படித்தது / பிடித்தது - 85

அவ்வப்போது உதித்தவை

பலமுறை ஹாரன் அடித்தும்
நடுத்தெருவில் உறக்கம் கொண்டிருந்த
பிஸ்கட் கலர் நாய்
அசைந்த பாடில்லை.

ஒரு வழியாய் சைடு வாங்கி
பற்பல வார்த்தையால் ட்ரைவர் ஏசி
வண்டியைக் கிளப்பிய போது
பின்பக்கம் பார்த்தேன்
அசையா அந்நாயின் உருவம்
கேட்டது “உன் படுக்கை அறையில்
நான் நுழைந்தால் நீ வழிவிடுவாயா என்ன?”

யார் இடத்தை யார் அபகரித்தார்கள்
என்று இடம் சொல்லாதவரை
“நாயைக் குழிப்பாட்டி நடுவீட்டுல
வச்சாலும் நக்கித்தான் குடிக்கும்”
என்ற பழமொழியும்
வாகன சக்கரங்களில் மசிந்த
நாயின் குடல் எச்சங்களும்
இருக்கத்தான் செய்யும்.

- இயக்குநர் ராம்

நன்றி: காட்சி

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்