படித்தது / பிடித்தது - 72

வாழும் கலை

கடலின் மடியில் கட்டிவைத்திருந்த காற்று
அவிழ்ந்து சுழன்றதில்
பூமி நின்று சூரியன் சுற்றத் தொடங்குகிறது
அந்த ராத்திரியின் ரகசியங்கள் பீறிட்டுத் தெளித்த‌
பயத்தில் நனைந்துகொன்டிருக்கிறது
அவ்விஞ்ஞானியின் டைரி
எல்லாம் க‌லைந்துகிட‌க்கும் அந்த‌ இட‌ம்தான்
தான் ச‌னித்த‌ இட‌ம் என்கிறான் ஹிட்ல‌ர்
சூட்சுமம் புரியாத வெளியொன்றில்
பசியால் தவித்த கர்ப்பிணி
பிள்ளையைப் பிரசவித்துத் தின்னத் துணிகிறாள்.

- செல்வநாயகி

நன்றி: நிறங்கள்

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்