Posts

Showing posts from May, 2013

முதல் நரை

மழிக்காத‌ மீசையில் சிரைக்காத‌ தாடியில் வரலாம் மிகக் கச்சிதமாய்ச் செதுக்கிய கிருதாவில் வரலாம் மார்பில் அடர்ந்திருக்கும் மயிர்க்கொத்தில் வரலாம் லக்ஷம் தலைமுடிகளில் எதாவதொன்றில் வரலாம் ரகசிய ப்ரியத்துடன் மறைப்பின் சௌகரியத்துடன் ஆண் குறியில் அல்லது ஆசன வாயில் வரலாம் - ஓரிரு எச்சரிக்கைகளை சிற்சில‌ அறிவிப்புக்களை மௌனமாய்ப் பகிர்கிறது அந்த ஆதிரோம வெள்ளி மனைவியிடம் சிரித்துப் பேச‌ ஞாபகப்படுத்துகிறது குழந்தைகளுடன் விளையாட‌க் கூவிய‌ழைக்கிறது பெற்றோர்களை கவனித்துக் கொள்ளச் சொல்கிறது பால்ய நண்பர்களை ஆசிரியர்களை தேடச்செய்கிறது புதைந்த காதல்களை துரோகங்களை அவமானங்களை முட்டாள்தனங்களை வக்கிரங்களைத் தோண்டுகிறது பொய்பேசுதலை புறங்கூறுதலை நிறுத்தக் கோருகிறது பயங்கொள்தலை சினங்கொள்தலை குறைக்கக் கேட்கிறது படிக்காத புத்தகங்களை பார்க்காத திரைப்படங்களை புசிக்காத புலாலுண்டிகளை ருசிக்காத மதுப்புட்டிகளை முடிக்காத பயணங்களை புணர்ந்திராத‌ பெண்களை செய்யாத பாவங்களை மனதில் ஓங்கி அறைகிறது கூழாங்கற்கள் சகிதம் கதை பேசும் ஒரு ஜென் குரு போல் மரணத்தின் இளஞ்சுகந்தத்தை மானசீகமாய் முகரத் த‌ந்து என்றோ த

ஒரு தசாப்தத்தின் ஸ்வப்னம்

Image
இது என் பத்து வருடக் கனவு. 2000ங்களில் தொடக்கத்தில் ஏதோ ஒரு வருடத்தில் தான் முதன் முதலாக‌ ஆனந்த விகடனுக்கு என் படைப்பு ஒன்றை அனுப்பினேன். அது ஒரு விஞ்ஞானச் சிறுகதை. பெயர் நியூட்டனின் மூன்றாம் விதி . துரதிர்ஷ்டவசமாய் அது இன்னமும் எதிலும் பிரசுரமாகவில்லை. பிற்பாடு இந்த பத்தாண்டுகளில் கவிதைகள், சிறுகதைகள் என நான் முக்கியமாய் முயன்ற அத்தனை ஆக்கங்களையும் ஒரு ராணுவக்கடமை போல் முதலில் ஆனந்த விகடனுக்குத் தான் அனுப்பி இருக்கிறேன். பள்ளி நாட்களில் என் வீட்டில் குமுதம் தான் வாங்குவார்கள். ஆனாலும் பக்க‌த்து வீட்டில் வாங்கிய ஆனந்த விகடன் தான் அதிகம் ஈர்த்தது. அப்போதைய அதன் அத்தனை வசீகர உள்ளடக்கங்களையும் தாண்டி சுஜாதா ஒரு முக்கியக் காரணம். அதனால் தான் அதில் என் எழுத்து வருவது என்பது மஹாஸ்வப்னமாகத் தோன்றியது. அதனால் தான் முதன்முதலில் என் ட்வீட் விகடனில் வந்த போது கூட மிகுந்த மகழ்வுற்றேன் (விகடனுக்கும் அது தான் முதல் வலைபாயுதே !). ஆனால் அது என் அப்பீல் இன்றி அவர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது. அதனால் குமுதத்தில் சிறுகதை, கட்டுரை வந்தாயிற்று, குங்குமத்தில் தொடர், கவிதை வந்தாயிற்று ஆனால் விக

சுஜாதா Birthday Special

சுஜாதாவின் பிறந்த நாளான இன்று (மே 3) எனது சிறுகதை ஒன்று தமிழ் பேப்பர் இணைய இதழில் வெளியாகி உள்ளது: மதுமிதா : சில குறிப்புகள் - http://www.tamilpaper.net/?p=7714 இது கொஞ்சம் experimental சிறுகதை. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிற்றிதழுக்காக எழுதப்பட்டது. அவ்விதழ் வராததால், பின் சில‌ வெகுஜன இதழ்களுக்கு அனுப்பப்பட்டு, நிராகரிக்கப்பட்டு (ஓரிடத்தில் சொல்லப்பட்ட காரணம்: இது பத்தாண்டுகளுக்கு பின்பு எழுதப்பட வேண்டிய சிறுகதை), திருத்தப்பட்டு இப்போது என் சிறுகதைத் தாய் வீட்டின் வழி வெளியாகிறது. தாய் வீடு எனக் குறிப்பிட காரணம் என் முதல் சிறுகதையான E=mc 2 தமிழ் பேப்பரில் தான் வெளியானது - அது சுஜாதாவின் நினைவு தினத்தன்று. இன்று அவர் பிறந்த தினத்தில் அவர்   தொடங்கிய‌ சிறுகதைப் பரிசோதனை விளையாட்டை நானும் முன்னெடுத்துச் செல்வதை அவருக்குச் செய்யும் tribute-ஆகக் கருதுகிறேன்.