படித்தது / பிடித்தது - 36

என்னிடம் பெரிதாக

'வாழ்க்கை எப்படிப் போகிறது'
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
சாட்டில் வந்த நண்பன்.
முன் தினம்
சரவணபவனில்
பெரிய தோசை வேண்டும்
என்று அடம் பிடித்து வாங்கி
சாப்பிட முடியாமல்
முழித்துக் கொண்டிருந்த
சிறுமியைப் பற்றி சொன்னேன்.
'அப்புறம் பார்க்கலாம்' என்று
மறைந்து போனான்.
என்னிடம் பெரிதாக
எதையேனும்
எதிர்பார்க்கிறார்களோ.

- முகுந்த் நாகராஜன்

நன்றி: veenaapponavan

Comments

Popular posts from this blog

காலோஸ்மி [சிறுகதை]

இறுதி இரவு [சிறுகதை]

எழுத்தாளன் அரசியல் பேசலாமா?