குமுதம் இதழில்
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDVdS0wVM3UAGp05evPdf4iVcCSSuczrN4dKvm1uy0UWknYwr_NJMO5dJRlAjJAo7qD8NuINYyxovLocG6bK2L7-FZSRBYbp36u-qHFs-NmUv2x1f3E1_zKDobRyDovs_xS_fEMKnox38/s1600/Wrapper.jpg)
குமுதம் 6.6.2012 தேதியிட்ட இதழில் (அட்டையில் சகுனி கார்த்தி + அழகி ப்ரணீதா) டைட்டானிக் நூற்றாண்டையொட்டி நானெழுதிய ஐந்து பக்க கட்டுரையான மூழ்கவே மூழ்காத கப்பல் வெளியாகி உள்ளது. தவிர, எனது சமீப வெளியீடான தேவதை புராணம் கவிதைத் தொகுப்பு குறித்த சுருக்கமான நூல் அறிமுகம் பு(து)த்தகம் பகுதியில் இடம் பெற்றுள்ளது. குமுதம் போன்ற ஓர் உச்சபட்ச வெகுஜன பத்திரிக்கையில் வெளியாகும் என் முதல் பெரிய படைப்பு என்ற வகையில் எனக்கு முக்கியமானதொரு நிகழ்வு இது. வசதியும் வாய்ப்பும் வாய்த்தவர்கள் வாங்கி வாசித்து வாயார வாழ்த்தலாம்.