படித்தது / பிடித்தது - 52

பூட்டிய வீட்டினுள் அலையும் தனிமை

பூட்டிய வீட்டினுள்
மெல்ல மெல்ல
உருவம் பெற்று அறை அறையாய்
அலைய தொடங்குகிறது
வீட்டின் தனிமை
விட்டெறிந்த காலுறையின்
நெடி சுவாசித்து
கழிவறையின் மூத்திர
நாற்றம் நுகர்ந்து
நாள்முழுதும் வலம் வந்த அது
பின்னிரவில் திரும்பும்
என் கரம்பற்றி
அமர்த்தி சொல்ல ஆரம்பிக்கிறது
மதியம் ஜன்னல்கண்ணாடிக் கொத்தி
அதனுடன் பேசிச் சென்ற
சிட்டுக்குருவி ஒன்றின் கதையை!

- ப்ரியன்

நன்றி: ப்ரியன் கவிதைகள்

Comments

Popular posts from this blog

காலோஸ்மி [சிறுகதை]

இறுதி இரவு [சிறுகதை]

எழுத்தாளன் அரசியல் பேசலாமா?