இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.) Disclaimer: இந்த diet எல்லோருக்கும் பொருத்தமானது எனச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு மனித உடலும் தனித்துவமானது. ஆக, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உணவு முறையே பொருந்தும். இது என் வழிமுறை மட்டுமே. (நானுமே தொடர்ந்தோ, முழுமையாகவோ, தீவிரமாகவோ இதைப் பின்பற்றியதில்லை. அவ்வப்போது, இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.) ஆக, அதிகபட்சம் இதை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளலாம். இதைப் பின்பற்றிப் பார்ப்பது பற்றி அவரவர் சுயபுத்தியின் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. நோய்
Comments
//தமிழில் 5000 பேர் பதிவெழுதுகிறார்கள். அவர்களில் கிட்டதட்ட முந்நூற்று சொச்சம் பேரை மட்டுமே நான் தேர்ந்தெடுத்துப் படிக்கிறேன். அதனால் இதை முழுமையான அல்லது நிரந்தரமான பட்டியலாக கொள்ள இயலாது.//
அவ்வப்போது நாம் நம்மை பற்றி என்ன நினைக்கின்றோம் என்பதை நம்மை அறியாது சில வார்த்தைகள் வழியாக வெளியிட்டு விடுவோம். மேலே உள்ளதில் நீங்கள் மட்டுமே என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்தினீர்கள்? அது ரைட்டர் ஜெயகாந்தன் சொன்னது போல் அடக்கம் போன்றதொரு அகம்பாவம். என்னோடு படித்த ஒருவன் பெங்களூரில் இன்று ஹச்.சி.எல்லில் மென்பொருள் துறையில் இருக்கிறான். அவனை எதேச்சையாக நான் சந்திக்க என்னடா செய்ற என்றேன். அதற்கு அவன்,"பெங்களூர்ல ஹச்.சி.எல் ங்குற கம்பெனியில் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்" என்று சொன்னான். ஹச்.சி.எல் என்ற கம்பெனியை நாடே அறியும். ஆனால் அவனோ ஒன்னும் தெரியாதவனைப் போல் ஹச்.சி.எல் என்ற கம்பெனியில் என்று பேசுகிறான். அதுதான் அடக்கம் போன்றதொரு அகம்பாவம்.
எனக்கு நீங்கள் பயன்படுத்தும் அடியேன் என்பதற்கும் சுஜாதா பயன்படுத்திய அடியேனுக்கும் வித்தியாசம் உண்டு என்றே தோன்றுகிறது. சுஜாதவின் அடியேனில் உண்மையாகவே ஒரு பணிவு தெரிந்தது. உங்களது அடியேனில் அடக்கம் போன்றதொரு அகம்பாவமே தெரிகிறது...d...