Posts

Showing posts from January, 2016

இறுதி இரவு [சிறுகதை]

Image
“ இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ ” - திருக்குறள் (913) “கன்னிப் பொணம் விழுந்திருச்சு!” ஊர் முழுக்க இதே பேச்சாய் இருந்தது. டீக்கடையில், பொதுக் கழிப்பிடத்தில், வீட்டுத் திண்ணையில், முச்சந்திக் கிணற்றடியில், சீட்டுக் கச்சேரியில், எல்லா இடங்களிலும். “குப்பனுக்கு சொல்லி விட்டாச்சா?” விஷயம் கேள்விப்பட்டவர்களின் முதல் கேள்வி இதுவாகவே இருந்தது. இறந்தது யார்? எப்படிச் சாவு நடந்தது? என்றெல்லாம் பிற்பாடு தான் பேச்சு தொடங்கியது. “சடங்கு எப்ப நடக்குதாம்?” “இதென்னய்யா புதுசாக் கேட்கறீங்க? எப்பவும் போல இன்னிக்கு ராத்திரி தான்.” கண்களில் மின்னும் ஆர்வத்தை மறைத்தபடி மெல்லிய குரலில் கிசுகிசுத்தார்கள். அந்தப் பெரிய வீட்டில் பிணம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டியைச் சுற்றி தரையில் ஏராளமான பெண்கள் ஒப்பாரி வைத்திருக்க, ராமசாமி மட்டும் பிணத்தின் முகத்தைப் பார்க்க வாகாக மரச்சேர் போட்டு அமர்ந்து கொண்டு தோளில் இருந்த துண்டின் முனையைச் சுருட்டி வாய்க்கும் மூக்கிற்கும் மத்தியில் வைத்திருந்தார். ஏற்கனவே அழுதிருப்பதும் இனியும் அழத் தயார் என்பதையும் அது சொல்லியது. அவர் வயதொத்தோர் வந்து பிணத்தை வ

ஞயம் பட வரை

Image
மின்னூல்களின் தளமான ப்ரதிலிபி யும், அகம் மின்னிதழும் இணைந்து  ' ஞயம்பட வரை ' என்ற பேரில் கட்டுரைப் போட்டி ஒன்றினை அறிவித்திருந்தார்கள். ஔவையின் ஆத்திச்சூடியில் ஒருவரி 'ஞயம்பட உரை'. நயமாகப் பேசு என்று அதற்கு அர்த்தம். அதைச் சற்று மாற்றி நயமாக எழுது என்ற பொருளில் போட்டிக்கு இத்தலைப்பைச் சூட்டி இருக்கிறார்கள்! " இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்? " என்பது தலைப்பு. அதற்கு என் கட்டுரையை அனுப்பி இருக்கிறேன். தற்போது நடுவர் தீர்ப்பு தவிர்த்து போட்டியின் ஒரு கூறாக வாசகர் விருப்பம் என்பதையும் இணைத்திருக்கிறார்கள். அதாவது பொதுஜனம் படித்துப் பார்த்து படைப்புக்கு மதிப்பிடுவது. இந்த மாதிரி சூப்பர் சிங்கர் மாடல் போட்டிகளில் அவ்வளவாய் ஆர்வம் இல்லாதவன் என்றாலும் இதற்கு நான் எழுதிய கட்டுரை சமீப காலங்களில் நான் எழுதியவற்றில் கடும் உழைப்பையும் சிந்தனைச் செறிவையும் கோரிய ஒன்று என்பதால் விட்டுத் தந்து பின்வாங்க‌ மனமில்லை. அதனால் நட்புக்காக அல்லது மரியாதைக்காக அல்லாமல் நிஜமாகவே ஆர்

தேவதை புராணம் - மின்னூல்

Image
தேவதை புராணம் என் இரண்டாவது கவிதைத் தொகுதி. ஏழு பருவங்களிலும் ஒரு பெண் தன் காதலனைக் குறித்துப் பாடுவதாய் அமைந்த 150 சிறுகவிதைகளால் ஆனது இந்நூல். தற்போது NewsHunt மூலம் மின்னூலாக வெளியாகிறது. இந்தக் கவிதைப் புத்தகத்திற்கு நான் எழுதிய முன்னுரையை இவ்விடம் வாசிக்கலாம்: http://www.tamilpaper.net/?p=5541 . மின்னூலை வாங்க‌ : http://ebooks.newshunt.com/Ebooks/default/Devathai-Puraanam/b-149624

தமிழ் திரைப்பட விருதுகள் - 2015

Image
#CSKFilmAwards2015 சிறந்த திரைப்படம் - தனி ஒருவன் @archanakalpathi @jayam_mohanraja — சி.சரவணகார்த்திகேயன் (@writercsk) January 2, 2016 #CSKFilmAwards2015 சிறந்த மாற்று திரைப்படம் - காக்கா முட்டை @dhanushkraja @VetriMaaran @Dir_Manikandan — சி.சரவணகார்த்திகேயன் (@writercsk) January 2, 2016 #CSKFilmAwards2015 சிறந்த இயக்குநர் - ராஜமௌலி [பாகுபலி] @ssrajamouli — சி.சரவணகார்த்திகேயன் (@writercsk) January 2, 2016 #CSKFilmAwards2015 சிறந்த திரைக்கதை - மோகன் ராஜா & சுபா [தனி ஒருவன்] @jayam_mohanraja @sureshsubha — சி.சரவணகார்த்திகேயன் (@writercsk) January 2, 2016 #CSKFilmAwards2015 சிறந்த வசனம் - மோகன் ராஜா & சுபா [தனி ஒருவன்] @jayam_mohanraja @sureshsubha — சி.சரவணகார்த்திகேயன் (@writercsk) January 2, 2016 #CSKFilmAwards2015 சிறந்த கதை - ஆர். ரவிக்குமார் [இன்று நேற்று நாளை] @Ravikumar_Tup — சி.சரவணகார்த்திகேயன் (@writercsk) January 2, 2016 #CSKFilmAwards2015 சிறந்த பின்னணி இசை - இளையராஜா [ருத்ரமாதேவி] — சி.சரவணகார்த்திகேயன் (@writercsk)