Album: THE OPPOSITE SIDE OF THE SEA Track: Her Morning Elegance Directed by: Oren Lavie, Yuval and Merav Nathan Photography: Eyal Landesman Featuring: Shir Shomron
சென்ற பொங்கல் தினத்தன்று விஜய் டிவியில் சிவகார்த்திகேயனை வைத்து எங்க வீட்டுப் பிள்ளை என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். அதில் சில சங்கடத்துக்குரிய விஷயங்கள் இடம் பெற்றன (குறைந்தபட்சம் என்னளவில்). கல்லூரிப் பெண்கள் சிலர் அவரது ரசிகைகள் எனக் காட்டப்பட்டு மேடையிலேயே குறும்புத்தனம் என்ற பெயரில் சில ஆபாசங்களில் ஈடுபட்டார்கள் (மறுபடி என்னளவில் தான்). அதன் காணொளிகளை இங்கே பார்க்கலாம் (விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் ஏற்றப்பட்டிருக்கும் இந்நிகழ்ச்சியின் காணொளி யில் இந்த சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன): http://www.dailymotion.com/video/x19n58l_engaveettu-4_shortfilms (07:00 to end) http://www.dailymotion.com/video/x19n5qh_engaveettu-5_fun (start to 04:00) ஒருவர் சிவகார்த்திகேயனுக்கு பொங்கல் ஊட்டி விட்டு தனக்கும் அவரை ஊட்டி விடச் செய்கிறார். ஒருவர் சிவகார்த்திகேயனின் கன்னத்தைக் கிள்ளி விட்டு தன் கன்னத்தையும் அவரைக் கிள்ள வைக்கிறார். ஒருவர் லிஃப்ட்டுக்குள் தீபிகா படுகோனுடன் மாட்டுக் கொண்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்கிறார். ஒருவர் அவர் தன்னைக் கையில் தூக்கிக...
தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட...
பண்டித ஜவஹர்லால் நேரு நவீன இந்தியாவின் சிற்பியாகக் கருதப்படுகிறார். 1947ல் சுதந்திரம் கிடைத்த போது சிதிலமடைந்து கிடந்த ஒரு பிரம்மாண்ட தேசத்தை அவர் தன் தொலைநோக்குப் பார்வையின் மூலம் - விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை பல்வேறு துறைகளிலும் மேம்பாட்டை ஏற்படுத்தி - புத்துயிர்ப்புடன் நிர்மாணித்தார். அதன் மூலம் சமூக, பொருளாதார வளர்ச்சியை நாடெங்கிலும் சாத்தியப்படுத்தினார். அவர் மறைந்த போது ஒரு நவீன தேசத்தை உருவாக்குவதற்கான மிக வலுவான ஓர் அடித்தளத்தை அமைத்துப் போயிருந்தார். நிதானமாய் யோசித்தால் நேரு அவர்கள் இந்திய நாட்டிற்கு எதைச் செய்தாரோ அதையே தமிழ் நாட்டிற்கு கலைஞர் செய்தார். ஆனால் கலைஞரின் நவீனச் சிந்தனை கொஞ்சம் வேறுபட்டது. அது சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Growth) உத்தேசித்தது. இன்றைய நவீன ஆட்சி என்பதில் இரண்டு விஷயங்களை நோக்கி இருப்பதாகக் கருதுகிறேன். 1) வளர்ச்சி 2) சமத்துவம். அதாவது முரட்டுத்தனமாய் நாடு வளர்கிறது எனப் பொருளாதாரக் குறியீடுகள் மூலம் காட்டுவதோ, குறிப்பிட்ட துறைகளில் மட்டும் பெருவளர்ச்சி காண்பதோ, சமூகத்தில் சில பிரிவினர் மட்டும் செல்வச் ச...
Comments