அம்ருதா ஆகஸ்ட் 2012 இதழில் சென்ற வருட பொருளாதாரத் துறையில் வழங்கப்பட்ட நொபேல் பரிசு குறித்து நானெழுதிய விரிவான 5 பக்க கட்டுரை 'அசைவுகளும் அதிர்வுகளும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட
இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.) 1) இந்த உணவுப் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்: இனிப்புகள் (தின்பண்டங்கள், சாக்லேட், ஐஸ்க்ரீம் முதலியன) குளிர்பானங்கள் (சோடா கலந்தவை, அடைக்கப்பட்ட ஜூஸ்கள்) பேக்கரி உணவுகள் (ப்ரெட், பிஸ்கெட், குக்கீஸ், கேக் முதலியன) மைதா உணவுகள் (பரோட்டா, பஃப்ஸ், மேகி முதலியன) எண்ணெயில் பொரித்த உணவுகள் (முறுக்கு, பூரி, சிக்கன் 65 முதலியன) எண்ணெய் மிதக்கும் உணவுகள் (பிரியாணி முதலியன) சிவப்பு மாமிசங்கள் (Red Meat - ஆட்டுக் கறி முதலியன) சர்க்கரை மிகுந்த பழங்கள் (மா, பலா, வாழை முதலியன) உலர்கனிகள் (பேரிச்சை, திராட்சை முதலியன) பழச்சாறுக
நான் குஜராத் 2002 கலவரம் நூல் எழுதுகையில் பயன்படுத்திய முக்கியத் தரவுகளில் ஒன்று தெகல்கா இதழ் இது தொடர்பாய் மேற்கொண்ட ரகசிய விசாரணைகளின் தொகுப்பாய் அவ்விதழின் தலைமை ஆசிரியரான தருண் தேஜ்பால் நவம்பர் 2007ல் தொகுத்து வெளியிட்ட வெளியிட்ட GUJARAT 2002 - THE TRUTH என்ற சிறப்பிதழ். உடனடியாக இதை குஜராத் 2002 : தெஹல்கா அம்பலம் என்ற பெயரில் அ. மார்க்ஸ் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார் (பயணி வெளியீட்டகம் - 2007). பிறகு குஜராத் 2002 இனப்படுகொலை என்ற தலைப்பில் அ.முத்துக்கிருஷ்ணன் இதை மறுபடி தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார் (வாசல் & தலித் முரசு – 2008). இப்போது தன் நூலை இலவசமாகத் தரவிறக்கிட குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன? என்ற பெயரில் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் அ.முத்துக்கிருஷ்ணன் (ஏற்கனவே இருந்த உள்ளடக்கத்துடன் இதில் ரத்தக்கறையை மறைக்கும் வளர்ச்சி என்ற குஜராத் வளர்ச்சி குறித்த தனது கட்டுரை ஒன்றையும் இணைத்திருக்கிறார்). சரியான நேரத்தில் இது மக்களை அடையும் வகையில் இலவசமாகத் தர முன்வந்திருக்கும் மொழிபெயர்ப்பாளரையும், பதிப்பகங்களையும் பாராட்டியே ஆக வேண்டும். htt
Comments
கட்டுரையின் விரிவான முழு வடிவத்தை அம்ருதா இதழில் தான் படிக்க முடியும். அவர்கள் தம் சஞ்சிகையின் உள்ளடக்கங்களை வலையேற்றுவதில்லை.
கட்டுரையின் ஆரம்ப வடிவத்தின் லிங்க் இந்தப் பதிவிலேயே தரப்பட்டுள்ளதே!