உலகம் யாவையும்...

நிறுத்தத்தில் காத்திருப்பவர்கள் பேருந்து நேரத்தில் வர‌ கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள்.

சர்க்கரை வியாதிக்காரர்கள் இனிப்புகள் உண்ணும் முன்பு கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள்.

மலச்சிக்கல் உள்ளோர் கழிவறையில் அமர்ந்திருக்கையில் கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள்.

கள்ளமாய்ப் புணர்வோர் கணவன் / மனைவி அறியாதிருக்க கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள்.

புதிதாய்த் திருமணமான‌ பெண்கள் மாதவிலக்கு வ‌ராதிருக்க‌ கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள்.

கன்னிப்பெண்களெனப்படுவோர் மாதவிலக்கு தவறாதிருக்க‌ கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள்.

கடவுளை நினைத்தால் கொஞ்சம் பாவமாய்த்தான் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

ஏஐ எனும் சாத்தான்

காலோஸ்மி [சிறுகதை]

இறுதி இரவு [சிறுகதை]