Posts

Showing posts from March, 2018

மோகினியாட்டம் [சிறுகதை]

Image
“பொம்பளைன்னா நாணிக் கோணனும். போத்திக்கிட்டு நிக்கனும். பொத்திக்கிட்டு இருக்கனும். அதானே? யூ மேல்ஷாவனிஸ்ட் பிக்!” ஃபேஸ்புக் மெஸெஞ்சரில் அனற்பொறி பறக்காத குறையாகக் கோபப்பட்டாள் சுஜா. “திட்டு எதுக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு வாங்கினா ஆறுதலா இருக்கும்!” ரமணியின் வாக்கியத்தில் மிதந்த கேலி அவளை மேலும் ரௌத்திரமாக்கியது. “உலகமயமாக்கலில் காணாமல் போனவர்கள் வெட்கப்படும் பெண்டிரும் வேதனைப்படும் ஆண்களும். - இது என்னடா ஸ்டேட்டஸ்?” “உண்மைதானே!” “கையில் பால்சொம்போட தலை குனிஞ்சுக்கிட்டே பெண்கள் ஃபேஸ்புக் வரனுமோ!” “ஏய், அந்த ஸ்டேட்டஸில் ஆம்பிளைகளையும்தானே கேலி பண்ணி இருக்கேன்!” “பொய். ஆம்பிளை எப்போ வேதனைப்படுவான்? பொம்பளை ஏமாத்தினா. ஆனா இப்ப இருக்கறவனுக அதைக் கடந்துடறாங்கன்னு பாஸிடிவ்வாச் சொல்றே.” “பொம்பளைக இப்பலாம் அப்படி ஏமாத்தறதில்லன்னும் எடுத்துக்கலாம்ல?” “ஒரு தறுதலை எப்படி யோசிப்பான்னு தெரியாதா!” “:-)))” “என்ன இளிப்பு?” “நீ ஆம்பிளையாப் பொறந்திருக்கனும்னு நினைச்சேன்.” “பொறந்திருக்கலாம்தான். நீ பொம்பளையாப் பொறந்திருந்தா!” “என்ன மேடம் சட்டுனு ரொமான்டிக் ஆயிட்டீங்க!” “ஆனா ப

காமத் தாழி [சிறுகதை]

Image
சாகஸ ராத்திரி! அந்தப் பெயரே ஜிலீர் என்றிருந்தது சில்வியாவுக்கு. ADVENTURE NIGHT என்று காப்பர் ப்ளேட் கோத்திக் எழுத்துருவில் அச்சிடப் பெற்ற அந்த நுழைவுச் சீட்டை எடுத்தாள். முகமூடி, மதுக்கோப்பை, வாண வேடிக்கைக்கிடையே Happy New Year’s Eve – 2018. ₹ 1,00,000 என்றிருந்த பொன்ஜிகினாப் புடைப்பை விரல்களால் ஆதூரமாய்த் தடவினாள். பார்த்திபன் முதலில் அதைச் சொன்ன போது விளையாடுகிறான் என்றே நினைத்தாள். “ச்சீய்… போடா பொறுக்கி!” அவன் எப்போதும் அப்படித்தான். ஆபாசமாய்ப் பேசிச்சிரிக்க வைப்பதில் அசகாயசூரன். சில்வியா திருமணமாகி இவ்வூருக்கு வந்து இரண்டரையாண்டுகள் ஆகின்றன. மொழி தெரியாத மிலேச்சர்கள் சூழ வாழும் அந்த அந்நியப் பிரதேசத்தில் ஒவ்வொரு பகலும் ஒவ்வொரு ராத்திரியும் அத்தனை அனுபவித்து, அத்தனை ரசித்து நகர்த்த முடிகிறது அவளுக்கு. சண்டைகள் ஏராளம். அதன் பின்பான கொஞ்சல்கள் அதினினும் தாராளம். பார்த்திபனுக்கு எல்லாமே த்ரில்தான். பெய்யும் மாமழையில் நனைந்தபடி சில்ட் பியர் அருந்துவதாகட்டும், கோடைக்கானல் ‘குணா’ பாறையினுள் அவள் கையை இறுகப் பற்றியபடி இறங்குவதாகட்டும், தேசிய நெடுஞ்சாலையில் மணிக்கு 150 கில

ஆண்டாளும் பத்மாவதியும்

Image
இந்திய யூனியன் என்பது கருத்துரிமை கொண்ட தேசம் என்கிறார்கள். நிஜம் தானா? சமீபத்தில் வலதுசாரி உதிரி அமைப்புகள் படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரத்துக்குச் சவால் விடும் வகையில் மேற்கொண்டுள்ள அராஜகச் செயல்கள் இந்திய அரசியல் சாசனம் நம் குடிமக்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளையே கேள்விக்கு உட்படுத்துபவை. மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்தில் இருப்பதையும் இந்த அத்துமீறல்களையும் தனித்தனியே பார்க்க முடியவில்லை. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்தியாவில் சமூக மற்றும் கலாசாரச்சகிப்பின்மை வலுத்து வருகிறது. இரு உதாரணச் சம்பவங்கள். ஒன்று தென்னிந்தியாவில்; மற்றது வட இந்தியாவில். * முதலில் வைரமுத்துவின் 'தமிழை ஆண்டாள்' கட்டுரை. முதலில் ஓர் உரையாக நிகழ்த்தப்பட்டு பின் தினமணி நாளேட்டில் வெளியானது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் என்ற கோதை நாச்சியார் பற்றிய இதில் நாற்பதாண்டுகளுக்கு முன் நாராயணன், கேசவன் என்ற வரலாற்றுப் பேராசிரியர்களால் எழுதப்பட்ட Bakthi Movement in South India என்ற ஆய்வுக் கட்டுரையில் ஆண்டாள் திருவரங்கம் கோயிலில் தேவதாசியாக வாழ்ந்தவர் என்ற குறிப்பு வருவதைச் சுட்டுகிறா