Posts

Showing posts from June, 2016

வெண்குடை [சிறுகதை]

Image
ஆகஸ்ட் 6, 1985. பனியின் சாயைகள் இன்னும் முற்றிலும் விலகாத காலை நேரம். கென்பக்கு டோமு என்கிற ஹிரோஷிமா அமைதி நினைவகத்தின் முன்பு நின்றிருந்தார் ஜேக்கப் பேசர். உருளை வடிவக் கட்டிடம். அதன் தலையில் கிரீடம் போல் கோபுரத்தின் கான்க்ரீட் உதிர்ந்த இரும்பு எலும்புக்கூடு. அதைச் சுற்றி நின்றிருந்த கட்டிடமும் சுவர்களும் துணையாய் பாதிப்புற்றிருந்தன. வரலாற்றின் ஒரு துளி அங்கு உறைந்திருந்தது. சிதிலமடைந்திருந்த அக்கட்டிடம் குண்டு வீச்சில் படுகாயமுற்ற ஒரு மனிதனையே உருவகப்படுத்துவதாகத் தோன்றியது ஜேக்கப்பிற்கு. மோசமான ஒரு போரில் சந்தித்த பேரிழப்பைத் திரும்பத் திரும்ப இந்த ஜப்பான் தேச மக்களுக்கு நினைவூட்டியபடியே இருக்கும் இந்த இடம் எப்படி அமைதிச் சின்னம் ஆகும் என்று யோசனை ஓடியது. ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என எல்லோரும் வரிசையாய் வந்து அக்கட்டிடத்தின் முன் அமைப்பட்டிருந்த கவிழ்த்துப் போட்ட பூமராங் வடிவ நினைவிடத்தில் தாம் கையில் கொண்டு வந்திருந்த பூங்கொத்தை வைத்து விட்டு தலை வணங்கி சில கணங்கள் அமைதியாய் நின்று அஞ்சலி செலுத்தினர். அதிகம் யாரும் பேசவில்லை. நேரம் செல்லச் செல்ல பூக்குவியல்

இந்துக்களின் இஃப்தார்

Image
பன்னெடுங்காலமாய் ஆண்டுதோறும் ரம்ஜான் மாதம் முழுக்க பெங்களூர் ஃப்ரேஸர் டவுன் மாஸ்க் ரோட்டில் (மசூதி சாலை)  மாலை முதல் நள்ளிரவு வரை களை கட்டும் ரோட்டோரத் தற்காலிக உணவுக் கடைகள் இம்முறை இல்லை. தடை செய்திருப்பது மசூதி கமிட்டியே தான். அவ்விடத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் இதனால் போக்குவரத்துக்கும் தினசரி நடவடிக்கைகளுக்கும் பெரும் தொந்தரவாய் இருக்கிறது என்றளித்த புகாரின் பேரில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்பகுதியைச் சுற்றி வசிப்பவர்கள் பெரும்பான்மை இஸ்லாமியர் என்பதே என் புரிதல். அதனால் இதில் மதரீதியான வன்மம் ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை. (இதனால் மசூதிக்கு இஸ்லாமியர்கள் குறித்த நேரத்தில் வர முடிவதில்லை என்பதையும் பக்கவிளைவாகச் சொல்லி இருக்கிறார்கள்). மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் போது இது நடந்திருப்பது தான் ஒரே ஆறுதல். பிஜேபி ஆட்சியாக இருந்திருந்தால் இந்துத்துவச் சதியோ எனச் சந்தேகிக்க வேண்டி இருந்திருக்கும். (அப்படி நடந்தால் ஆச்சரியப்படவும் வேண்டியதில்லை என்பது வேறு விஷயம்.) ரம்ஜான் இறுதி வாரத்தில் தீபாவளிக்கு முந்தைய வார இறுதியின் ரங்கநாதன் தெரு போல் அங

ஆ.க.அ.க. - முன்னுரை

Image
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க நான் பூமியில் ஒரு போதும் தவழ மாட்டேன் தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம் பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன். -    அப்துல் கலாம் (முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 19 செப்டெம்பர் 2011 அன்று ஆற்றிய சிறப்புரையில் சொன்ன கவிதை.) * இந்திய ராக்கெட் இயல் - அதன் நீள வரலாறு மற்றும் ஆழ விஞ்ஞானம் - என்பது என் பதினைந்து ஆண்டுகாலப் பெருங்கனவு. ஓர் எழுத்தாளனாய் அல்ல; வாசகனாக. “கலாமும் நானும் இணைந்து ஒரு புத்தகம் எழுத உத்தேசித்திருந்தோம். இந்திய ராக்கெட் இயல் பற்றித் திப்பு சுல்தான் காலத்திலிருந்து ஆரம்பித்து எழுதலாம் என்றார். ‘நான் ரெடி… நீங்க ரெடியா கலாம்?’ என்று எப்போது பார்த்தாலும் கேட்பேன். ‘இதோ வந்து விடுகிறேன்… அடுத்த மாதம் துவங்கிடலாம்யா’ என்பார்.” என சுஜாதா ‘கற்றதும் பெற்றதும்’ தொடரில் எழுதிய போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு வாசகனாய், ஒரு மாணவனாய், ஓர் இந்தியனாய் மிகுந்த உற்சாகம் கொண்டது நினைவிருக்கிறது. பிறகு அவர் மறைவதற்கு சில காலம் முன் குங்க

ராஜ காவியம்

Image
சென்ற ஆண்டு இதே நேரம் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை வசன கவிதையில் எழுதும் நோக்கில் ஓர் அத்தியாயம் எழுதிப் பார்த்தேன். சிற்சில எத்தனங்களுக்குப் பின் அது அச்சுக் காணும் அதிர்ஷ்டம் அமையவில்லை. அதனால் அம்முயற்சியைத் தொடரவில்லை. அவரை வாழ்த்தி சற்றே வருத்தத்துடன் அதை இங்கே பகிர்கிறேன். 1. தோற்றுவாய் கம்பிக‌ள் பிரசவிக்கும் கற்பகம் காற்றில் பரவும் மின்சாரம் கண்கள் கசியும் பரவசம் கன‌ங்கள் கரையும் வினோதம் மனித குலம் கண்டறிந்த மகத்துவங்களில் முதன்மை காதலுக்கு இணையாய் ஆவியசைக்கும் உயிர்மை சோகமோ மோகமோ ராகம் அதைக் கூவிடும் கீதையோ போதையோ கீதம் அதைப் பாடிடும் காட்சியில் உச்சம் பெண் கற்பனை உச்சம் கடவுள் மொழி உச்சம் கவிதை ஓசையின் உச்சம் இசை ஒரு குருடனை விடவும் ஓர் ஊமையை விடவும் இசை துய்க்கா செவிடனே துரதிர்ஷ்டம் தோய்ந்தவன். * இசை என்பதற்கு மிக இசைவாய் மிளிரும் அருஞ்சொற்பொருள் உருவ விளைந்தால் சுரம் சுரக்கும் கானமுலை வரமளிக்கும் ராகதேவன் காதினிக்கும் நாதமுனி எவரென வினவினால் காலாட்டியபடியே இசை கேட்டிருந்த தேசத்துக்கு தாலட்டுப் பாடிய தாய் ஒருவரைச் சுட்ட

தமிழ்: நேற்று இன்று நாளை

என் தாய்மொழியை என் மக்கள் பாடும் பாடல்களை நான் மறந்து போனால் என் கண்களின், காதுகளின் பயன் என்ன? என் வாயின் பயன் என்ன? -    அலைடெட் நெம்டஷ்கின் (‘என் மொழி’, 1988) தமிழர்கள் தமிழுக்குத்தரும் முக்கியத்துவம் என்ன என்பதை ஆராயப்புகும் முன் இந்தியாவில் பொதுவாய் தாய்மொழிகளின் இடம் என்ன எனப்புரிந்து கொள்வது அவசியம் எனப்படுகிறது. இந்தியா மிகக்கலவையான தேசம். மொழி அதன் முக்கிய வேறுபாட்டுக்கூறு. இங்கேயே முளைத்தெழுந்த மொழிகள் தவிர ஆதிகாலத்தொட்டு பாரததேசம் மீது நிகழ்ந்த அந்நியப்படையெடுப்புகள் புதிய மொழிகளைக் கொணர்ந்த படிதான் இருந்தன. அப்படி வந்து சேர்ந்த மொழிகளுள் முக்கியமானது ஆங்கிலம்! ஒருவேளை ப்ரிட்டிஷ் ராஜ்யம் இருநூறு ஆண்டுகள் நீடிக்காது போயிருந்திருந்தால் இந்தியா என்ற ஒற்றை தேசம் உருவாகாதே/ நீடிக்காதே போயிருக்கக்கூடும். அந்த ஒருங்கிணைப்பை நல்கிய காரணிகளில் முக்கியமானது ஆங்கில மொழி. ஆனால் ஆங்கிலத்தின் வரவால், ஆதிக்கத்தால் நிகழ்ந்த முக்கியப் பக்கவிளைவு இந்தி தவிர்த்த பிற பிராந்திய மொழிகள் இயல்பாகவே பின்னுக்குத் தள்ளப்பட்டதுதான். இது இரு விதங்களில் நிகழ்ந்தது. ஒன்று அரசு வழியாக; அடுத்தது குட