Posts

Showing posts from October, 2011

மண்மகள் [தீபாவளி சிறப்புச் சிறுகதை]

******* அதன் பெயர் வைதேக ராஜ்யம். கங்கையும் சிந்து நதியும் போட்டிபோட்டுப் படுகையமைத்து வளப்படுத்தும் பெருநிலப்பிரதேசம். வாழும் குடிகட்கு வாரி ஈந்த அப்பூமி ஆளும் அரசனுக்கு ஓரவஞ்சனை செய்திருந்தது. வைதேக நாட்டை அப்போது ஆண்டு வந்தவன் சீரத்வாஜன். அவன் மனைவி சுனன்யை. அந்நாட்டை அடுத்து ஆட்சிப் பரிபாலனம் செய்ய அத்தம்பதியர்க்கு புத்ரபாக்கியம் இல்லை. அவர்கள் காத்திருந்தார்கள். ******* அதன் பெயர் தர்பைப்புல் தீர்த்தம். மஹாவிஷ்ணு மனங்கொண்ட மஹாலக்ஷ்மி அதில் வாசம் செய்கிறாள் என்பது நம்பிக்கை. மாமுனியான க்ருத்சமத மகரிஷிக்கு அதன் மேல் மிகுந்த ப்ரேமை. பல்வேறு மந்திர உச்சாடனங்களால் அதனைப் பரிசுத்தப்படுத்தி தவம் புரிந்து வந்தார். தன் தர்மபத்தினியின் வயிற்றில் சாட்சாத் மஹாலக்ஷ்மியே வந்து பிறக்க வேண்டும் என்ற நினைப்பு அவருக்கு. அவர்கள் காத்திருந்தார்கள். ******* அவன் பெயர் ராவணேஸ்வரன். லங்கையின் மகராஜன். பிறப்பால் பாதி அசுரன்; மீதி பிராமணன். தவம் புரிந்து பிரம்மனிடம் வரம் பெற்றவன். கிட்டதட்ட சாகாவரம் - தெய்வங்களாலோ தேவர்களாலோ அசுரர்களாலோ மிருகங்களாலோ மரணம் சம்பவிக்காத வரம். அவனது மனைவி

தினகரன் தீபாவளி மலரில்

Image
தினகரன் தீபாவளி மலர் - 2011 ல் " சமூக வலையில் பிடித்த மீன்கள் " என்ற பகுதியில் அடியேனின் ட்வீட் ஒன்றும் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது. தகவல் தெரிவித்த திரைப்பட இயக்குநர் ஆர்.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே

இது ஒரு தொடர் பத்தியின் முதல் அத்தியாயம். கடந்த ஜன‌வரி 2011ல் ஓர் இலக்கிய ச‌ஞ்சிகைக்காக எழுதப்பட்டது. சில காரணங்களால் அதில் வெளியாகவில்லை. அதனால் இங்கே (இதில் 'தேகம்' நாவல் விமர்சனத்தை மட்டும் ஏற்கனவே தனிப்பதிவாக இட்டிருக்கிறேன்). இப்போது படித்துப் பார்க்கும் போது இதன் கலவை முக்கியமானதாகப் படுகிறது . * MAD, adj. Affected with a high degree of intellectual independence – Ambrose Bierce * பத்தி எழுத்து விஷேசமானது. இங்கு ‘பத்தி’ எனக் குறிப்பிடுவது சூடம், சாம்பிராணி வரிசையில் வரும் சைக்கிள் பிராண்ட் சங்கதியை அல்ல; எந்தவொரு விஷயத்தைக் குறித்தும் பத்தி பத்தியாக நீளுவதாக அல்லாமல் சுருக்கமாக – yet – சுவாரஸ்யமாக எழுதப்படும் Column Writing எனப்படும் பத்தி எழுத்தை. இன்றைய தேதியில் தமிழில் மிகப்பரவலாக எழுதப்படும் / வாசிக்கப்படும் வலைப்பதிவுகளுக்கு ஒரு மாதிரியான முன்னார்கள் என இவ்வகைப் பத்தி எழுத்துக்களைச் சொல்லலாம் – பித்ருக்கள் alive. பத்தி எழுத்து உலகம் முழுக்க எல்லா பத்திரிக்கைகளிலுமே பிரபலமான சமாச்சாரம். குறிப்பிட்ட பத்தியை படிப்பதற்கென்றே ஒரு தினசரியையோ, வார இதழையோ வாங்குபவர

கணிமையின் பிதாமகன்

C மொழி மற்றும் யுனிக்ஸ் இயங்குதளத்தை உருவாக்கிய டென்னிஸ் ரிட்ச்சி ( Dennis Ritchie ) கடந்த வார இறுதியில் மறைந்ததையொட்டி நான் எழுதிய கட்டுரை ஒன்று இன்றைய தமிழ்பேப்பர்.நெட் இதழில் வெளியாகியிருக்கிறது. கட்டுரையை எடிட் செய்த பத்ரி சேஷாத்ரிக்கும் வெளியிட்ட மருதன், ஹரன் பிரசன்னா இருவருக்கும் என் நன்றிகள். C மொழித் தந்தைக்கு ஒரு மாணவனின் அஞ்சலி - http://www.tamilpaper.net/?p=4492 *******

பரத்தை கூற்று : காலச்சுவடு

Image
காலச்சுவடு அக்டோபர் 2011 இதழில் எனது வேண்டுகோளிற்கிணங்க பரத்தை கூற்று நூலின் சிறுவிளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை வடிவமைத்த‌ ஹரன் ப்ரசன்னாவிற்கும், வெளியிட்ட காலச்சுவடு ஆசிரியருக்கும் நன்றி.