பரத்தை கூற்று : கார்த்திக்

பரத்தை கூற்று வெளியீடு பற்றி நண்பர் கார்த்திக்கின் பதிவு இது:

*******

http://chummaaorublog.wordpress.com/2010/10/17/பரத்தை-கூற்று-–-புத்தக-வெ/

*******

Posted on October 17, 2010 at 11:42 am by Kaarthik Arul

பரத்தை கூற்று – புத்தக வெளியீட்டு நிகழ்வு

சரவண கார்த்திகேயன் (CSK) எனக்கு 2008-ல் ஆர்க்குட் மூலம் அறிமுகமானார். அறிமுகம் செய்தவர் திரு. சுஜாதா. விந்தையாக உள்ளதா? ஆம் சுஜாதாவின் முதலாம் ஆண்டு அஞ்சலிக்காக ஆர்க்குட் சுஜாதா கம்யூனிட்டியில் ஒரு பதிவிட்டேன். அதில் CSK-வின் பதிவும் இருந்தது. அவர்தான் சுஜாதா Community Owner. உடனே அவரது Profile-ஐப் பார்த்தேன். அதிலிருந்த அவரது வலைத்தள முகவரியைச் சொடுக்கி சில பதிவுகளை வாசித்தேன். மிகவும் ரசித்தேன், வியந்தேன். சுஜாதாவின் எழுத்துகள் போல இருந்ததே காரணம். உடனே அவருக்கு Friend Request கொடுத்தேன். அவரும் அதை accept செய்து நாங்கள் chat செய்தோம். அவர் மனைவி எங்கள் குடும்ப நண்பரின் மகள் மற்றும் என் சிறு வயது தோழி என்று தற்செயலாக தெரிய வந்தது. அதனால் அவருடன் மேலும் நெருக்கம் ஏற்பட்டது. அவர் வலைப்பூவை தொடர்ந்து வாசித்தேன். அவருடைய சில கருத்துகளில் எனக்கு முற்றிலும் உடன்பாடு இல்லையென்றாலும் அவரது எழுத்துகளும் தேர்ந்த நடையும் என்னைக் கவர்ந்தன.

CSK-வின் முதல் புத்தகமான சந்திரயானை இன்னும் படிக்கவில்லை என்று வருந்துகிறேன். இரண்டாம் புத்தகத்தின் தலைப்பே புருவம் உயர்த்த வைத்தது. “பரத்தை கூற்று” – இதுபோன்ற கவிதைத் தொகுப்பை வெளியிட சாரு நிவேதிதாதான் சரியான ஆள். மேலும் சாருவை அவரது வலைத்தளத்தில் மட்டுமே வாசித்துள்ளேன். அவரது புத்தகங்களைப் படித்ததில்லை, அவர் பேச்சையும் கேட்டதில்லை. சாருவை எனக்கு அவ்வளவாக பிடிக்காது என்றபோதிலும் அவர் எப்படித்தான் பேசுகிறார் என்பதைக் கேட்கவே இவ்விழாவைத் தவற விடக் கூடாது என்று சென்றேன்.

CSK-வின் உறவினர்கள் பலர் வந்திருந்தனர். அவர்களுள் பெண்களும் பதின்ம வயதுச் சிறுமிகளும் அடக்கம். அதனால் சாரு uneasy-ஆக உணர்ந்தார். சற்றே தயக்கத்துடன் தன் பேச்சைத் துவங்கினார். தான் எதையும் பாராட்டுவதில்லை என்றும் குறைகளைச் சுட்டிக்காட்டி படைப்பாளிக்கு உதவி செய்வதாக கூறினார். இங்கேயும் எந்திரனை விடவில்லை. ஷங்கரையும், ரஜினியையும் கமலையும் வாரினார். பிறகு வைரமுத்து. CSK தனது கவிதைத் தொகுப்பை ”கவிப்பேரரசு” வைரமுத்துவிற்கு அர்பணித்திருந்தார். அதற்குக் காரணம் பள்ளிப் பருவத்தில் அவருடைய கவிதை வைரமுத்துவால் முத்திரைக் கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு குங்குமத்தில் வெளியானது. சாருவுக்கு அந்த அடைமொழி பிடிக்காமல் நிலபிரபுத்துவம், மன்னராட்சி, சமத்துவம் என்றெல்லாம் கதைத்தார். சாருவின் எழுத்துகளைப் போல் அவரது பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இல்லை. சராசரிதான். He distracts from a topic and travels to many other topics. சாருவின் பேச்சிலிருந்து சில இங்கே (Courtesy : Tweets of @writercsk)

ஒரு பரத்தையின் உண்மையான உணர்வுகளை அந்த வலியை கவிதைல கொண்டு வர முடியுமான்னே சந்தேகமா இருக்கு.வேசியின் வலியை அப்படியே உண்மையாகச் சொல்லி கவிதையோ, திரைப்படமோ எடுத்தால் இங்கே வெளியிட முடியாது. இந்தத் தலைப்பில் எழுதுவதற்கு தைரியம் வேண்டும். அதற்கு முதலில் பாராட்டுகிறேன்.

இதுல எல்லாக் கவிதையும் Quotable Quotes.. ஆனா கவிதையா? நல்ல கவிதைங்கிற‌து டைனமைட் மாதிரி. அது சுலபமா வராது. அதை எழுத பிரசவ வேதனை அடையணும். பரத்தை கூற்று தொகுப்பில் இருப்பவை கவிதை என்ற நிலையை அடையவில்லை.நல்ல கவிதை எழுதுவது மிகக்கடினம். அதனாலேயே நல்ல க‌விஞர்கள் குறைவு. தமிழில் நல்ல் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் குறைவாகவே நல்ல கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள்.

எல்லோரும் கூப்பிட்டதுக்காக‌ ஆஹா ஓஹோன்னு புகழந்துட்டு போயிடுவாங்க. நான் அப்படி செய்ய விரும்பலை. கவிதை நல்லாயில்லைன்னு சொல்லி நான் இவருக்கு நல்லது தான் செய்யறேன்.. எல்லோரும் உண்மை சொல்ல மாட்டாங்க.

தான் பேசிய ஒரு மணி நேரத்தில் அதிகபட்சம் 15 நிமிடங்கள்தான் பரத்தை கூற்று பற்றிப் பேசியிருப்பார். மற்றவர்களைத் தாக்கிப் பேசுவதில்தான் அதிக ஆர்வமாக இருந்தார்.

ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டவர் இப்படி விமர்சகராக மாறி அப்படைப்பாளியை “ஏண்டா இவரைக் கூப்பிட்டோம்” என்று எண்ணும்படி செய்துவிட்டார். எல்லாவற்றிற்கும் மேல் பரத்தைகள் இப்படி அவர்களது வலியினை மறந்து கவி பாட மாட்டார்கள் என்றும் பிதற்றினார். கவிதைகளில் லாஜிக் பார்க்கும் எழுத்தாளரை என்னவென்று சொல்வது. அவர் மேல் மிகவும் கொஞ்சமாக ஒட்டியிருந்த ஈடுபாட்டையும் சுத்தமாக துடைத்தெறிந்து விட்டேன். ஆனாலும் ஒரு விதத்தில் அவரைப் பிடித்திருந்தது. தான் ஒரு காலத்தில் “Male Prostitute ” ஆக இருந்ததையும் அதைப் பற்றித்தான் இப்போது புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அது உண்மையோ பொய்யோ, அப்படிச் சொல்வதற்கும் ஒரு ‘கெத்து’ வேண்டும்.

“விரல் தொடுகிறாய்
இதழ் தொடுகிறாய்
இடை தொடுகிறாய்
முலை தொடுகிறாய்
பிருஷ்டம் தொடுகிறாய்
யோனி தொடுகிறாய்
எவனும் மனசு தொட்டதில்லை!”
என்ற கவிதையை மேற்கோள் காட்டிப் பேசினார்.

‘குழந்தைகள் காதுகளைப் பொத்திக் கொள்ளுங்கள்’ என சொல்லிவிட்டு,
கண்களும் காம்புகளும்
பெரிதாக இருக்க வேண்டும்
உதடுகளும் பிளவுகளும்
சிறிதாக இருக்க வேண்டும்
நேயர் விருப்பம்

என்ற கவிதை படித்தார். இடையே நல்ல கவிதைக்கு உதாரணமாய் ஒரு கனடா கவிஞரின் கவிதையை தமிழில் வாசித்தார்.

இறுதியில் CSK தனது நன்றியுரையை ஒரு Paper பார்த்துப் படித்தார். ஒப்பித்தது போலிருந்தது. அடுத்த முறை அதைத் தவிர்த்தல் நலம்!
http://www.writercsk.com/2010/10/blog-post_17.html

கவிதைகளை விமர்சிக்கும் தகுதி எனக்கு இல்லை. பரத்தைக் கூற்று விலைமகளிரின் கதறல்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருக்கவில்லை. ‘அரங்கேற்றம் பிரமிளா’ போலின்றி, ‘தப்புத்தாளங்கள் சரிதா’ போல் எள்ளலும் பரிகாசமும் செய்கின்றனர் இப்பரத்தையர்கள். தர்ம பத்தினியிடம் தம்மைச் சிலாகிக்கச் சொல்கின்றனர், தம் யோனிகளுக்குக் காப்பீடு கேட்கின்றனர், கடன் வைத்தால் மனைவியுடன் செல்கையில் வந்து வசூலிப்போம் என்று எச்சரிக்கை செய்கின்றனர்,

பல கவிதைகளை எனக்குப் பிடித்திருந்தாலும், அவற்றுள் சில:

இருபதாண்டு நெடிய
பரத்தைமைக்குப் பின்பும்
புடவையுடுத்துகையில்
மாராப்பைச் சரிசெய்யும்
விரல்களின் அனிச்சை!
பெண்களுக்கே உரித்தான நாணத்தை ஓர் ஆண்மகன் வெளிப்படுத்துவது ஆச்சரியம் அளிக்கிறது.

உனக்கது களிப்புருப்பின் உச்சங்கள்
எனக்கோ கழிப்புருப்பின் எச்சங்கள்
நான் சகித்துப் புணர்வது உன் பணம்
நீ சுகிக்கப்புனர்வதோ என் பிணம்
இக்கவிதை மூலம் வேசிகளின் வேதனைகளை வெளிப்படுத்துகிறார்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். “கலிகால ராமன்கள்” மற்றும் “பெய்யெனப் பெய்யும் மழை” கவிதைகளும் கவர்ந்தன.

வாத்ஸ்யாயனர் பற்றிய கவிதையில் எனக்கு உடன்பாடில்லை. அது தங்களையும் சந்தேகப் பட வைக்கிறது.

“என் போலுருத்தியிடம் போகாமல்
நிச்சயம் எழுதியிருக்க முடியாது
சரவண கார்த்திகேயன் – பரத்தை கூற்றை”
என்றால் ஒப்புக்கொள்வாரா??

இரவு முழுவதும் இருமுறை எல்லாக் கவிதைகளையும் வாசித்துவிட்டு இப்போது நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.

P.S : சாருவுக்கு பதில் லீனா மணிமேகலையை அழைத்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்