Posts

Showing posts from September, 2012

கூடங்குளம் - சில விளக்கங்கள்

சில‌ தினம் முன் ராகுல் சித்தார்த்தன் என்ற விஞ்ஞானி எழுதிய கூடங்குளம் அணு உலை குறித்த The real questions from Kudankulam என்ற நாளிதழ் கட்டுரையை ட்விட்டரில் பகிர்ந்திருந்தேன். இரு தினம் முன் ரகுபதி ராஜா இது குறித்த சில கேள்விகளை முன்வைத்து ஒரு விரிவான ட்விட்லாங்கர் போட்டிருந்தார். அதற்கான பதில்களை இங்கே தருகிறேன்: ******* நீங்கள் கொடுத்த இந்த கட்டுரை படித்தேன். நன்றி, ரகு. முதலில் ட்விட்டரில் இருக்கும் உங்கள் விளையாட்டுத்தனமான பிம்பத்தை உடைப்பது போல் இவ்வளவு விரிவாய்க் கேள்விகள் கேட்டதற்கு kudos. இதைப் பற்றி எழுத எனக்கு சந்தர்ப்பம் அமைத்துத் தந்தமைக்கு வந்தனம். மிக நுண்ணியமாக நடுநிலை பேசுவதுபோல் பாசாங்கும் கட்டுரை இது. இந்தக் கட்டுரை நடுநிலை பேசவில்லை.  அப்படிப் பேசுவதாக claim செய்யவுமில்லை. விஞ்ஞானம் ஏற்படுத்தியிருக்கும் ஒரு சமூக பிரச்சனை பற்றி ஒரு விஞ்ஞானி தன் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். அவ்வளவே. இரு தரப்புக்கும் பாயிண்ட்ஸ் சொல்கிறார் என்று நாமாக நடுநிலைமை என்று முத்திரை குத்தலாகாது. வேண்டும், வேண்டாம் என்று இரு தரப்புகள் இருப்பது போல் சில விஷயங்களை ஒழுக்கமாகச

பரத்தை கூற்று : கவிஞர் தி.பரமேசுவரி

சென்னையைச் சேர்ந்த தி.பரமேசுவரி எனக்கான வெளிச்சம், ஓசை புதையும் வெளி ஆகிய கவிதைத் தொகுப்புக்கள் எழுதி இருக்கிறார். இவரது முனைவர் பட்ட ஆய்வேடு ம.பொ.சி பார்வையில் பாரதி நூலாக‌ வெளிவந்திருக்கிறது. இவர் தமுஎகச பண்பாட்டு மலர் - 2012 ல் பரத்தையர் இலக்கியம் குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் பரத்தை கூற்று நூலை முக்கியமானதெனக் குறிப்பிடுகிறார் - அப்பகுதிகளை மட்டும் நீல நிறத்தில் எடுத்துக் காட்டி இருக்கிறேன். http://tparameshwari.blogspot.in/2012/07/blog-post_05.html ******* மனம் தொடாத உறவுகளில் பசியாறும் பரத்தையர் சங்கஇலக்கிய அகமரபில் காணப்படும் பெண்மாந்தர்களில் குடும்ப அமைப்பு சாராத பெண்ணாக அமைபவள் பரத்தை. இரண்டாயிரம் வருடப் பழமை வாய்ந்த சங்க இலக்கியத்திலிருந்து இற்றைநாள் வரையிலான கவிதைகளில் பரத்தை புனையப்படுமாற்றைக் கவனித்தலே இக்கட்டுரையின் நோக்கம். தனிச்சொத்துரிமைக்காக ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுங்குபடுத்தப்பட்டாலும் ஒருத்திக்கு ஒருவன் என்பதே நடைமுறைப்படுத்தப்பட்டது. தன் வாரிசுரிமையைப் பாதுகாக்க ஆண், பெண்ணுக்குக் கற்புக்கோட்பாட்டை வலியுறுத்தினான். குடும்ப நிறுவனத்தைக் கட்டமைத

பரத்தை கூற்று : ஒரு வாசகியின் கடிதம்

 பரத்தை கூற்று கவிதைத் தொகுதி பற்றி சில நாட்கள் முன்பு ஒரு வாசகி எழுதிய கடிதம் இங்கே: ******* சரவணகார்த்திகேயனுக்கு உங்களின் பரத்தமை கூடு எதேச்சையாக தோழி வீட்டில் படிக்க நேர்ந்தது  வலியின் உச்சம். பெண்ணின் வலி உணர்ந்து மனம் கனத்து போனது. இந்த வரிகள் சொல்லும் எல்லா ஆண்களுக்கும். ஆனால் வார்த்தைகளில் பெண்கள் வதைபடுவது கொடுமையின் உச்சம். சமகாலத்தை பத்தி எழுதி இருக்கிறீர்கள் வேறு என்ன சொல்ல. வலி மிக்க படைப்பு. மாறுமா இந்நிலை ? "அன்பு மனைவியை ஆசைப் புதல்வியை ஒற்றை கணத்தில் எனை போலாக்கும்  வல்லமை நிறைந்தது உன் அகால மரணம்" இந்த வரிகள் மட்டும் ஒட்டிவிட்டது ஒரு முள்ளைப் போல குத்தி. கோவை மு சரளா ******* பின்குறிப்பு : பரத்தை கூற்று என்பதைத் தான் பரத்தமை கூடு என்று குறிப்பிட்டிருக்கிறார் சரளா.

மதன் கார்க்கி - மினி பேட்டி

Image
ஆழம் ‍- செப்டெம்பர் 2012 இதழில் வெளியாகி இருக்கும் சமூகவலைதளங்களில் பிரபலங்கள் குறித்த எனது கட்டுரைக்காக‌ ட்விட்டரில் தீவிரமாக இயங்கும் பிரபலம் என்ற வகையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி யை தொலைபேசி வழி ஒரு மினி பேட்டி எடுத்தேன். பேட்டி சற்றே நீண்டு விட்டதால், தேவையானதை மட்டும் பயன்படுத்திக்கொண்டோம். முழுப்பேட்டி இன்று தமிழ் பேப்பர் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. மதன் கார்க்கியுடன் ஒரு மினி பேட்டி - http://www.tamilpaper.net/?p=6776  *******

சினிமா சித்தாளு & The காமன் Man

ச்சீய் பக்கங்கள் தொடருக்கென பிரதான கட்டுரை தவிர்த்து சுவாரஸ்யத்திற்காக நான் உருவாக்கிய கேரக்டர்கள் நான்கு: Stats சவீதா கவிஞர் கில்மா சினிமா சித்தாளு The காமன் Man இதில் Stats சவீதா பிரபல செக்ஸி கார்ட்டூன் கேரக்டரான சவீதா பாபி பாத்திரத்தை ஒட்டியது. எடுத்துக் கொண்ட அந்தத் தலைப்பு தொடர்பான புள்ளி விவர‌ங்களை இது பட்டியலிடும். இதை அப்படியே தொடரிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள். அடுத்து கவிஞர் கில்மா . அந்த வாரத்தின் கில்மா மேட்டர் தொடர்பாய் அங்கதத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடைப்பட்ட புள்ளியில் ஒரு குறுங்கவிதை சொல்லும் இந்தக் கேரக்டர். கவிஞர் குஜிலிகும்பான் என அதிஷா அடிக்கடி குறிப்பிடும் பாத்திரம் தான் இதன் இன்ஸ்பிரேஷன். தொடரில் இதன் பெயரை கவிஞர் காத்துவாயன் என மாற்றி இருக்கிறார்கள். அப்புறம் சினிமா சித்தாளு . ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு நாவலில் வரும் சினிமாவுக்கு அடிமையான‌ பாத்திரத்தைத் தழுவியது இது. டாபிக் தொடர்பான சினிமா செய்திகளை இவர் பட்டியலிடுவார். இது தொடரில் இல்லை. கடைசியாய் The காமன் Man . எடுத்துக் கொண்ட விஷயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மென் ஏ ஜோக் ச

ச்சீய் பக்கங்கள்

Image
சரியாய் ஐந்து வருடங்கள் முன் கிட்டதட்ட இதே தேதிகளில் தான் என் முதல் எழுத்தை அச்சில் காண வாய்த்தது. குங்குமம் இதழில் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தெடுத்த முத்திரைக் கவிதையாக என் ஒருத்தி நினைக்கையிலே வெளியானது. இடைப்பட்ட வருடங்களில் வலைதளங்கள், அச்சிதழ்கள், புத்தகங்கள் எனக் கடந்து வந்தாயிற்று. இப்போது என் எழுத்து வாழ்வின் அடுத்த‌ முக்கிய மைல்கல்லையும் குங்குமம் இதழே நடுகிறது. 17-9-2012 தேதியிட்ட குங்குமம் இதழில் ' ச்சீய் பக்கங்கள் ' என்ற என் தொடர் ஆரம்பம் ஆகியுள்ளது. ஒவ்வொரு வாரமும் பொதுவெளியில் பேசத்தயங்கும் ஆனால் எல்லோரும் உள்ளூரப் பேரார்வம் கொண்ட ஒரு விஷயத்தை எடுத்துக் கதைக்க உத்தேசம். மங்களகரமாகத் தொடங்க வேண்டும் என்பதாலும், 'ladies first' என்பதாலும் இவ்வாரம் ப்ரா பற்றி எழுதி இருக்கிறேன்.   "பாலியல் எழுத்தாளன் என்ற முத்திரை விழும்" என்கிற என் நெருங்கிய சினேகங்களின் எச்சரிக்கைகளை மீறி, அதை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு துளியும் ஆபாசம் கலவாது எழுதும் கவனமான‌ கத்தி நடை முயற்சி தான் இது. அம்ருதா இதழில் கடந்த ஒரு வருடமாக விட்டு விட்டு 2011ம் ஆண்டுக

கலைஞருடன் COFFEE, வைரமுத்துவுடன் WALK

ஆழம் ‍- செப்டெம்பர் 2012 இதழில் சமூகவலைதளங்களில் பிரபலங்கள் குறித்த எனது கட்டுரை வெளியாகி உள்ளது. ட்விட்டரில் இருக்கும் பிரபலம் என்ற வகையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி யை தொலைபேசி வழியும் ட்விட்டரால் பிரபலம் ஆனவர் என்ற வகையில் 'அரட்டைகேர்ள்' சௌம்யா வை இணையத்தின் மூலமும் மினி பேட்டி எடுத்தது இக்கட்டுரை எழுதியதன் குறிப்பிடத்தகுந்த அனுபவம். சிரமம் பாராது பேட்டியளித்த இருவருக்கும் என் ப்ரியங்கள் . கலைஞர் முதல் வலைஞர் வரை - http://www.aazham.in/?p=1861 ******* கடந்த ஆகஸ்ட் 13 அன்று தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி ட்விட்டரில் தன் அதிகாரப்பூர்வக் கணக்கைத் துவக்கி இருக்கிறார். அவர் போட்ட முதல் ட்வீட் டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்து ஆங்கிலத்தில் இருந்தது! உடனே கட்சி உடன்பிறப்புக்கள் ட்விட்டரில் இணைந்து வரவேற்பு மற்றும் வாழ்த்து மழை பொழியத் தொடங்கி விட்டனர். கொஞ்ச நேரம் திமுக மாநில மாநாடு நடக்கும் நகரின் சாலைபோல் காட்சியளித்தது டைம்லைன்! கலைஞர் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் சக்தி. ஒவ்வொரு துறையிலும் அவர் போன்ற பிரபலங்கள் ட்விட்டர், ஃபேஸ்

அசைவுகளும் அதிர்வுகளும்

Image
அம்ருதா - ஆகஸ்ட் இதழில் வெளியான 2011 பொருளாதார நொபேல் குறித்த‌ எனது கட்டுரையை இங்கே பகிர்கிறேன்: