கட்டவிழும் மனித மனம்

நடுநிசி நாய்கள் - பசுவய்யா என்ற பெயரில் சுந்தர ராமசாமி எழுதிய ஒரு கவிதையின் (மற்றும் கவிதைத்தொகுதியின்) பெயர் இது. அந்தத் தலைப்பு இந்தப் படத்துக்கும், இது கொண்டு வர முயன்றிருக்கும் mood-க்கும் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. Metaphor!


மிக நேர்த்தியாக கோர்க்கப்பட்ட திரைக்கதையை மகாத் துல்லியமாக இயக்கியிருக்கிறார் கௌதம். ஒளிப்பதிவில் சில உச்சங்கள் நிகழ்ந்தேறி இருக்கின்றன. ஈரம் படத்திற்குப் பின் மனோஜ் பரம்ஹம்சாவுக்கு இது அடுத்த கட்டம் (விண்ணைத் தாண்டி வருவாயா படம் வழக்கமான feel-good ஒளிப்பதிவு மட்டுமே). காட்சிகளின் துரித‌ நகர்ச்சியில் பின்னணி இசை இல்லையென்பதே எங்கும் உறைப்பதில்லை. ஆண்டனியும் கவனிக்க வைக்கிறார்.

படத்தின் திரைக்கதை பற்றி ஒரு பத்தியேனும் பேசியே ஆக வேண்டும். திரைக்கதையில் சில குழப்பங்கள் இருக்கக்கூடும். ஆனால் உண்மையில் அவை யாவும் நுண்மையாகத் கட்டமைக்கப்பட்டவையே. அதாவது மனப்பிறழ்வுக்குள்ளான ஒருவனின் வாக்குமூலமே மொத்தத் திரைப்படமாக விரிகிறது என்பத‌னால் அவனது விவரிப்புகளில் ஒரு விதமான‌ ஒழுங்கற்ற முரண்களும், முழுமையற்ற தனமையும் இருப்பது இயல்பே. அவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது கட்டுக்கோப்பற்ற‌ ஆனால் திட்டமிடப்பட்ட‌ இத்திரைக்கதை.

த்ரில்லர் என்பதை ஓர் உத்தியாகப் பயன்படுத்தியிருந்தாலும் அடிப்படையில் இது ஓர் உளவியல் படம். இதன் அதீத தன்மைகள், அப்பட்ட உண்மைகள் சிலருக்கு அசூயை அல்லது அச்சம் அல்லது அதிர்ச்சி ஊட்டுவதாக‌ இருக்கலாம் - குறிப்பாக பெண்களுக்கு (பிவிஆர் அரங்கில் என்னருகில் அமர்ந்திருந்த பெண் - அவளும் சுகன்யா போல் பிங்க் டீஷர்ட் - படம் ஆர‌ம்பிக்கையில் நடுங்கியபடி தன் பக்கத்திலிருந்த காதலன் அல்லது கணவனின் புஜம் பிடித்தணைத்துக் கொண்டவள் படம் முடியும் வரை இம்மியளவும் விலகினாளில்லை - இடைவேளையின் மந்த விளக்கொளியிலும்). இது விரும்பத்தகா பக்கவிளைவல்ல - உண்மையில் படம் உத்தேசிப்பதே இந்த பய‌ உணர்வினைத் தான்.

கொலை செய்யும் முறை, ஆரம்ப மும்பை காட்சிகள் போன்றவற்றில் கொஞ்சமாய் ஒரு வித நாடகத்தனம் எட்டிப்பார்த்தாலும் இப்‌படம் ஒட்டுமொத்தமாய் நல்லதொரு எதார்த்த படைப்பாகவே நிற்கிறது. தந்தையே தன் மகனை பாலியல் ரீதியாகப் பய‌ன்படுத்துவதைக் காட்டியிருக்கிறார் கௌதம். அது ஓர் அதிர்ச்சி. ஆனால் நிதர்சனம். கார்டியனான முப்பது வயதுப் பெண்ணுக்கும் பதிமூன்று வயது மைனர் சிறுவனுக்கும் இடையே நிகழும் முதல் உறவைக் காட்டும் அந்தப் பத்து நிமிடக் காட்சி தான் இந்தப்படத்தில் வெளிப்பட்டிருக்கும் உச்சம். மிக நுணுக்கமாக ஓர் உக்கிரமான‌ கவிதை போல் அதைப் பதிவு செய்திருக்கிறார் கௌதம். அதிலும் அக்காட்சியில் வரும் ஸ்வப்னாவின் முகபாவங்கள் - It's a divine art!

ஆண் குழந்தைகளும் கணிசமான அளவில் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதே படத்தின் நாதம் என்பதாக இறுதியில் சொல்கிறார்கள். ஆனால்அது விருமாண்டி படத்தின் இறுதியில் வரும் தூக்கு தண்டனைக்கு எதிரான பிரச்சாரம் போல, வாரணம் ஆயிரம் படத்தில் மது, புகைக்கு எதிராக சொல்லப்படும் நீதி போல் ஒட்டாமல் நிற்கிறது.

ந.நி.நா. முழுக்க பெண்கள் மயம். அவர்களுள் ஸ்வப்னா ஆப்ரஹாம் தான் show-stopper. பாடகிகள் மேல் அப்படி என்ன தான் வாஞ்சையோ கௌதம் மேனனுக்கு - (பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஆன்ட்ரியா ஜெரெமையா போல்) இந்த‌ப் படத்திலும் எங்கேயோ அல்லேலூயா பாடிக்கொண்டிருந்த ஸ்வப்னாவை அழைத்து நடிக்கச் செய்திருக்கிறார். சமீரா ரெட்டியும் நன்றாக நடித்திருக்கிறார். இறுதியில் மனநலம் பாதித்த பெண்ணாக வரும் சமந்தாவும், கனாக்காணும் காலங்கள் சீரியல் புகழ் ப்ரியாவும் தேறுகிறார்கள்.

ஆனால் இவர்கள் எல்லோர் நடிப்பையும் புறந்தள்ளி விட்டு அதகளம் பண்ணியிருப்பது பிரதானப் பாத்திரமேற்றிருக்கும் வீரா (முழுப்பெயர் வீரபாகு!) - முக‌பாவம், உடல்மொழி, குரல் என அனைத்திலும் மிரட்டியிருக்கிறார். ஏஸிபியாக வரும் தேவாவும் ஓக்கே தான்.

குறைகளும் இருக்கவே செய்கின்றன. முதன்மையாய் மூலக்‌கதை மற்றும் காட்சிகள். ஏற்கனவே பல படங்களில் நாம் பார்த்தவையே. குறைந்தபட்சம் பத்துப் படங்களேனும் நினைவுக்கு வருகின்றன. பாலியல் சுரண்டலால் இளவயதில் பாதிக்கப்படுதல் - சிவப்பு ரோஜாக்கள், மூடுபனி. தான் விரும்பும் பெண்ணைக்கடத்தி வந்து வற்புறுத்துதல் - குணா, காதல் கொண்டேன். பெண்கள் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் புறச்சூழ்நிலை - செல்லமே, சத்தம் போடாதே. கடத்திய பெண்களைக்கொடூரமாய்க்கொலை செய்தல் - வேட்டையாடு விளையாடு, மன்மதன். ப‌ன்னாளுமை மனச்சிதைவுக் காட்சிகள் - அந்நியன், சந்திரமுகி. இறந்தவர் உயிருடனிருப்பதாய்ப்பாவித்தல் - கண்களால் கைது செய், குடைக்குள் மழை.

இப்படத்தின் முக்கியமான விஷயம் இதில் காட்சிகளாகியிருக்கும் மனப்பிறழ்வு. தமிழின் வேறெந்த படத்திலும் இதுவரை காட்டப்பட்டிருக்கும் இது தொடர்பான காட்சிகளை விட இப்படத்தினுடையவை வலுவானதாகவும், நேர்மையானதாகவும், உண்மைக்கு வெகு அருகில் இருப்பதாகவும் படுகிறது. அதே போல் இப்படத்தில் சில கலாசார மதிப்பீடுகள் கலைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் படத்தைப் பார்க்காதீர் என சில அரைவேக்காடுகள் குதிக்கவும் கூடும். ஆனால் நிஜத்தில் சமர் என்ற வீரா என்ற அந்தக் கதாபாத்திரத்தை நீங்கள் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள நேரான மனமும், கூரான புத்தியும் தேவை. அப்படி விளங்கிக் கொண்டவரெனில் உங்களால் இச்சமூகத்திற்கு எந்தத் தீங்கும் இல்லை என்று அர்த்தம். இல்லையெனில் நீங்களும் ஒரு சமர் / வீரா தான். உறங்கும் மிருக‌ம்!‌

இப்படத்தின் விமர்சனம் இத்தோடு முடிகிறது. இனி கௌதம் மேனன் என்ற‌ இயக்குநரின் ஸ்தானத்தை இந்தப்படம் எப்படி மாற்றியமைக்கிறது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாம்.

மின்னலே, விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற குப்பைகளைக் கடாசி விடுங்கள். பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் போன்ற குறைப்பிரசவங்களையும் விட்டு விடலாம். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு இந்த இரண்டு படங்கள் மட்டும் தான் கௌதமின் முக்கியமான படைப்புகள். கௌதம் சந்தேகமேயில்லாமல் perfect executor. ஆனால் மிஷ்கின் போன்றவர்களிடம் காணக்கிடைக்கும் திரைக்கதை நுட்பம் என்பது கௌதமுக்கு வாய்க்காமலே இருந்தது. இந்தப் படம் அக்குறையைத் தீர்த்திருக்கிறது.

நடுநிசி நாய்கள் - கௌதம் மேனனின் முதல் படம்.

Comments

Vinayaga Om said…
Here the review writer's taste is different -
மின்னலே, விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற குப்பைகளைக்
பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் போன்ற குறைப்பிரசவ
காக்க காக்க, வேட்டையாடு விளையாடு இந்த இரண்டு படங்கள் மட்டும் தான் கௌதமின் முக்கியமான படைப்புகள்
-
So you support only movies with violence?? you rate a movie higher according to its brutal violence.!
and Mysskin? Yudham Sei? Nandalala? Mysskin cannot' present a story as well as Gautham.
Anyway Nadunisi Naaygal is a very different attempt, and need to appreciate. I am a person who rate VTV, VA and VV as the be Gautham Menon movie till date
Rafeek said…
"தந்தையே தன் மகனை பாலியல் ரீதியாகப் பய‌ன்படுத்துவதைக் காட்டியிருக்கிறார் கௌதம். அது ஓர் அதிர்ச்சி. ஆனால் நிதர்சனம்." இது உங்க ஊர்ல நிதர்சனமோ? போயாங்க..!! நாலு விமர்சனம் படத்திற்கு எதிர்மறையா வந்துட்டா..உடனே நாம ஆதரித்து பதிவிட வேண்டும்..! புல்லரிக்குது.
vijay said…
boss,
Gautam is one of the rare breed (other one is selva raghavan) in the current league who can connect with audience.He is not a one time winner like Sasikumar and Ameer. His versatility with different themes and brilliance in narration will make him rule tamil cinema atleast for the next 10 years.
Anonymous said…
இத,இத,இதத்தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்,
"CUNT கார்த்திகேயன்"!

Vinayaga Om ,Rafeek கவனத்திற்கு:
CSK பெரும் ஞானி இல்லை; வெறும் யோனி..
இதில் மூத்திரம் வருகிறதே என ஆத்திரப்பட்டு பயன் இல்லை!
viki said…
என்னையா இது?காக்க காக்க The untouchables இன் அட்ட காப்பி.நீங்க கௌதம புகழ்ந்தா ஒன்னு வெளங்குது.ஆங்கில படங்கள் பார்பதில்லைன்னு .போய் பாருங்கப்பு.வெறும் தமிழ் படம் பாத்தா இவனுங்க வண்ட வாளம் தெரியாது.சுரா வின் ஆவி கௌதமை தாக்கதிருப்பதற்கு வாய்ப்பு கம்மி.
இது மொக்க படம்.Psycho 1960 படத்த பாரு.அந்த பட நாயகனின் உடல்மொழிகள இவன் படம் பூரா வெளிபடுத்தி மொக்க போடுறான்/அதனால இவன் ஹிட்ச்காக் ஆயிர முடியாது .மொதல்ல கௌதம் தமிழ் பேச எழுத கத்துக்கட்டும்.அப்புறம் படம் எடுப்பது பத்தி யோசிக்கலாம்.ஹிட்ச்காக் மாதிரி இவன் சுட்டுபோட்டாலும் வர முடியாது.இவன் பட கதாபாத்திரங்கள் ஸ்டீரியோ டைப்."வாடா ங்க...தா" என்ற வார்த்தையை பயன்படுத்தும் வில்லன்கள் தான் இவன் படத்தில் வரும்.என்ன கொடும சரவணன்.
******************8
மேலும் இத தயவு செஞ்சு படி .நன்றி
http://www.karundhel.com/2011/02/2011.html
Anonymous said…
CSK பெரும் ஞானி இல்லை; வெறும் யோனி..
இதில் மூத்திரம் வருகிறதே என ஆத்திரப்பட்டு பயன் இல்லை!//////
***********
*********
நெத்தியடி.கௌதம் எல்லாம் ஒரு டைரக்டரா?நீ இங்கிலீஷ் படமே பாப்பதில்லைன்னு தெளிவா தெரியிது!
த்ரில்லர் எப்படி இருக்கணும்னு தெரியணும்னா psycho 1960 & Red Dragon 2002 பாரு.சும்மா ஜால்ரா போடாத CSK
கவுண்டமணி said…
அட்ரா அட்ரா இந்த அரமன்டையன் பஞ்சுமுட்டாய் தலையன் கௌதம மொதல்ல அடிங்கடா.இந்த கொசுதொல்ல தாங்கலடா நாராயணா.இவன் படத்துல வர்ற பிச்சைகாரன் கூட "give me one rupee" ன்னு இங்க்லீசுலதான் பிச்ச கேப்பான்.இவன் பெரிய தொரையாம்.அப்போ இந்த அர மண்டையன் இங்கிலாந்துல போய் படம் எடுக்கட்டும்.இவன் போன்ற சீனு தாங்கலடா சாமி.அந்த பணிரத்னம் தொல்ல போறாதுன்னு இவன் வேற.
Anonymous said…
//குறைகளும் இருக்கவே செய்கின்றன. முதன்மையாய் மூலக்‌கதை மற்றும் காட்சிகள். ஏற்கனவே பல படங்களில் நாம் பார்த்தவையே. குறைந்தபட்சம் பத்துப் படங்களேனும் நினைவுக்கு வருகின்றன. பாலியல் சுரண்டலால் இளவயதில் பாதிக்கப்படுதல் - சிவப்பு ரோஜாக்கள், மூடுபனி. தான் விரும்பும் பெண்ணைக்கடத்தி வந்து வற்புறுத்துதல் - குணா, காதல் கொண்டேன். பெண்கள் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் புறச்சூழ்நிலை - செல்லமே, சத்தம் போடாதே. கடத்திய பெண்களைக்கொடூரமாய்க்கொலை செய்தல் - வேட்டையாடு விளையாடு, மன்மதன். ப‌ன்னாளுமை மனச்சிதைவுக் காட்சிகள் - அந்நியன், சந்திரமுகி. இறந்தவர் உயிருடனிருப்பதாய்ப்பாவித்தல் - கண்களால் கைது செய், குடைக்குள் மழை.//
this is the ultimate truth about the movie....i dont know how you are appreciating this movie
Anonymous said…
I can see Tamil cinema dabbling with Pornography pretty soon,
thanks to idiots and selfish people like this Director!
Anonymous said…
மேல இங்க்ளிபீசுல கமன்ட் போட்ரவனுங்களா! அதென்னடா CSK தமிழ்லதான எழுதியிருக்கான்?அப்புறமென்ன தமிழ்ல கமன்ட் போட வேண்டியதுதான!ஒங்ககிட்ட யாராவது இங்க்லீசுல பேசுனா நீ தமிழ்ல பதில் சொல்லுவியா?ஒங்கள மாதிரி பீட்டர் ஆளுகலால்தான் கௌதம் போன்ற அர மண்டை நாய்கள 99% ஆங்கில வசனம் வக்கிறான் படத்துல.திருந்துங்கடா.பொண்ணுங்க மாதிரி பந்தா பண்ணாதீங்க.
Mrun Krita Blaze said…
நம் மக்களுக்கு உலக திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பும், அறிவும் ஏறக்குறைய இல்லை. ஒரு நல்ல மசாலா படத்தை இனம் காண தெரியாதவர்கள். அதிர்ச்சியாக நல்ல படங்களை அன்று முதல் இன்று வரை ஆதரித்து வந்துள்ளனர். நம்மிடம் இப்பொழுது உள்ள படைப்பாளி 'பாலா' மட்டுமே. இவரையும், அமீரையும் நம் இந்திய மண்ணுக்கு அன்று முதல் இன்று வரை 'Oscar வாங்கி தரும் ஒரே நடிகன்' என்று மாயையில் வாழும் 'ஒலக நாயகன்' உலக திரைப்படங்கள் பார்க்க சொல்லி 'சாக்கடையில்' தள்ள பார்க்கிறார்.

இந்த ஒலக நாயகன், மணிரத்னம், வாசுதேவ மேனன், முருகதாஸ், இன்னும் சிலர் 'DVD' இயக்குனர்களே. இந்த உண்மைய சொல்லகூட மாட்டார்கள். இதில் முருகதாஸ் தவிர மற்றவர்கள் 'ஆங்கில மோகம்' கொண்டவர்கள். அது ஒரு மொழி; அறிவு அல்ல என்ற 'அடிப்படை' கூட தெரியாதவர்கள். 'இன்றைய இளம் பெண்களிடம் உண்மை இல்லை. Info இருக்கிறது அவர்களிடம்; ஆனால் analyze செய்யும் தகுதி இல்லை. வெட்டி பந்தா நிறையவே இருக்கிறது. ஆங்கிலத்தில் 'மொழி கொலை' செய்தாவது அதில்தான் பேசுவார்கள்.' இது போல நம் திரை வணிகத்தில் 'இயக்குனர்கள் என்ற பசு மாட்டு தோள் போத்தியவர்களே' உள்ளனர். இவர்களுக்கு 'ஆமா சாமி' போடா பத்திரிகைகளும், சில Blogger-களும், தொலைக்காட்சி Channel-களும் உள்ளனர். அது சரி 'திருடர்களுக்குள் ஒரு புரிந்துணர்வு.'

'Munna Bhai'-ன் தழுவலே 'வசூல்ராஜா' என்றும், A Wednesday-ன் தழுவலே 'உன்னை போல் ஒருவன்' என்றும் 'வார்த்தையில்' ஒத்துகொள்ள கூட முடியாதவர்கள் எப்படி நல்ல படம் தர முடியும்? உள் நாட்டு தழுவலையே 'இல்லை' என்று பொயுரைப்பவர்கள் எப்படி 'உலக தழுவல்களை' ஒத்துகொள்வார்கள்?

எளிய உண்மை - இந்த 'முட்டாள்கள்' நம்மை 'முட்டாளாக்க' திரைப்படம் எடுக்கிறார்கள்.

இந்த உண்மையை நாம் மற்றவர்கள் போல் இல்லாமல் 'முகத்திற்கு நேராக' சொல்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. நம் உண்மைகள் மூலம் அவர்கள் பொய்யாக உருவாக்கிய 'அவர்களை பற்றிய எல்லாம் நானே' என்ற பிம்பம் தவிடுபொடியாவது தாங்க முடியவில்லை.

ஒரே வார்த்தை - 'போங்கடாங்...'
vijay said…
Mrun Krita Blaze,
"நம் மக்களுக்கு உலக திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பும், அறிவும் ஏறக்குறைய இல்லை" is the most absurd observation of a society.
Can I call you as ignorant/idiot just because you are not fluent in German, French and Spanish? Your opening quote is as stupid as the question that I have raised above.
If you can explain me why you haven't learnt the above languages, I can give you the answer why most of the tamil movie buffs haven't watched international movies.
Mrun Krita Blaze said…
'நம் மக்களுக்கு உலக திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பும், அறிவும் ஏறக்குறைய இல்லை.' இதில் உள்ள அர்த்தம் என்ன என்று கூட தெரியாமல் என்னிடம் விளக்கம் கேட்கிறார் அந்த Magnifier.

முதலில் 'ஏறக்குறைய' என்ற சொல்லாடலை உள் வாங்கவும். இப்பொழுது அந்த முழு சொற்றுடரும் சொல்ல வரும் விடயம் என்ன என்று பாப்போம்.

நம்மில் எத்தனை சதவிகித மக்கள் உலக திரைப்படங்கள் பார்கிறார்கள்? (இப்பொழுதாவது 'ஏறக்குறைய' என்ற சொல் உபயோகத்தின் அர்த்தம் புரிந்ததா?) நம் மக்கள் உலக திரைப்படங்களை நமது Regional மொழி திரைபடங்கள் பார்ப்பது போல் சல்லிசாக (இங்கு நான் சொல்ல வருவது 'பணத்தை' அல்ல. வாய்ப்புகளை மற்றும் பார்க்கும் மக்களின் எண்ணிக்கையை.) பார்த்தால் இந்த 'கோர விபத்துகளை' கண்டுகொள்ள உதவும். இந்த 'போலிகளை' கொண்டாட மாட்டார்கள். இங்கு நான் 'கோர விபத்துகள்' என்று சொல்வது 'வேற்று மொழி தழுவல்களை.'

'நீல வானம்' பாடல் (மன்மதன் அம்பு) படமாக்கிய விதம் 'எங்கு, யாரிடம் திருடியது' என்று நான் முன்னமே சொல்லி இருக்கிறேன். 'நந்தலாலா' திரைக்கு வரும் முன்பே 'Kikujiro'ன் தழுவல் என்று நாங்கள் கூவினோம். (ஆனாலும் நல்ல படமே.) மன்மதன் அம்பு, சித்திரம் பேசுதடி, காக்க காக்க, பச்சைகிளி முத்துசரம், யுத்தம் செய் போன்ற 'மற்றவர்கள்' கொண்டாடும் படங்களை 'நாங்கள்' எப்படி 'தழுவல்கள்' என அடையாளம் கண்டுகொண்டோம்? சித்திரம் பேசுதடி, காக்க காக்க தவிர மற்ற படங்களை கொண்டாடுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆகா இந்த விசயத்தில் கூட அவர்களிடம் ஒற்றுமை இல்லை. அல்லது 'உண்மையாகவே இவை மட்டமான படங்கள்' என்ற 'உண்மை' உரைத்திருக்கும்.

ஆக இதில் நான் எங்கே 'most absurd observation of a society?.

Tell you what, I ain't goot at any language that existin' under-the-sun. If you don't understand what am implyin' ain't my fault, but YOU ARE AT. I would like to tell you smthg what I wrote 'bout a month ago - never toss me descrete-facts, thus I go crazy. Try to understand the context, or/and throw ANALYZED-DATA at me. Never ever descrete-facts and your foolish perspectives as well. Adios..!

ஒரு தமிழ் விடயத்திருக்கு 'கோனார்' உரை போட நேர்ந்த 'பரிதாபத்தை' என்னவென்று சொல்வது.!?
vijay said…
blaze,
இன்னும் என்னக்கு அந்த சொற்றடரில் உடன்பாடு இல்லை,
"'நம் மக்களுக்கு உலக திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பும், அறிவும் ஏறக்குறைய இல்லை." = "நம்மில் எத்தனை சதவிகித மக்கள் உலக திரைப்படங்கள் பார்கிறார்கள்? "
படங்கள் என்பது பொழுது போக்கிர்க்காகவே பார்க்க படுபவை , வாய்ப்பு இருந்தாலும் ஒருவர் ஏன் உலக படங்களை பார்க்க வேண்டும் ? அது ரசனை சம்பந்தபட்டதுதானே? ஒரூ சாதாரண ரசிகன் படைபாளிக்கு நிகராக ஹோம் வொர்க் பண்ண வேண்டும் என்று எதிர் பார்ப்பது நியாயம் அல்ல. படைபாளியை திட்டுவது நியாயம் ஆனால் அதை வெற்றி படமாக ஆக்கும் ரசிகனை விமர்சனம் செய்வதில் எனக்கு கேள்விகள் எளவே செய்கிறது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் காப்பி அடிக்க பட்ட product அதனால் அதனை நாம் ஒதுக்கி வைத்து விட்டோமா?
Mrun Krita Blaze said…
Please stop tossin' me discrete-facts over and over. It's now evident that you ain't know the meanin' of 'Media/Medium.' Hence the term 'Mass Media' is collection of ALL MEDIA TECHNOLOGIES.

இரண்டு விஷயங்கள் பற்றி மட்டும் பாப்போம்:

~ படங்கள் என்பது பொழுது போக்கிற்காக பார்க்க படுபவை.

தயவுசெய்து discrete-facts தராதீங்க. Media என்பதன் அர்த்தம் தெரியாததின் விளைவே இத்தனை 'குப்பைகளுக்கும்' காரணம். Media பொழுது போக்கிற்காக என்று எந்த 'கூழ் முட்டை' சொன்னான்.?? மீண்டும் மேலே உள்ள ஆங்கில சொற்றொடரை படிக்கவும். இசை என்ற Medium மூலம் உலக புரட்சி செய்தானே Nesta Robert Marley (=Bob Marley), அதற்கு பெயர் என்ன விஜய் படங்கள் போன்ற 'வடு மாங்கா ஊருதுகோ, தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ'-வா?

உலக அரங்கில் பல விருதுகள், மரியாதைகள் நம் 'சிவாஜி' அவர்களுக்கு மறுக்க பட்டத்தின் காரணம் 'மிகை நடிப்பு' என்ற காரணமே. அதற்கு அவர்கள் தந்த விளக்கம் 'Media-வில் மிகை நடிப்பு கூடாது. அது நடிப்பு என்ற 'எண்ணம்' நமக்கு/ரசிகனுக்கு/பார்வையாளனுக்கு ஏற்படவே கூடாது' என்றனர். அவர் உண்மையாகவே நல்ல நடிகன். ஆனாலும் சில/பல மிகை நடிப்பு அவரிடம் இருந்தது.

இப்படியாக நாம் எல்லா விசயத்திலும் நமக்கு தெரிந்த 'அரைகுறையை' வைத்து கொண்டு 'குப்பைகளை' கொண்டாடி வருகிறோம். உங்களை போன்றோர் இருக்கும் வரை 'போலிகள்' வெற்றி பவனி வருவதை தடுக்க முடியாது. அருள்கூர்ந்து Pseudo-Intellectual மற்றும் discrete-facts -களை தவிர்த்து உரையாடவும்.

~ வாய்ப்பு இருந்தாலும் ஒருவர் ஏன் உலக படங்களை பார்க்க வேண்டும் ? அது ரசனை சம்பந்தபட்டதுதானே? சொல்வது சரி. ஆனால் 'உங்கள் குழுவினர்' ஒரு 'Mediocre' படைப்பை mediocre என்று சொல்ல ஏன் 'நேர்மை' இல்லை? மேலும் உலக படங்கள் பார்க்காத பொது 'இந்த பசு தோல் போர்தியவை' செய்யும் தில்லுமுல்லுகள் உங்களுக்கு தெரியாது. அவ்வமயம் நாங்கள் 'ஆதாரங்களுடன்' சொல்வதை மறுப்பதும், அந்த போலிகளை உயர்த்தி பிடிக்கும் 'உளவியல்' என்ன?

It's better don't come-up with Pseudo-intellectual and discrete-facts as well. I am sick of this monotonous-absurdity and I request you to put an end to this discrete-facts. You better try to GET REAL..!

I have no issues to call a spade a spade.
vijay said…
blaze,
I claimed "Movie as entertainment" not all the media technologies (Read over my statement again to verify this).Here is the entry from wikipedia (கூழ் முட்டை) "Film is considered to be an important art form, a source of popular entertainment and a powerful method for educating — or indoctrinating — citizens". It clearly say it's a source of entertainment.
You can't scare me just by throwing the words like "discretefacts, analyzed data" etc..I am really not bothered whether u go crazy,edgy or sick when someone asks you a question. You made a post and you are supposed to answer the alternate views/question/doubts over it.
You made a correlation between intelligence and film viewing habit without any statistical data to prove it. I'll ask you a question again
If I prefer to watch UnnaiPolOruvan or Wednesday, I am sure that you will recommend "Wednesday".
If I prefer to read Ramayanam, will you recommend me Kambaramayanam or ValmikiRamayanam why?
M K B said…
I believe YOU gotta read the same over and over. It never talks 'bout 'Entertaining' alone, but talks about 'a powerful method for educatin'.' Do you know the meanin' of Indoctrinatin'? - Here it is for you - 'a method to teach our people SYSTEMATICALLY to accept DOCTRINES (w/o criticism).' I believe you don't know the meanin' of 'Doctrine', too, do you ? You have got nothin' to worry 'bout as there are a million ways to find the meanin' of this word in this I-net era; if you live in this same era - you can locate the meanin' just a click away, the very way you got the statement to throw at me.

Here comes an ACE, Mr Pseudo-Intellectual.

Does it clearly say 'source of entertainin'?. More or less, films do fall under Media category; in view of this, it will not encourage any kind of Non-Sense stuffs.

Here comes a Boomerang, Mr Discrete-Facts.

'படங்கள் என்பது பொழுது போக்கிர்க்காகவே பார்க்க படுபவை.' Do you remember this statement which you wrote about a week ago? Are you capable of smell the mistake you committed in this statement? To serve this purpose much easier, I did a plain-sailin' thin' for you, Mr Vijay.

Here comes a Bang, Mr Vijay.

- No, I won't ask you to stop watchin' Ve, Na, Ai movies. Just carry-on.

- Jack, if you would like to read or readin' the book at the moment, I ain't game to ask you stop readin' Ramayanam. And if you can read Hindi, you can pick/choose your game b/w these two brides.

And it's all 'bout -

- ஒரு 'Mediocre' படைப்பை mediocre என்று சொல்ல ஏன் 'நேர்மை' இல்லை?

- நாங்கள் 'ஆதாரங்களுடன்' சொல்வதை மறுப்பதும், அந்த போலிகளை உயர்த்தி பிடிக்கும் 'உளவியல்' என்ன?

- நம் மக்கள் உலக திரைப்படங்களை நமது Regional மொழி திரைபடங்கள் பார்ப்பது போல் சல்லிசாக (இங்கு நான் சொல்ல வருவது 'பணத்தை' அல்ல. வாய்ப்புகளை மற்றும் பார்க்கும் மக்களின் எண்ணிக்கையை) பார்த்தால் இந்த 'கோர விபத்துகளை' கண்டுகொள்ள உதவும். இந்த 'போலிகளை' கொண்டாட மாட்டார்கள்.

I AM GONNA PUT AN END TO THIS BLAH-BLAH. Ready to set an example.

To ponder - - -

^ You can watch any (kind of (genre)) movie/s.

^ You can read any book.

^ You have rights go after any 'pose-like-a-movie-director/masquerade.' (No need to mention those names)

^ You have rights to worship those Notorious Personalities who tend to say 'I am the Alpha and the Omega as well.'

^ You are authorized to promote 'All-Those-Bad/Ugly-Movies.'
vijay said…
intelligent blaze,
I was waiting to see your pumped up intelligentsia about that powerful method of indoctrinating.(If "entertainment" alone is my concern, why should I paste the whole entry).I know for sure that you will enlighten me again about "indoctrinating". Wikipedia entry has "AND" in between entertainment and indoctrinating. It stresses entertainment before indoctrinating. Most of the world films doesn't entertain a common tamil audience (it includes me too) as it needs some kind of home work. If it can't entertain (or hold his attention for 1 to 2 hours),then the step to indoctrination fails.
This pseudo intellectual (one who asks questions) totally agrees with ponders posted by all-in-all intelligent (one who doesn't want to be questioned). Nobody has right to criticize other's taste or post any crappy correlation between two independent factors with out evidence.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்