இன்று போய் நாளை வா

நாளை நள்ளிரவில் அறிவிக்கப்படவிருக்கும் ஆஸ்கர் முடிவுகளை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது - முக்கியமாய் நூறு கோடி மக்கட்தொகை கொண்ட‌ இந்த இந்திய தேசம். எல்லாம் "Slumdog Millionaire" என்கிற பிரிட்டிஷ் படத்துக்காக மூன்று ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்காக.

இப்படியொரு சூழ்நிலையில் நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்கு கசப்பூட்டுவதாய் இருக்கலாம். கடவுள் நம்பிக்கையில்லாத நான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தப்படத்திற்காக‌ ஆஸ்கர் விருது கிடைக்கக்கூடாது என‌ மிகத்தீவிரமாக கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கிறேன். அதற்கான காரணங்கள் மிக எளிமையானவை.
  • இந்தப்பாடல்களும், பின்னணி இசையும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை (Not even it's best of A.R.R.)
  • இந்த விருது இந்தியத்திரைப்பட‌ இசையை மிகத்தவறான முறையில் உலகிற்கு அறிமுகப்படுத்தக்கூடும்
உதாரணமாய், டி.ராஜேந்தர் திறமையானவர் தான். ஆனால் "வீராசாமி" படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டிருந்தால் ஒரு தமிழராக நீங்கள் எப்படி உணர்வீர்களோ அதே மனநிலையைத்தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு "Slumdog Millionaire"க்காக ஆஸ்கர் கொடுக்கப்பட்டால் ஒரு இந்தியனாக‌ நானும் அடைவேன்.

மற்றபடி ஏ.ஆர்.ரஹ்மானின் மேல் எனக்கு எந்த துவேஷமும் கிடையாது. தவிர இதன் காரணமாக‌ நான் "Slumdog Millionaire" திரைப்படத்தை எவ்வித்திலும் குறைவாக மதிப்பிடவில்லை. படம் எனக்கு மிகப்பிடித்திருந்தது. Writing (Adapted Screenplay), Cinematography - இந்த‌ இரண்டு பிரிவுகளிலும் இந்தப்படம் நிச்சயம் ஆஸ்கர் வெல்லும் என உறுதியாக நம்புகிறேன்.

நான் இளையராஜாவின் ரசிகன் என்பது இப்படி எழுதுவதற்கு நிச்சயம் காரணமன்று. இந்தியர் ஒருவர் ஆஸ்கர் வாங்குவது எனக்கும் மிகச்சந்தோஷமான விஷயமே - அதுவும் இசைக்கென‌ வாங்குவதென்றால் அதற்கு ஏ.ஆர்.ரஹ்மானை விட்டால் தற்போதைக்கு வேறு ஆளேயில்லை என்பதையும் எந்த‌த்தயக்கமுமின்றி ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால் இந்த முறை வேண்டாம்.

Comments

Barath Raj KR said…
நான் இளையராஜாவின் ரசிகன் என்பது இப்படி எழுதுவதற்கு எவ்வகையிலும் நிச்சயம் காரணமன்று - POI POI POI

வேறு ஆளேயில்லை என்பதையும் எவ்விதத்தயக்கமுமின்றி ஒப்புக்கொள்கிறேன் - FOR MAKING THE ABOVE STATEMENT TRUE

ACCEPTABLES:
============
# இந்தப்பாடல்களும், பின்னணி இசையும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை (Not even it's best of A.R.R.)
# இந்த விருது இந்திய திரைப்பட‌ இசையை மிகத்தவறாக உலகிற்கு அறிமுகப்படுத்தக்கூடும்.
It is just an award. It just needs how better he is than others nominees. that's it. And i accept that "it is Not even it's best of A.R.R".
But he is more capable than any others in the industry right now.
Hey i don't see any opportunity in near future also. so i wish him all the best. I also accept your
review in other thread that "A.R.R. who spoiled the music compared to the one done by Harris Jeyaraj". but he is back with his Delhi-6 "Masakalli". it is wonderful. only A.R.R can compose such a score. so pray for him for the Award :-)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்