Posts

Showing posts from July, 2013

களிபத்துப்பரணி

Image
வண்ணத்துப்பூச்சியே உன் இறகுகளை விரிக்கும் போது என்ன கனவு காண்கிறாய்... இது ஒரு ஜப்பானிய ஹைக்கூ (மொழிபெயர்ப்பு: மிஷ்கின்). இந்தக் கவிதை அநிச்சையாய் அரட்டைகேர்ளிடம் அழைத்துச் செல்கின்றது. ஒரு கலர்ஃபுல்லான பட்டர்ஃப்ளையின் கனவு அவரது ட்வீட்கள் போலத்தான் இருக்கும் எனத்தோன்றுகிறது. அரட்டைகேர்ள் ( @arattaigirl ) என்பது கோவையைச் சேர்ந்த பிரபல‌ பெண் ட்வீட்டரான சௌம்யா. இன்று அவர் பத்தாயிரம் ஃபாலோயர்களை ட்விட்டரில் கடந்திருக்கிறார். இந்த பிரம்மாண்ட மைல் கல்லின் அருகே நின்றபடி அவர் கடந்து வந்த எழுத்துப் பாதையைத் திரும்பிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம் - உடன் அவருக்கென‌ சில goodகளும் குட்டுகளும். முதலில் ஒரு சின்ன கணக்கு பார்க்க‌லாம்: கிட்டதட்ட இரண்டே கால் வருடங்கள் - கொஞ்சம் துல்லியம் கூட்டினால் 818 நாட்கள் - இந்தக் கால வரையறையில் இன்றைய அவசர உலகில், தமிழ் வாசிப்புச் சூழலில் ஒருவர் அதிகபட்சம் எத்தனை பேரை தன் எழுத்தால் வசீகரிக்க முடியும் என நினைக்கிறீர்கள்? அதுவும் எந்தப் பிரபலப் பின்புலமும் இல்லாமல் எந்த ஊடக பக்க‌பலமும் இல்லாமல் ஒரு சமூக வலைதளத்தில் மட்டும் எழுதி - 1000 பேர்? 2000

அநிச்சை நகல்கள்

இன்றைய‌ செகண்ட் ஸிட்டிங் ரயில் பயணத்தில் அருகே ஓர் இளங்குடும்பம். கணவன், மனைவி, குழந்தை. குழந்தைக்கு 3 இருக்கும்; மனைவிக்கு குறைந்தபட்சம் 36 (முதலாவது வயது). அக்குழந்தைக்கு உணவூட்ட அப்பெண் நேடுநேரமாய் முயற்சித்துக் கொண்டிருந்தார். ம்ஹூம். குழந்தை (சம்)மதியேன் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. பிறகு அந்த ஆள் தன் பையிலிருந்து ஐபேட் எடுத்து ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாடிக் காட்ட ஆரம்பித்தார் அந்தக் குழந்தைக்கு. உற்சாகமான குழந்தை அதைப் பார்த்துக் கொண்டே ஏதோ பேசியபடி சமர்த்தாய் சோறுண்ணத் தொடங்கியது. இதைப் பார்த்ததும் எனக்கு சட்டென ஒரு ட்வீட் தோன்றியது: " அம்மா ஊட்டாத சோற்றை ஆங்க்ரி பேர்ட் ஊட்டும் ". அதை மொபைலில் டைப் செய்தும் விட்டேன். ஆனால் ஏதோ உள்ளுணர்வில் உறுத்தவே தேடிப் பார்த்ததில் கிடைத்தது இது! அம்மா ஊட்டாத சோறு அப்பளம் ஊட்டும்:-) #பொறியல் செய்யலை — சௌம்யா (@arattaigirl) April 22, 2012 நீதி : ஏற்கனவே நான் பலமுறை சொன்னது தான். சில விஷயங்களை காப்பி எனத் தட்டையாய் சொல்லி விட முடியாது. படித்த பாதிப்பில் மிகப் பிடித்துப் போனதில் வார்த்தையோ வாக்கியமோ அதன் பகுதியோ அப்

நிசப்தத்தின் பேரோசை

Image
ஆழம் - ஜூலை 2013 இதழில் ஜியா கான் தற்கொலை குறித்த என் கட்டுரை வெளியாகியுள்ளது. அதன் முழு வடிவம் இது. ******* “தற்கொலை என்பது உச்சகட்ட கோழைத்தனம் தான்; ஆனால் அதைச் செய்து கொள்ள உட்சபட்ச துணிச்சல் தேவை.”  – ட்விட்டரில் @arattaigirl சௌம்யா இந்தியத் திரையுலகில் உடனடித் துணிச்சல் போர்த்திய, உள்ளே கோழைத்தனம் மண்டிய பெண்டிர் மிகுதி. அதனால் நடிகைகள் தற்கொலை செய்வது தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போல் வழமையான வருடாந்திர நிகழ்வாகி விட்டது. நீளும் இப்பட்டியலின் மிகச்சமீபத்திய இணைப்பு இந்திப்பட நடிகை ஜியா கான். கடந்த ஜூன் 2ம் தேதி இரவு 11:45 மணியளவில் மும்பையின் ஜுஹூவிலிருக்கும் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் 25 வயதான ஜியா கான். ஏன்? பார்க்கலாம். ந‌ஃபீஸா கான் என்ற இயற்பெயர் கொண்ட ஜியா கான் நியூயார்க்கில் பிறந்தவர். லண்டனில் வளர்ந்தவர். நல்ல வசதியான முஸ்லிம் குடும்பம். அம்மா ராபியா கான் முன்னாள் இந்தி நடிகை. அந்தப் பிறவித் தொடர்பிலும் தன் 6வது வயதில் ராம் கோபால் வர்மாவின் ரங்கீலா படம் பார்த்த பாதிப்பிலும் ஜியாவை சினிமா சுண்டி இழுத்தது. இத்தனைக்கும் பள்ளியில் நன்றா