இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.) Disclaimer: இந்த diet எல்லோருக்கும் பொருத்தமானது எனச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு மனித உடலும் தனித்துவமானது. ஆக, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உணவு முறையே பொருந்தும். இது என் வழிமுறை மட்டுமே. (நானுமே தொடர்ந்தோ, முழுமையாகவோ, தீவிரமாகவோ இதைப் பின்பற்றியதில்லை. அவ்வப்போது, இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.) ஆக, அதிகபட்சம் இதை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளலாம். இதைப் பின்பற்றிப் பார்ப்பது பற்றி அவரவர் சுயபுத்தியின் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. நோய்
Comments
கடற்கரையில் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சி தானே நிஜ வரம்
காண்பவன் குழந்தை ஆனால்
கிளிஞ்சல்கள் போதுமே-Mu.Viswanathan
கவிதைகள் என்றாலே "ஐயையோ பைத்தியங்கள் பேனா நிப்பை பிடித்து எதையோ கிறுக்கியிருக்கும்கள்" என்று பயந்து ஓடிய நான் தேசாந்திரியில் வந்த கவிதைகளின் சிறப்பம்சத்தை உடனடியாக உணர்ந்து கொண்டேன். அந்த கவிதைகள் மிகவும் உட்கார்ந்து யோசித்து எழுதிய கவிதைகளாகவும் எனக்கு படவில்லை.
மேலே உள்ள உங்கள் கவிதையை பாருங்கள். படித்தவுடன் அது மனதில் நிற்கவில்லை. உடனே மறந்து போய்விடுகிறது. சுஜாதா ஒருமுறை "படித்தவுடன் மறந்து போய் விட்டால் அது நல்ல சிறுகதையே இல்லை" என்றார். உங்கள் கவிதையை அந்த வகையில் முத்திரை குத்தலாமா?
உங்களால் மு.விச்வனாதனின் மேலே உள்ள கவிதை போல் ஒன்றையாவாது எழுத முடியுமா?
அப்படி எழுதியிருந்தால் அதனுடைய லிங்க்கை தரவும்.d.
.post-body li{list-style: square inside;
color: css number of color here;}
.
.
சுஜாதாவை இப்படி தாறுமாறாக வாந்தி எடுத்துள்ளார் ஜே மொ.இதற்கு உங்களிடம் இருந்து மறுப்பை எதிர்ப்பார்க்கிறேன்!!இளைஞர்கள் சுஜாதா படிப்பதில்லையாம்!!ஆமா எல்லாரும் இவருடைய கொற்றவையை கையில் வைத்து கொண்டுதான் திரிகின்றனர் போல!!