ஐந்தாம் கவிதை

*

முதல் வரி
அடுத்த வரி
கடைசி வரி.

*

குட்டிப்பெண் நீ
குட்டிப்பெண் நீ
குட்டிப்பெண் நீ.

*

காற்றிலலையும்
காந்தப் புலமென‌
காதலில் திரியும்
காத்திரம் - மனசு.

*

பெரிய குழந்தைக்கு
சிறிய குழந்தை
அரிய பொம்மை -
அவ்வளவு தான்.

*

பாலினக்கவர்ச்சியற்ற‌
ஆண் பெண் சினேகிதம்
சாத்தியமில்லையென‌
நீ புரிந்து கொண்டால்
நீயும் என் தோழியே.

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்