச நீதி மன்ற முன்னணி வழக்கறிஞராக இருக்கவேண்டியவரெல்லாம் blog எழுதிகொண்டிருக்கிறார்கள்.இது நமது அதிர்ஷ்டமா துரதிருஷ்டமா?
அஞ்ஞானி said…
ஞானிக்கும் உனக்கும் என்ன வேறுபாடு?ரெண்டு பெரும் போலி செக்கூலரிஸ்டுகள்.மாறி மாறி பேன் பாத்துக்குங்க
@இப்ராஹீம்

இந்தியா இந்தியாவாகவே நீடிக்கும். அந்த இந்தியாவிலேயே இந்துக்களும் முஸ்லிம்களும் பிரச்சனை இன்றி சுதந்திரத்துடன், சகோதரத்துவத்துடன் சமத்துவத்துடன் வாழ்வார்கள். மற்றபடி, இந்தியா இந்துக்களின் தேசமாகவோ, முஸ்லிம்களின் தேசமாகவோ ஒருபோதும் மாறாது.
இப்ராஹீம் said…
மற்றபடி, இந்தியா இந்துக்களின் தேசமாகவோ, முஸ்லிம்களின் தேசமாகவோ ஒருபோதும் மாறாது.////...
.
.
அதையும்தான் பார்ப்போம்.நேற்றுகூட சவுதியில் நாத்திகர்களை தீவிரவாதிகள் என்று அறிவித்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதே போன்ற சட்டம் இந்தியாவுக்கும் வேண்டும்.சல்மான் ருஷ்டி தஸ்லிமா மனுஷ்ய புத்திரன்போன்ற சாத்தானின் கைக்கூலிகளுக்கு இங்கே இடமில்லை.ஏற்கெனவே சல்மான் ருஷ்டி தஸ்லிமா போன்ற மேல்நாட்டு அல்லக்கைகளை இந்தியாவுக்குள் விடாமல் செய்ததே எங்களின் முதல் சாதனை.சாத்தானின் வேதங்கள் என்ற விஷம புத்தகத்தை இந்தியாதான் முதலில் தடை செய்தது.அதுவும் எங்களது வெற்றிதான்(இன்ஷா அல்லாஹ்).ஷாஹ் பானு வழக்கில் ராஜீவ் அரசு எங்களுக்கு சாதகமாக முடிவெடுத்தது.காரணம் இசுலாமியரிகளின் சட்டப்படி வாழ அவர்களுக்கு உரிமை இருக்கு.மதசார்பற்ற நாடு என்ற பேரில் எவனோ உருவாக்கிய சட்டங்களை எங்கள் மீது நீங்கள் திணிக்க முடியாது.விடவும் மாட்டோம்.இதேபோல இந்தியாவில் சிறுசிறு மாற்றங்கள் எங்களுக்கு சாதகமாக வருகிறது மாஷா அல்லாஹ்.இந்தியா என்பது காலம் காலமாய் மதசார்பற்ற நாடாக இருந்தது போல நீ பேசுவது உனது அறியாமையை குறிக்கிறது.அந்த அல்லாஹ் உனக்கு நல்லறிவை தரட்டும் .முகலாயர்கள் ஆட்சி நடந்தபோது மதசார்பற்ற என்ற வார்த்தையே இல்லையே!மதசார்பற்ற என்பதே மேற்குலக நாடுகளின் விஷ பிரசாரத்தின் விளைவே.உதாரணமாக பெண்கள் என்றால் அரைகுறை ஆடைகளோடு நடமாடுதலே அவர்களின் சுதந்திரத்துக்கு வழி என்ற விஷ கருத்தை பரவ செய்தது அதே மேற்குலக சக்திகள்தான்.ஆனால் உண்மை அதுவல்லவே.அது போல இசுலாமிய ஆட்சி வரக்கூடாது மத சார்பற்ற ஆட்சிதான் இருக்க வேண்டும் என்பதும் மேற்குலக பொதுபுத்தியின் விளைவே.ஆனால் திண்ணமாக இந்தியா இஸ்லாமியர்களின் நாடாக மாற்றப்படும்.இன்ஷா அல்லாஹ்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்