Posts

Showing posts from May, 2021

நித்ய தண்டனை

Image
வைரமுத்து இல்லையென்றால் நான் எழுத்தாளன் ஆகியிருக்கவே மாட்டேன். என் வருகையை உலகிற்கு அறிவித்தவர் வைரமுத்து. அந்த நன்றியும் மரியாதையும் எப்போதும் அவர்மீது எனக்கு உண்டு. இறுதி வரையிலும் இருக்கும். ஆனால் அதன் நிமித்தம் அவர் இலக்கிய இடத்தை உயர்த்தியோ, அவரது பாலியல் அத்துமீறல்களை ஆதரித்தோ ஒருபோதும் பேச மாட்டேன். எழுத்தில் வைரமுத்துவின் இடம் என்ன? வைரமுத்து மிகச் சிறந்த திரைப் பாடலாசிரியர். இந்திய அளவில் கூட இதுவரை உருவான சினிமா பாடலாசிரியர்களுள் முதன்மையானவராக இருக்கலாம், ஆனால் எனக்கு பன்மொழிப் பாண்டித்யம் இல்லாததால் அதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் தமிழ் சினிமா அளவில் எடுத்தால் ஆகச் சிறந்த பாடலாசிரியர் அவரே - கண்ணதாசனும், வாலியும் அவருக்குப் பின்தான். வெகுஜனங்களை வாசகர்களாகக் கொண்ட புதுக்கவிதையை எடுத்துக் கொண்டாலும் அவரே தமிழில் முதன்மையானவர். தமிழில் பரப்பியப் புதுக்கவிதை எழுதிய அனேகம் பேரை வாசித்திருக்கிறேன் (குறைந்தது ஒரு நூலேனும்) என்ற தகுதியில் இதை உறுதியாகச் சொல்வேன். போலவே 'வில்லோடு வா நிலவே' குறிப்பிடத்தகுந்த வெகுஜன நாவல். இதைத் தாண்டி நவீன இலக்கியத்தில் வைரமுத்துவுக்கு எந

தடுப்பூசி அனுபவங்கள்

Image
நண்பர்கள் சிலர் நான் தடுப்பூசி போட்டுக் கொண்டதைப் பற்றி தனிப் பேச்சில் விசாரிக்கிறார்கள் என்பதால் பொதுவாய் என் அனுபவத்தை, புரிதல்களை எழுதி விடலாம் என நினைக்கிறேன். என் அம்மாவிலிருந்து தொடங்கலாம். மார்ச் துவக்கத்திலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்திய‌ அரசு தடுப்பூசி போடத் துவங்கினார்கள். எனக்கு அந்த மாதம் முழுக்க அம்மாவுக்குத் தடுப்பூசி போடுவதில் தயக்கங்கள் இருந்தன - இத்தனைக்கும் அவருக்கு எந்த வயோதிக‌ உபாதைகளும் இல்லை. நான் கவலைப்பட்டது தடுப்பூசியின் திறன் குறித்து அல்ல‌; தடுப்பூசியின் உடனடி பக்க விளைவுகள் பற்றியும் அல்ல‌; சில ஆண்டுகள் கழித்து ஏதேனும் பெரிய விளைவுகள் நேருமா என்ற கேள்வியே. அதற்கு அப்போதும் பதில் இல்லை, இப்போதும் இல்லை. இடையில் எங்கள் அடுக்ககத்தில் இருக்கும் முதியோர் அனைவரும் போட்டுக் கொண்டார்கள், ஊரில் என் மாமனார், மாமியாரும் போட்டு விட்டார்கள். இது அம்மாவுக்கு ஒரு peer pressure உண்டாக்கி தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றி என்னிடம் கேட்க ஆரம்பித்தார். அதற்கு மேல் நான் தயங்கவில்லை. மறுநாளே நான் அழைத்துப் போய் பெங்களூர் ஓல்ட் ஏர்போர்ட் ரோட் மனிப்பால் மருத்துவமனையில் ப