அம்ருதா - நவம்பர் 2011 இதழில்

அம்ருதா நவம்பர் 2011 இதழில் இவ்வருட‌ இயற்பியல் நொபேல் குறித்த எனது விரிவான 5 பக்க கட்டுரை 'பெருங்கூத்து' (இது பிரமிள் கவிதையின் தலைப்பு!) வெளியாகியுள்ளது. கட்டுரைக்கு நான் வைத்த தலைப்பு 'அசையாச் சிவத்தினிலே'.



காலச்சுவடு, உயிர்மை போல் தமிழில் ஒரு முக்கியச் சிற்றேடு அம்ருதா. திலகவதி ஐபிஎஸ் இதன் சிறப்பாசிரியர். தவிர, ஜெயமோகன் வாக்குப்படி தமிழில் தொடர்ந்து வெளிவரும் நான்கு ந‌டுத்தர இலக்கியச் சிற்றிதழ்களுள் ஒன்று அம்ருதா.

அதெல்லாம் இருக்கட்டும், அம்ருதா இதழ் ஈரோடு மாநகரில் எங்கே கிடைக்கிறது? தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்