Posts

Showing posts from March, 2010

ரங்கநாதன் தெரு எறும்புகள்

Image
" இது நிச்சயம் மோசமான படம் கிடையாது. ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு படத்தில் எதுவுமே இல்லை என்பதே யதார்த்தம் " - அதிஷா [ 'அங்காடித்தெரு' திரைப்பட‌ விமர்சனத்தில் ] ****** தமிழ்ப் பதிவுலக மக்களால் சிலாகிக்கப்படும் திரைப்படங்கள் யாவும் அதற்கு எதிர்மறையாகவே இருக்கும் என்கிற தங்க விதி மற்றுமொரு முறை நிரூபணமாகி இருக்கிறது. இம்முறை அக‌ப்பட்டிருக்கும் பரிசோதனை எலி வசந்தபாலனின் அங்காடித்தெரு (முந்தைய பெருச்சாளிகள் பசங்க, நாடோடிகள், நான் கடவுள், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா ). அடிப்படையான பிரச்சனை என்னவெனில், படத்தில் வலுவான கதையென்று ஒன்றுமில்லை; அதற்கு அத்தியாவசியத் தேவையான சிக்கல் இல்லை. பின்பு எங்கிருந்து போய் தொடர்ச்சியான காட்சிகள் மூலமாய்த் திரைக்கதையைப் பின்னுவது. அதன் காரணமாக‌ படம் முழுக்க நிறைய நாடகத்தனமான மிகையுணர்ச்சிக் காட்சிகளைப் புகுத்த வேண்டிய நிர்பந்தம். பின்புலம் ஒன்று தான் படத்தின் முதுகெலும்புச்சரமாய் படத்தை நிமிர்த்தி வைக்கிறது. அந்த வகையில் இப்படத்தை அத்தகைய விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றின நல்லதொரு ஆவணப்பதிவாக மட

ட்விட்டர் தாட்ஸ் - 8 (நவம்பர் '09 : பார்ட் 3)

2009-11-09 11:39:00 and if u can understand, tat's a satire on theism.. 2009-11-09 11:38:10 it's a prison, because u cannot be ignorant at that state.. 2009-11-09 11:30:58 (i think u missed the closing parenthesis in ur last tweet :-)) 2009-11-09 11:25:52 do they really need that much quality is a different question.. 2009-11-09 11:25:18 very few do no compromise in quality.. 2009-11-09 09:04:43 atheism is the biggest prison.. but i love to be in this prison.. 2009-11-09 07:24:22 still GOI's vigyan prasar follows the old demad draft via payment.. 2009-11-09 06:24:01 google hangs with Sesame Street for more than a week.. 2009-11-09 02:13:38 no more ramanan jokes please.. 2009-11-09 02:13:00 enjoy the heavy rain through window with a cup of hot coffee and a plate of chilly bajji.. 2009-11-09 02:12:42 dear chennai vaal middle class people.. 2009-11-09 02:08:32 missing school / college days on leave due to rain.. 2009-11-09 02:04:36 tamil twitter is full of rain.. 2009-11-09 0

படித்தது / பிடித்தது - 84

காலனிச் சத்தங்கள் என் செல்ல மகளே! நீ பிறந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உன் தாத்தாவிற்குத்தான் என் மீது கொஞ்சம் வருத்தம். குலசாமி பெயர் விடுத்து, மரித்தவர்களின் ஊர்ப்பெயரை உனக்கு சூட்டியதற்காக… முடிந்தவரை விளக்கிவிட்டு பிடிவாதமாய், வெண்மணி என்றே உனக்கு பெயரிட்டு விட்டேன். என்னைப் பொறுத்தவரை அவர்கள் மரிக்கவில்லை. நகரவாழ்வின் விழுமியங்களோடு சங்கமித்து நிறைய வருடங்கள் உருண்டோடிவிட்டன. அதன் தொடர்ச்சியாய் – இப்பொழுது நீயும் வந்துவிட்டாய்… கடந்து வந்த தூரங்களின் நீளத்தை என்றாவது ஒருநாள்- நீ கேட்டறிய வேண்டும் என்பதே என் ஆவல். ஏனெனில், தழும்புகளற்ற காயங்கள் என்னிடம் நிறைய உண்டு. அதை உன்னோடு பகிர்ந்து கொள்ளும் போது உனக்குள் ஒரு பண்புமாற்றம் நிகழலாம் என்பது என் நம்பிக்கை. முரண்களின் மூட்டையாக இருக்கும் இந்த சமூக அமைப்பின் சிக்கல்களை அறுத்தெறிவதற்கான ஆயுதமாக… அந்த நம்பிக்கை உனக்குள்ளும் ஊடுருவலாம். அழகிய ஓவிய வேலைப்பாடுகளடங்கிய பீங்கான் குவளைகளில், நீயும் நானும்- இப்பொழுது தேநீர் அருந்திகொண்டிருக்கிறோம், இவை நாம் எட்டிய குறைந்தபட்ச வாழ்க்கை. இது நடந்தது கூட உடனடி நிகழ்வல்ல, ஒரு நெடிய

பதிவர் vs எழுத்தாளர்

தமிழ் வலையுலகில் பதிவர் மற்றும் எழுத்தாளர் என்ற பதங்களின் பயன்பாடு குறித்து யுவகிருஷ்ணாவின் இந்த இடுகை யின் ஒரு பகுதி பேசுகிறது. அதில் எனது பின்னூட்டக் கருத்துக்களின் முக்கியத்துவம் கருதியும், அவை மிக நீண்டு விட்டதால் தட்டச்சிய என் உடற் உழைப்பைக் கவனத்தில் கொண்டும் இங்கே தனி இடுகையாக‌: ******* முன்குறிப்பு : எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதை நீங்கள் நையாண்டி செய்வதாக தவறாக நினைத்தோ, நான் writer என்ற prefixஐப் பயன்படுத்துபவன் என்பதாலோ ஆற்றப்படும் எதிர்வினையல்ல இது. சென்னை என்று அழைப்பது பிராந்தியரீதியாக அடையாளப்படுத்தும் செயல் என்றால், நீங்கள் குறிப்பிடும் இண்டிபிளாக்கர் அமைப்பும் அதைத் தானே செய்கிறது - இது நகரம், அது நாடு என்பது மட்டும் தானே வித்தியாசம். என்னைப் பொறுத்தவரை சென்னை என்பது ஓர் அடையாளம் மட்டுமே - அந்தச் சொல் geographical vicinityயில் இருப்பவர்களை மனோரீதியாக இணைக்க உதவும் என்பதை மறுப்பதற்கில்லை. நான் பெங்களூரில் வசிப்பவன் என்பதால் என்னை உங்கள் குழுமத்தில் சேர்த்திக் கொள்ள மாட்டோம் என்றா சொல்லி விடுவீர்கள்? எழுத்தை விட பதிவு தொழில்நுட்பரீதியாக அட்வான்ஸ்ட் ஸ்டேஜ் என்று

ட்விட்டர் தாட்ஸ் - 7 (நவம்பர் '09 : பார்ட் 2)

2009-11-05 11:51:00 review, referral, cafeteria, architecture, bug, feature, dev, QA 2009-11-05 11:50:45 Terms of IT industry - deliverables, deadlines, plan, appraisal, ASAP, FYIA 2009-11-05 11:30:20 அகங்காரம் என்பதை விட திமிர் என்ற சொல் சரியாய் இருப்பதாய் நினைக்கிறேன் 2009-11-05 11:26:59 ஒரு புத்தகம் கூட இதுவரை எழுதாமல் கூட‌ ஒருவர் தன்னை writer என சொல்லிக்க்கூடும். என்னைப் போல். 2009-11-05 11:24:54 writer என்பது ஓர் அடையாளம். நான் சமூகத்தில் primary ஆக ஓர் எழுத்தாளனாக அறியப்படவே விரும்புகிறேன் என அறிவிக்கும் செயல். 2009-11-05 10:43:25 twitter is lazy folks' blogger.. 2009-11-05 10:23:23 அப்படியொரு esolangன் பெயர் brainfuck.. fuck the brain of Urban Müller who invented it.. 2009-11-05 10:20:49 don't answer with any esoteric programming languages used in computer science.. 2009-11-05 10:19:56 is there any language having less number of alphabets than English? means < 26.. 2009-11-05 10:12:44 the reason is all those softwares are designed in the brains who think in english..

ட்விட்டர் தாட்ஸ் - 6 (நவம்பர் '09 : பார்ட் 1)

2009-11-04 12:53:00 The mgmt.guru-cum-interviewer don't like that fact. 2009-11-04 12:52:52 In IIM's PGSEM interview, i told "everybody in this world knows a pinch of management". 2009-11-04 12:48:05 may be Vijay-Surya.. 2009-11-04 12:47:32 MKT-PUC, MGR-Sivaji, Rajini-Kamal.. who is the next? 2009-11-04 12:43:38 to download a picture from orkut : tools --> page info --> media --> media file URLs are listed 2009-11-04 12:36:02 the tamil fonts in gmail is looking different from yesterday.. 2009-11-04 10:30:38 i need an apt adjective.. wat is the taste of alchohol? 2009-11-04 10:27:35 and after all a software engineer.. 2009-11-04 10:26:39 there are others too.. alumni pvb, alumni ehkn, ex-cegian, ex-hexawarian, sonoa-ite.. wat else? 2009-11-04 10:25:07 human, male, writer, a citizen of earth, indian, tamilian, coimbatorean - this is my order.. 2009-11-04 10:14:03 tweeting is injurious to health.. isn't it.. 2009-11-04 09:57:00 இது ஒரு வகையான தேடல் மட்டுமே..

சந்திரயான் : EDITED PAGES - 1

“ மகாத்மா காந்தியின் வாழ்க்கையை, இந்திய சுதந்திரப் போரைத் தவிர்த்து விட்டு எப்படிச் சொல்ல முடியாதோ அப்ப‌டித் தான் சந்திரயான் திட்டத்தின் கதையையும் நிலவின் ஆராய்ச்சி வரலாற்றைத் தவிர்த்து விட்டுச் சொல்ல முடியாது. ” சரியாய் ஒரு மாதம் முன்பு, இந்தப் புத்தகத்தை எழுதத் துவங்கியிருந்தால் இப்படித்தான் ஆரம்பித்திருப்பேன். ஆனால் இப்போது, இதைக் கொஞ்சம் மாற்ற வேண்டியிருக்கிறது - கிட்டதட்ட தலைகீழாய். ஆம். “ இந்திய சுதந்திரப் போரை, மகாத்மா காந்தியின் வாழ்க்கையைத் தவிர்த்து விட்டு எப்படிச் சொல்ல முடியாதோ அப்ப‌டித் தான் நிலவின் ஆராய்ச்சி வரலாற்றையும் சந்திரயான் திட்டத்தின் கதையைத் தவிர்த்து விட்டுச் சொல்ல முடியாது. ” இப்படி மாற்றியெழுத வேண்டியிருக்கிறது. ஒரு மாத இடைவெளியில் அப்படி என்ன நிகழ்ந்தது? அது வெறும் நிகழ்வு அல்ல; செய்தி. தலைப்புச்செய்தி. இன்னும் சரியாய் சொல்ல வேண்டுமெனில், வரலாறு. இந்த நூற்றாண்டின் மகத்தானதொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு! இது வரை நடந்திருக்கும் நிலா ஆராய்ச்சிகளின் மிக மிக முக்கிய மைல்கல்லாய் நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடிக்க உதவியிருக்கிறது சந்திரயான். தண்ணீராய் செலவழித்து, தலை

புத்தகம் / பத்திரிக்கை / சுற்றறிக்கை

பரிசல் கிருஷ்ணாவின் " டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் " புத்த‌கத்துக்கு செல்வேந்திரன் எழுதிய விமர்சனப்பதிவும் , அது தொடர்பாய் எனக்கும் அவருக்கும் இடையே பின்னூட்டங்களிலும், தனிப்பதிவாகவும் நடந்த விவாதத்தின் தொகுப்பு இது: ############### செல்வேந்திரனின் விமர்சனம் : எந்தவொரு புத்தகத்தையும் முன் தீர்மானங்கள் இன்றி வாசக பரிவோடு அணுகுவது என் வழக்கம். அப்படித்தான் ஆசை ஆசையாகக் காத்திருந்து ‘டைரிக்குறிப்பும், காதல் மறுப்பும்’ தொகுதியையும் வாசித்தேன். தொகுப்பிலுள்ள 17 கதைகளுள் பெரும்பாலானவை கதாசிரியனே கதையினை விவரிக்கும் பாணியிலானவை. அதிலும் அனுபவக் குறிப்புகளே அதிகம். உரையாடல்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உரைநடையே நூலாசிரியரின் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது. பரிசல்காரன் பெரும்பாலும் வெகுஜன தன்மையோடு இயங்குகிற எழுத்துக்காரர் என்பதால் உத்தி, நடை, கலையம்சம் போன்ற கறாரான அளவுகோல்களை விடுத்து வெகுஜனக் கதைகளுக்குறிய வரையறைகளுக்குள்ளாவது மட்டுப்படுகிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ‘தனிமை - கொலை தற்கொலை’, நான் அவன் இல்லை, ஜெனிஃபர், டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும், நட்சத

கடிதம் : "யாவரும் நலம்"

Dear CSK, Greetings. I've re-published your 'Yaavarum Nalam' review in my blog. Kinldy let me know if you've any concerns. Regards, Srinivasan ############### அவர் என் எழுத்தை எடுத்தாண்டிருந்த இடுகை: உண்மைக்கு மிக அருகில் — சுஜாதா ############### இப்போது எனது பதில்: இது ஸ்ரீநிவாசனுக்கு மட்டுமான பதில் அல்ல. என் இடுகைகளைப் பயன்படுத்த நினைக்கும் அனைவருக்குமானது. அனுமதி கோர வேண்டிய அவசியமே இல்லை. பாராட்டவோ, திட்டவோ எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிரச்சனையே இல்லை. இரண்டே விஷயங்கள் தான் நான் வேண்டுவது: பயன்படுத்துகையில் உங்கள் இடுகையில் என் வலைதளத்தின் லிங்க் மற்றும் என் பெயரைக் குறிப்பிடுங்கள். உங்கள் பதிவில் இடுகை இட்ட பின் அதன் லிங்க்கை என் மின்-அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அவ்வளவு தான். என் பெயரோ, வலைதள லிங்க்கோ இல்லாமல் சில இடங்களில் என் இடுகைகள் எடுத்தாளப்பட்டிருப்பதைக் காண்கிறேன். அத‌னாலேயே, இதை தயை கூர்ந்த ஒரு வேண்டுகோளாகவே உங்கள் முன் வைக்கிறேன். நான் சொல்லாமலேயே இவற்றைச் சரியாய் செய்த ஸ்ரீநிவாசன் உப்பிலிக்கு என் நன்றிகள். -CSK

கடிதம் : A Hello from Japan-(Vasagan(nanban))

Dear Saravanakarthi, How are doing my dear friend, Right from day 1 of your website I am following it, இவ்வளவு நாள் இல்லாதவன் என்னடா இன்னைக்கு மெயில் அனுப்புறாநேன்னு யோசிக்கிறியா. ஒண்ணுமில்ல டா, உனக்கு தெரியுமா என்னவோ தெரியாது, உன்னோட வெப்சைட் ஆரம்ப காலத்தில் இருந்து வாசிச்சிக்கிட்டு வரும் வாசகர்கள்ள நானும் ஒருத்தன். என்னைக்கும் இல்லாத விதமா உன்னோட உன்னோட ப்ளாக் பேஜில இவ்வளவு கமென்ட் நான் பார்த்ததே இல்ல, ரொம்ப சந்தோஷமா இருந்துது, எத்தனை பேரு உன்னோட வரிகள வாசிக்கராங்கன்னு !!!!!!!! என் இனிய வாழ்த்துக்கள் !!!!!! ஆனா ரொம்ப நாளா உன்ன்கிட்ட ஒரு கேள்வி கேட்கனும்னு எனக்கு ஆசை, கொஞ்சம் ஓவரா தான் இருக்கும், இருந்தாலும் இந்த சமயத்துல கேட்டா நல்லா இருக்கும்னு யோசிச்சு தான் மெயில் அனுப்புறேன், Hope I can get the answer for, why you open this website from your page title, I am not sure whether I can ask these kind of questions to you, but as per your website, these are my recent extensions, What is the main reason or aim or ............ destination of this website? where do you want to be with this

என் வேலை இது இல்லை

சொன்னால் புரிந்து கொள்ளாதவர்களை என்ன தான் செய்வது. இதற்காக கோபித்துக் கொண்டு நீங்கள் எனது வலைப்பதிவையே படிப்பதை நிறுத்தினாலும் சரி. எனக்கு அதில் எந்த சுவாரசியமோ, கவலையோ இல்லை. ஹிட்ஸ் வர வேண்டும் என்பதற்காக எழுதிய காலமெல்லாம் (பாரதிராஜாவுக்கு வாலிபமே வா வா மாதிரி) மலையேறி விட்டது. நான் வளர்ந்து விட்டேன் என்று சொல்லவில்லை. புகழ் மாதிரியான‌ ஜிகினா சமாச்சாரங்களின் தேவை மற்றும் இடம் குறித்த புரிதலாக இதைக் கொள்ளலாம். இப்போது இது மாற்று சிந்தனைகளைப் பகிரும் ஒரு தளம் மட்டுமே. ஆக, தயவு செய்து மூன்று விஷயங்களை என்னிடம் பேசாதீர்கள் / கேட்காதீர்கள் / செய்யாதீர்கள். ஒன்று " உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நல்ல படம் இல்லையென்றாகி விடுமா? " என்கிற அறிவுஜீவித்தனமான கேள்வியைக் கேட்பது. இரண்டாவது " அந்த படம் சூப்பர் ஹிட், அதைப் போய் மொக்கை என்று நிராகரிக்கிறீர்களே " என்று ஆதங்கப்படுவது. மற்றொன்று ஏ.ஆர்.ரஹ்மானுக்காக பரிந்து கொண்டு அவரது அருமை பெருமைகளை எனக்கு எடுத்துரைப்பது. முதலாவது முதலில். அந்த அறிவுஜீவித்தனமான கேள்விக்கு எனது பதில் " ஆம் ". எனக்கு பிடித்த படம்

YET ANOTHER கௌதம் FILM

Image
விண்ணைத் தாண்டி வருவாயா. பெரிதாய்ச் சொல்ல ஒன்றுமில்லை - மோசமான திரைக்கதை கொண்ட __________ (கோடிட்ட இடத்தை இடுகையின் தலைப்பு கொண்டு நிரப்பிக் கொள்ளவும்). கௌதம் எடுத்ததிலேயே மின்னலே வுக்கு அடுத்த படியான அடாசு, டப்பா, பாடாவதி, இன்னபிற எல்லாம் இப்படம் தான். சொன்னாலும் கேட்க மாட்டீர்கள் - அந்தக் கருமத்தை நீங்களே திரையரங்கிலோ, கள்ளப்பிரதியிலோ கண்டுணர்ந்து கொள்ளுங்கள். சும்மா சொல்லக்கூடாது. நுட்பமாய்த் திட்டமிட்டு கழுத்தறுவை செய்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். மொக்கைப் படம் பார்த்து நீண்ட நாளாயிற்று என்கிற குறையை நிவர்த்திக்க ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் மனிதர். ஏ.ஆர்.ரஹ்மான், மனோஜ் பரம்ஹம்ஸா போன்ற பெரும்தலைகளும் பெயர் சொல்லும் படி படத்தில் ஒன்றும் செய்யவில்லை. வசன‌ங்கள் மட்டும் ஆங்காங்கே புன்னகைக்க வைக்கின்றன. கௌதமுக்கு சரியாய் Plot எழுத வராது என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிற‌து. கூச்சம் பாராது திரைக்கதை தெரிந்தவர்கள் யாரையாவது நல்ல சம்பளம் தந்து கூட வைத்துக் கொள்வது உத்தமம். அவரவர்க்கு எது கை வருகிறதோ அதை மட்டும் செய்வது தான் புத்திசாலித்தனம். Makingல் மட்டும் ஜிம்மிக்ஸ் காட்டுவதெல்ல