Posts

Showing posts from October, 2012

(இட்லி) வடையும் நானும்

இட்லி வடை வலைப்பூவின் 9ம் ஆண்டு கொண்டாட்டத்தின் பகுதியாக அதைப் பற்றிய என் கட்டுரை ஒன்று அதில் வெளியாகியுள்ளது. அவர் சொல்லிய படியே எதையும் எடிட் செய்யாமல் அப்படியே வெளியிட்டிருக்கிறார். நன்றி. வடையும் நானும் - சி.சரவணகார்த்திகேயன் : http://idlyvadai.blogspot.in/2012/10/blog-post_19.html *******

'பரத்தை கூற்று' தலைப்பு : ஒரு விளக்கம்

'பரத்தை  கூற்று' என்ற என் கவிதைத் தொகுதியின் தலைப்பில் இலக்கண சந்திப்பிழை உள்ளது, 'பரத்தைக் கூற்று' என்று வல்லினம் மிகுந்து வரும் வேண்டும் என்று அவ்வப்போது சொல்லப்பட்டு வருகிறது. அதை விளக்கும் முகமே இப்பதிவு.  பரத்தையது கூற்று = பரத்தை(+அது) + கூற்று = பரத்தை  கூற்று. 'அது' - ஆறாம் வேற்றுமை உருபு. அதாவது 'பரத்தை கூற்று' என்பது ஆறாம் வேற்றுமைத் தொகை. பொதுவாய் ஆறாம் வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகும். உதாரணம் : சிங்கப்பல், அறிவுத்திமிர். ஆனால் அதில் ஒரு conditional rule இருக்கிறது. வருமொழி அஃறிணையாய் இருந்தால் மட்டுமே வல்லினம் மிகும். உயர்திணையாய் இருந்தால் மிகாது. இப்படி ஒரு வினோத‌ விதி இருக்கிறது (ஆதாரம் : http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=171&pno=242 ) நான் நூலிற்குத் தலைப்பு வைத்த போது இதெல்லாம் ஆராய்ந்து வைத்திலன். தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று, செவிலித்தாய் கூற்று என்று தான் சங்க அக இலக்கியங்கள் பேசுகின்றன.  இவ்வரிசையில் குறுந்தொகையில் குறைந்தபட்சம் 3 பாடல்கள் ( 1 , 2 , 3 ) பரத்தை கூற்றாய் வருகின்றன. புத்

பரத்தை கூற்று : ஆம்னிபஸ்

சமீபத்தில் கிரி ராமசுப்ரமணியன் துவக்கிய‌ ஆம்னிபஸ் தளம் தமிழ் / ஆங்கிலப் புத்தகங்களை அறிமுகம் செய்யும் விமர்சனப் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. அவர் தவிர வேறு நிறையப் பேரும் இதில் பங்களிப்பு செய்கிறார்கள்.   'வேதாளம்' மல்லிகார்ஜுனன் இத்தளத்தில் என் பரத்தை கூற்று தொகுப்புக்கு ஒரு விமர்சனப்பதிவு எழுதி இருக்கிறார். http://omnibus.sasariri.com/2012/10/blog-post.html ******* 1 Oct 2012 பரத்தை கூற்று – சி.சரவணகார்த்திகேயன் Posted by மல்லிகார்ஜுனன் நண்பர் சிஎஸ்கேவை ட்விட்டரின் மூலம் தான் அறிமுகம் எனக்கு. அவரின் ட்வீட்டுகளால் ஈர்க்கப் பட்டே இந்தப் புத்தகத்தை வாசிக்கலானேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன் என்றுதான் சொல்லவேண்டும். அதற்குக் காரணம் பாடுபொருள் அல்ல, பாடப் பட்ட விதம். பொதுவாகக் காமம் சம்மந்தப்பட்ட எழுத்துகளில் அல்லது அவ்வாறாக எழுதுபவர்களின் புத்தகங்களில் வாசகரைத் தக்கவைக்க, தொடர்ந்து வாசிக்கத் தூண்டும் வகையில் ‘திணிக்கப்பட்ட’ காமம் இருக்கும். அப்படியொன்றும் இல்லாது உண்மைபேசி வலி பொறுத்து ரணம் சொல்லி கர்வம் கொள்ளும் கவிதைகள் நிறைந்த புத்தகமிது. கற்பு, பெரும